Wednesday, April 30, 2008

`ஏர்கண்டிஷன்' மிஷினில் தீ - நடிகை நமீதா இரவு முழுவதும் தூங்காமல் அவதி

நடிகை நமீதா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஆடம்பர பங்களாவில், வாடகைக்கு குடியிருந்து வருகிறார். அந்த வீட்டில் நமீதாவும், வேலைக்காரர்களும் மட்டுமே வசித்து வருகிறார்கள். நமீதாவின் தாய்-தந்தை மற்றும் உறவினர்கள், சொந்த ஊரான குஜராத்தில் வசிக்கிறார்கள்.

நமீதா தனது பாதுகாப்புக்காக, ராட்சத உயரத்தில் மூன்று வெளிநாட்டு நாய்களை வளர்க்கிறார். இவை தவிர, வீட்டு வாசலில் கூர்க்காவும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பார்.

நமீதா, காலையில் படப்பிடிப்புக்கு சென்றால், மாலையில்தான் வீடு திரும்புவார். அவர் இப்போது, `இந்திர விழா' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படப்பிடிப்பு முடிந்து, இரவு 8 மணி அளவில் வீடு திரும்பிய நமீதா, படுக்கை அறையில் உள்ள `ஏர்கண்டிஷன்' மிஷினை `ஆன்' செய்தார். சீராக ஓடிக்கொண்டிருந்த `ஏர்கண்டிஷன்' மிஷினில், திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது. படுக்கை அறை முழுவதும் ஒரே புகையாக இருந்தது.நமீதா, ``தீ...தீ...'' என்று அலற ஆரம்பித்தார். வேலைக்காரர்கள் ஓடிவந்து, மின்சார இணைப்பை முதலில் துண்டித்தார்கள்.

பின்னர் ஏர்கண்டிஷன் மிஷின் மீது தண்ணீரை கொட்டி, தீயை அணைத்தார்கள். அதிர்ஷ்டவசமாக, ஒரு பெரும் தீ விபத்தில் இருந்து நமீதா தப்பினார்

'ஏர்கண்டிஷன்' இல்லாததால், நமீதாவினால் தூங்க முடியவில்லை. இரவு முழுவதும் தூங்காமல் அவதிப்பட்டதாக, அவர் கூறினார்.

(நன்றி-தினத்தந்தி)

http://www.dailythanthi.com/article.asp?NewsID=409791&disdate=4/30/2008

IPL கிரிக்கெட் : மும்பை அணிக்கு முதல் வெற்றி.

IPL கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அ‌ணியை 7 ‌வி‌க்கெ‌ட் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் வீழ்த்தி மும்பை அணி முதல் வெற்றியை கண்டது. IPL 20 ஓவர் கிரிக்கெட்டில் 16-வது ஆட்டம் நேற்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி‌த் தலைவ‌ர் கங்கூலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மெக்கல்லமும், கங்கூலியும் தொடக்க ஆட்டக்காரர்களாக கள‌ம் இற‌ங்‌கின‌ர். முதல் ஓவரிலேயே கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பொல்லாக் வீசிய 3-வது பந்தில் கங்குலி 4 ரன்‌னி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். இவரது ‌வி‌க்கெ‌ட்டை பொ‌ல்லா‌க் கை‌ப்ப‌ற்‌றினா‌ர். அடுத்த 2வது பந்தில் அதிரடி ‌வீர‌ர் மெக்கல்லம் 1 ரன்‌னி‌ல் பெ‌வி‌லிய‌ன் ‌திரு‌ம்‌பினா‌ர். இ‌ந்த ‌வி‌க்கெ‌ட்டையு‌ம் பொ‌ல்லா‌க் எல்.பி.டபிள்யூ முறை‌யி‌ல் கை‌ப்ப‌ற்‌றினா‌ர்.

‌பி‌ன்ன‌ர் வ‌ந்த தாஸ் (29), டேவிட் ஹஸ்ஸி (17) டி‌க்‌கி பா‌ண்டி‌ங் (19) ஆ‌கியோ‌ர் சொ‌ற் ர‌ன்‌க‌ளி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தன‌ர். விக்கெட்டுகள் ஒரு பக்கம் சரிந்தாலும், லட்சுமி ரத்தன் சுக்லா கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடியதால் கொல்கத்தா அணி 100 ரன்களை கடந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. சுக்லா 22 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்கள் விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
ஜெயசூ‌ர்யா அபாரமாக ப‌ந்து ‌‌வீ‌‌சி 3 ‌வி‌க்கெ‌ட்டுகளை கை‌ப்ப‌ற்‌றினா‌ர். இவ‌ர் 4 ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டனுடன் 14 ரன்கள் விட்டு கொடுத்தா‌ர்.

138 ர‌ன்க‌‌ள் எடு‌த்தா‌ல் வெ‌ற்‌றி எ‌ன்ற இல‌க்குடன‌் மு‌ம்பை அ‌ணி கள‌ம் இற‌ங்‌கியது. ஆனா‌ல் அ‌ந்த அ‌ணி‌க்கு அ‌தி‌ர்‌ச்‌சி கா‌த்‌திரு‌ந்தது. 25 ரன்களுக்குள் 3 பேர் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தன‌ர். 4-வது விக்கெட்டுக்கு உத்தப்பாவும், பிராவோவும் இணை சே‌ர்‌ந்து அ‌ணியை வெ‌ற்‌றி பாதை‌க்கு அழை‌த்து செ‌ன்றன‌ர். 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மு‌ம்பை அ‌ணி அபார வெற்றி பெற்றது.

பிராவோ 53 ப‌ந்துக‌ளி‌ல் 64 ரன்க‌ளுடனு‌ம், உத்தப்பா 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஆ‌ட்ட நாயகனாக ஜெயசூர்யா தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

தொடர்ச்சியாக 4 தோல்விக‌ள் அடைந்த மும்பை அணிக்கு இது முத‌ல் வெற்றியாகும். கொல்கத்தா அணி‌க்கு இது 2-வது தோல்வியாகும்.

பாசுமதி அரிசிக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு.

நம் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பாசுமதி அரிசிக்கு வரி விதிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.ஒரு டன் அரிசியை ஏற்றுமதி செய்ய இனி நூறு டாலர் வரி கட்ட வேண்டும்.

இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது கருத்தப்படுகிறது

மத்திய அரசு, பாசுமதி அல்லாத அரிசி ரகங்களை ஏற்றுமதி செய்யவும், பருப்புக்களை ஏற்றுமதி செய்யவும் ஏற்கனவே தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வியட்நாமில் ஒலிம்பிக் ஜோதி

பலத்த பாதுகாப்புக்கு இடையே ஒலிம்பிக் ஜோதி வியட்நாம் தலைநகர் வந்தடைந்தது. பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடைபெற்று வருகிறது.

ஒலிம்பிக் ஜோதி வடகொரியாவிலிருந்து இன்று வியட்நாம் வந்தடைந்தது. பலத்த பாதுகாப்புக்கு இடையே வியட்நாம் தலைநகரை ஒலிம்பிக் ஜோதி வந்தடைந்தது. ஏராளமான பொதுமக்கள், வியட்நாம் மற்றும் சீன தேசியக் கொடிகளை கையில் ஏந்தியபடி விமான நிலையத்தில் ஒலிம்பிக் ஜோதியை வரவேற்றனர். தலைநகரில் இன்று ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடைபெறுகிறது. ஒலிம்பிக் ஜோதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதை தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Monday, April 28, 2008

இஸ்ரேல் பீரங்கித்தாக்குதல் - 4 குழந்தைகள், தாய் பலி

இஸ்ரேலின் இரானுவத்தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் நான்கு பேரும் அவர்களுடைய தாயாரும் பலியானார்கள். இந்த சம்பவம் பாலஸ்தீனம் காஸா பகுதியில் நடந்தது. இந்த சம்பவத்தில் இறந்த குழந்தைகளின் வயது 15 மாதம், 3,4,6 வயது களாகும்.

ஆப்கானில் ஆஸ்திரேலியா வீரர் பலி


தலிபான் தீவிரவாதிகளுக்கும் ஆஸ்திரேலியா படையினருக்கும் நடைபெற்ற சண்டையில் ஆஸ்திரேலியா வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். அவருக்கு வயது 27. அவருக்கு மனைவியும், 5 மாத பெண் குழந்தையும், 5வருட ஆண்குழந்தையும் உண்டு.

அவருடைய குடும்பத்தினருக்கு பிரதமர் கெவின் ருத் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

2002 ஆப்கான் போரில் பங்கெடுத்த ஆஸ்திரேலியாவிற்கு இது ஐந்தாவது உயிரிழப்பாகும்.

ஹாக்கி: கேபிஎஸ் கில் நீக்கம்


இந்திய ஹாக்கி சம்மேளனம் கலைக்கப்பட்டது. அதன் தலைவர் பதவியிலிருந்து கே.பி.எஸ் கில் நீக்கப்பட்டார். இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் கல்மாடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கே.பி.எஸ் கில்லும் கலந்து கொண்டார்.

இப்பதவியில் அவர் தொடர்ந்து பதினைந்தாண்டுகள் இருந்துள்ளார். இதற்கு முன்பாக அவர் இந்திரா காந்தி படுகொலைகளின் போது பஞ்சாபில் காவல்துறை உயர் பொறுப்பில் இருந்து காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒழிக்க பாடுபட்டுள்ளார்.

சமீபத்தில் ஆஜ் தக் தொலைக்காட்சி விளையாட்டு வீரர் ஒருவருக்கு இந்திய ஹாக்கி அணியில் இடமளிக்கவேண்டுமென்று கோரி செகரட்டரி ஜோதி குமரனிடம் பேரம் பேசியது. பிறகு பணம் பெற்றுக்கொண்டு அவரை சீனியர் விளையாட்டு அணியில் சேர்த்துக்கொண்டார்.

ஊழல் புகாருக்குள்ளான ஜோதி குமரன் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இதுபற்றி சுரேஷ் கல்மாடி கருத்து தெரிவிக்கையில் 'ஜோதி குமரனிற்கு கிடைக்கப்பெற்ற அரிய சந்தர்ப்பம். இதனை பயன்படுத்தி தன்னை நிறுபராதி என்று நிறூபித்திருக்கலாம்' என்று தெரிவித்தார்.

2010ல் நடைபெற இருக்கும் உலக ஹாக்கி போட்டியில் இந்திய அணி திறமையை வளர்த்துக்கொள்ளாவிடில் தகுதியிழக்க நேரிடும் என்று சர்வதேச ஹாக்கி சம்மேளனம் எச்சரித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டித் தேர்வில் 1928 க்குப் பிறகு முதன்முறையாக இந்திய அணி ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சரப்ஜித்தை தூக்கிலிடக்கூடாது - நவாஸ் சரீப்


இந்தியாவைச்சார்ந்த சரப்ஜித் சிங் தூக்குத்தண்டனை கைதியாக பாக்கிஸ்தானில் உள்ளார். தூக்கிலடப்படுவதற்கான காலக்கெடு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் சரீப் இதுபற்றி கூறுகையில் சரப்ஜித் சிங்கை தூக்கிலடக்கூடாது. அவரை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும். விடுதலை செய்தப்பிறகு அவர் குற்றவாளி என்பது ஊர்ஜிதமானால் அவரை இந்தியா திருப்பித் அனுப்பவேண்டும் என்று கூறியுள்ளார்.

இது பற்றி கருத்து தெரிவிக்கையில், மனித உரிமைகளுக்கான அமைச்சர் அன்சர் புருனே, சரப்ஜித் சிங்கின் விடுதலைக்கு நவாஸ் சரீப்பின் பேச்சு நல்ல முன்னேற்றமும் நம்பிக்கையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

சந்தனக் கூடில் தகராறு: பாமக நிர்வாகி கைது

சந்தனக் கூடில் தகராறு: பாமக நிர்வாகி கைது

எலவனாசூர்கோட்டையில் சந்தனக்கூடு நிகழ்ச்சியில் பாமக-திமுக பிரமுகர்களுக்கு இடையே சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் பாமக நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். திமுக பிரமுகர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எலவனாசூர்கோட்டையில் உள்ள மசூதி ஒன்றில் சந்தனக்கூடு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மாறுவேடப் போட்டியும் நடைபெற்றது.

இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாûஸ கொச்சைப்படுத்தும் விதத்தில் சிலர் பேசியதாக கூறி பாமகவினர் அந்த இடத்தில் ரகளை செய்தனர்.
இவர்களுக்கு எதிர்ப்பாக திமுகவினர் பிரச்னையில் ஈடுபட்டனர். இந்த பிரச்னையில் அந் நிகழ்ச்சி நடந்த இடத்தில் 4 டியூப் லைட்டுகள் உடைக்கப்பட்டன.

தெருவோரக் கடைகள் சிலவும் அடித்து நொறுக்கபப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாமக மாவட்ட துணைச் செயலர் ஜெகன் (எ) ஜெகநாதன், சுரேஷ் ஆகிய இருவரை போலீஸôர் கைது செய்தனர். பாமகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திமுக பிரமுகர்கள் சம்சத், அப்துல்ரஹீம் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்கேன் பண்ணும் போதுஎன்ஜினீயரிங் மாணவியை நிர்வாணமாக படம் பிடித்த டாக்டர்

ஸ்கேன் பண்ணும் போதுஎன்ஜினீயரிங் மாணவியை நிர்வாணமாக படம் பிடித்த டாக்டர்

ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம் கன்டுகுரு என்ற கிராமத்திற்கு என்ஜினீயரிங் (பி.டெக்) இறுதி ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் தீராத வயிற்று வலிக்காக தனது உறவினருடன் சிகிச்சைக்காக வந்தார். அந்த மாணவியை மட்டும் `ஸ்கேன்' பண்ணுவதற்காக டாக்டர் ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கு ஸ்கேன் செய்யும்போது அந்த மாணவியை நிர்வாணமாக்கி, தனது அதி நவீன செல்போனில் வீடியோ எடுத்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, அலறியடித்தபடி ஸ்கேனிங் அறையை விட்டு வெளியே ஓடி வந்து கூச்சலிட்டு கதறி அழுதார். அதற்குள் அந்த டாக்டர் ஆஸ்பத்திரியை விட்டு தப்பி ஓடி விட்டார்.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

ஒரு வங்கி அதிகாரியின் துரதிர்ஷ்டம்

ஒரு வங்கி அதிகாரியின் துரதிர்ஷ்டம்

இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்தவர் டான் ஹில். 32 வயதான இவர் லண்டனில் உள்ள வங்கியில் பெரிய அதிகாரியாக வேலை செய்தார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக அந்த வேலையில் இருந்த அவரது ஆண்டு வருமானம் 56 லட்சம் ரூபாய் ஆகும். ஆனால் அவர் வேலை ரொம்பவும் டென்ஷனானது. இதனால் அவர் அந்த வேலையை ராஜினாமா செய்தார். சும்மா இருக்கப்பிடிக்கவில்லை. அவருக்கு தச்சுவேலை தெரியும் என்பதால் அவர் கார்பெண்டர் வேலையை எடுத்துக்கொண்டார். மரத்தை வாங்கி அறுத்து மேஜை, நாற்காலி என்று மரப்பொருள்களை செய்ய தொடங்கினார்.

ஆனால் அவரை பிடித்த துர்திர்ஷ்டம், கார்பெண்டர் வேலையை தொடங்கிய பிறகு அவர் உடலில் தடிப்பும் அதில் அரிப்பும் ஏற்பட்டது. அவர் டாக்டரிடம் சென்று காட்டியபோது, அவர் இது ஒவ்வாமை நோய் என்றும் மரத்தூள் உங்களுக்கு ஆகவில்லை என்றும் கூறினார். இனிமேல் அவர் தச்சு வேலை செய்யக்கூடாது என்றும் டாக்டர் அவருக்கு தடை போட்டு விட்டார். இதனால் அவர் தச்சுவேலையை கைவிட வேண்டியதாகி விட்டது.

"வாழ்வின் உயரத்தை எட்டிப் பிடிப்போரின் ஏணிப் படிகள் புத்தகங்கள்': கவிஞர் தமிழச்சி

"வாழ்வின் உயரத்தை எட்டிப் பிடிப்போரின் ஏணிப் படிகள் புத்தகங்கள்': கவிஞர் தமிழச்சி

புத்தகங்கள் காலத்தின் இடைவெளியை நிரப்பும் பாலம். வாழ்வின் உயரங்களை எட்டிப்பிடித்த பலருக்கும் ஏணிப்படிகளாக புத்தகங்கள் இருந்துள்ளன என்று கவிஞர் தமிழச்சி பாண்டியன் கூறினார்.
உலக புத்தக தினத்தையொட்டி யுரேகா புக்ஸ், வளரும் வந்தவாசி மற்றும் யுரேகா கல்வி இயக்கம் ஆகியன இணைந்து வந்தவநாசியில் சனிக்கிழமை புத்தகக் கலைவிழா நடத்தின.

வளரும் வந்தவாசி தலைவர் அ.ஜ. இஷாக் தலைமை வகித்தார். வட்டாட்சியர் ந. கருணாமூர்த்தி, திருவள்ளுவர் பொறியியல் கல்லூரி துணைத் தலைவர் அ. கணேஷ்குமார், நகராட்சித் தலைவர் க. சீனுவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

யுரேகா கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு. முருகேஷ் வரவேற்றார்.

விழாவில் பங்கேற்ற தமிழச்சி பாண்டியன், "சில புத்தகங்கள் வாழ்வை கண்ணாடி போல் நமக்கு படம் பிடித்து காட்டுபவை' என்றார்.
திரைப்பட இயக்குனர்கள் சீமான், கரு. பழனியப்பன், கவிஞர் நந்தலாலா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். யுரேகா கல்வி உதவித் தொகை திட்ட துணைத் தலைவர் அ. வெண்ணிலா நன்றி தெரிவித்தார்.

சினிமா வேறு; வாழ்க்கை வேறு: ரமேஷ்கண்ணா

சினிமா வேறு; வாழ்க்கை வேறு: ரமேஷ்கண்ணா

சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்று திரைப்பட நடிகர் ரமேஷ்கண்ணா கூறினார்.

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் வேல்ஸ் வித்யாஸ்ரமம் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடந்தது. இதில் பங்கேற்ற ரமேஷ்கண்ணா பேசியதாவது:

நான் பள்ளியில் படிக்கும்போது மேற்கூரையில் ஏராளமான ஓட்டைகள் இருக்கும். மழைக் காலத்தில் பள்ளிக்கு விடுமுறை விட்டுவிடுவார்கள்.
இப்பள்ளிக்கு நல்ல கட்டடங்கள் அமைந்துள்ளன. இங்கு படிப்பவர்கள் நாளை ஜனாதிபதியாக, பிரதமராக, நடிகராக வரலாம்.

நான் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் துணை இயக்குநராக சேர்ந்து, இயக்குநராகி தற்போது நடிகராகி உள்ளேன். இது படிப்படியாக ஏற்பட்டுள்ள வளர்ச்சி.

ஒருநாள் என் மகன்களிடம் சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்று சொன்னேன். நடிகர் ரஜினிகாந்த் நடித்த படத்தை என் மனைவி மகன்களுக்குக் காட்டி, ரஜினி எப்படி அவருடைய தாயாரை வணங்குகிறார் பாருங்கள். இதுபோல் நீங்களும் தாயாரை வணங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

இதற்கு என் மகன்கள் "சினிமா வேறு, வாழ்க்கை வேறு' என்று அவருக்கு பதில் அளித்தார்கள் என்று நகைச்சுவை ததும்பக் கூறினார் ரமேஷ்கண்ணா.
நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் ஆதவன்பிரகாஷ், பள்ளி செயலர் மகேஸ்வரி ஆதவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உடற்பயிற்சி பற்றி போலீஸ் ஐ.ஜி. சைலேந்திரபாபு எழுதிய புத்தகம்சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டார்

உடற்பயிற்சி பற்றி போலீஸ் ஐ.ஜி. சைலேந்திரபாபு எழுதிய புத்தகம்சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டார்

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரி ஐ.ஜி. சைலேந்திரபாபு உடற்பயிற்சியின் அவசியம் குறித்து `உடலினை உறுதி செய்' எனëற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். இதன் வெளியீட்டு விழா, சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.

பல்கலைக்கழக குற்றவியல்துறை ஏற்பாடு செய்த இந்த விழாவில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் வெளியிட, முதல் பிரதியை தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர்.திருமலைச்சாமி பெற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து குற்றவியல் துறை தலைவர் பேராசிரியர் திலகராஜ், சைலேந்திரபாபுவின் பேராசிரியர் பெருமாள், நூலை வெளியிட்டுள்ள சுரா பதிப்பகத்தின் உரிமையாளர் சுப்புராஜ் ஆகியோர் பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்கள்.

சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ் வாழ்த்திப் பேசும்போது, "உலக அளவில் இந்தியாவில்தான் சர்க்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள், புற்றுநோயாளிகள் அதிகளவில் உள்ளனர். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் இதுபோன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும். அத்தகைய நோய் தடுப்பு முறைகளை இந்த புத்தகம் தெளிவாக கூறுகிறது'' என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, நூலாசிரியர் சைலேந்திரபாபு பேசும்போது, "20 ஆண்டு காலமாக நான் கடைப்பிடித்து வரும் உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி அனுபவத்தை இந்த புத்தகத்தில் கொடுத்திருக்கிறேன்'' என்று தெரிவித்தார்.

பாரதீய ஜனதா கட்சி தலைவர்ராஜ்நாத்சிங் நாளை பசும்பொன் வருகை

பாரதீய ஜனதா கட்சி தலைவர்ராஜ்நாத்சிங் நாளை பசும்பொன் வருகை தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்

அகிலஇந்திய பாரதீய ஜனதா கட்சியின் தலை வர் ராஜ்நாத்சிங் நாளை பசும்பொன் வரு கிறார். அங்கு தேவர் நினை விடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

நூற்றாண்டு விழா
தேசிய தலைவர்களில் ஒரு வரும், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவரும், ஆன்மிகவாதி யுமான பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் நூற் றாண்டு விழாவில் கலந்து கொள்ள அகில இந்திய பார தீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் நாளை (29-ந்தேதி) டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரைக்குவருகிறார்.பின்னர்அங்கிருந்து திருப்புவனம் வழியாக பசும்பொன் செல்கிறார். அவருக்கு திருப்புவனத்தில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை மாநிலதுணைத்தலைவர் எச்.ராஜா, மாவட்ட தலைவர் சபேசன், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேந்திரன், மாநில பார்வையாளர் வக்கீல் சொக்கலிங்கம், மாவட்ட பொதுச்செயலாளர் குருநாக ராஜன், மாவட்ட அமைப்பு செயலாளர் பால.ரவிராஜன், திருப்புவனம் ஒன்றிய தலைவர் பொன்முருகன், ஒன்றிய செய லாளர் மலையேந்திரன், ஒன் றிய அமைப்பாளர் சண்முக நாதன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
பாரதீய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் எம்.பி.யுடன் மாநில தலைவர் இல.கணேசன், அகில இந்திய செயலாளர் திருநாவுக்கரசு, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பின ருமான சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் வீரணசாமி ஆகியோர் உடன் சென்று தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர். மேற்கண்ட தகவலை பாரதீய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பி.எஸ்.எல்.வி சி9 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

பி.எஸ்.எல்.வி } சி9 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.

இன்று காலை 9.23 மணியளவில் பத்து செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.}சி9 என்ற ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக் கோள்களை பூமியில் இருந்து புறப்பட்ட 16வது நிமிடத்தில் பிஸ்எல்வி விண்ணில் செலுத்தும்.

இந்த 10 செயற்கைக் கோள்களில் 2 இந்திய செயற்கைக் கோள்கள் மற்றும் 8 வெளிநாட்டு நானோ செயற்கைக் கோள்கள் ஆகும். ஒரே நேரத்தில் 10 செயற்கைக் கோள்களை அனுப்பியது சாதனையாக கருதப்படுகிறது.
இந்த செயற்கைக் கோள்களின் மொத்த எடை 824.5 கிலோவாகும். இதற்கு முன்னர் ரஷ்யா 300 கிலோ எடை கொண்ட 16 செயற்கைக் கோள்களை சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவியது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாதான் 10 செயற்கைக் கோள்களை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தே.மு.தி.க. சார்பில் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்

தே.மு.தி.க. சார்பில் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்

பாராளுமன்ற தேர்தல் குறித்து தே.மு.தி.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மேலிட பார்வையாளர் தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டார்.
ஆலோசனை கூட்டம்
தேசிய முற்போக்கு திரா விட கழகம் சார்பில் பாரா ளுமன்ற தேர்தலுக்கு ஆயத்த மாகும் வகையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் மேலிட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வரு கிறது. இதன்படி ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி தேர் தல் ஆலோசனை கூட்டம் மேலிட பார்வையாளரும், மாவட்ட வக்கீல் அணி துணை செயலாளருமான தட் சிணா மூர்த்தி தலைமையில் நடந்தது.

மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா, மாவட்ட அமைப்பாளர் மணிமாறன், பொருளாளர் அழகுபால கிருஷ்ணன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில மீன வரணி துணை செயலாளர் முருகநாதன் கலந்து கொண் டார். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் முத்து காமாட்சி, நாகூர்கனி, ரவிக் குமார், கைகாட்டி ராஜன், நகர் செயலாளர்கள் ராமேசு வரம் மலைச்சாமி, கீழக்கரை மதிவாணன், பரமக்குடி கருப்பையா, ஒன்றிய செயலா ளர்கள் ராமநாதபுரம் கனி, கமுதி வேல்மயில் முருகன், ஆர்.எஸ்.மங்கலம் கணேசன், பரமக்குடி பூமிநாதன், போக லூர் விஜயகுமார், கடலாடி ரவிநாயகம், திருப்புல்லாணி மேகவர்ணம், திருவாடானை சேக் அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அறிவுரை

கூட்டத்தில் மேலிட பார் வையாளர் தட்சிணா மூர்த்தி பேசியபோது, "தலைவர் விஜயகாந்த் அறிவித்தபடி அனைத்து தொகுதிகளுக்கும் மேலிட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத் தப்பட்டு வருகிறது. மக்கள் மீது நம்பிக்கை வைத்து, யாரு டனும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று விஜய காந்த் அறிவித்துள்ளார். அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற கட்சியினர் பாடு பட வேண்டும்.'' என்றார்.
கூட்டத்தில் கட்சி நிர்வா கிகள் ராஜாமுகமது, முத்தீசு வரன், ஓவியர் சரவணன், கேப்டன் பேரவை இபுராகீம், கோவிந்தராஜ், நிïட்டன், இளைஞரணி ராமராஜ், மாணவரணி முனியசாமி, நாராயண மூர்த்தி, மகளி ரணி ஜான்சிராணி, செல்வி, முத்துக்கனி, தொழிற் சங்க நிர்வாகிகள் பொருள் பொன் னையா, ரஞ்சித்குமார், மூக் கையா, வடிவேல், அப்துல் ஹக்கீம், சண்முகம், நெசவா ளர் அணி நம்பு நாயகம், என்ஜினீயர் செந்தில் செல் வா னந்த், சிவந்தி ஹரிராம், விவசாய அணி முருகன், தொண்டரணி முனியசாமி, செய்தி தொடர்பாளர் மின் னல் கோபி, சிவக்குமார், அபி ராமம் ஆறுமுகம், வர்த்தக அணி நாதன், சாயல்குடி மாணிக்கவேல், முதுகுளத் தூர் இளமாறன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சென்னை கம்ப்யூட்டர் என்ஜினீயர் அமெரிக்காவில் தற்கொலை

சென்னை கம்ப்யூட்டர் என்ஜினீயர் அமெரிக்காவில் தற்கொலை


சென்னையைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் வேலை இழந்து, தங்க இடமும் இல்லாததால் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவில் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.


சென்னையைச் சேர்ந்தவர் கணேஷ் சந்தானகிருஷ்ணன் (27) கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், 2005-ல் அமெரிக்கா சென்றுள்ளார்.


நியூஜெர்சியில் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த இவர், அண்மையில் அந்நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், ஆசினிங் என்ற இடத்தில் ஒரு கிடங்கில் தங்கியிருந்த அவர், அத்துமீறியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு வாரம் சிறைவாசத்துக்குப் பின் மீண்டும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவர் ஏப்ரல் 3-ம் தேதி தபன் ஸீ பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னையில் அவரது குடும்பத்தினருடன் தொடர்பு ஏற்படுத்திய பின்னர், அவரது பெயரை அமெரிக்க போலீஸôர் சனிக்கிழமை அறிவித்தனர். கடந்த ஓராண்டாகவே அவர் சரியாக நடந்து கொள்ளவில்லை என அவர் குடியிருந்த வீட்டுக்கு அருகிலிருந்தவர்கள் தெரிவித்ததாக நியூஜெர்சி மாநில போலீஸ் விசாரணை அதிகாரி நோயல் நெல்சன் கூறினார்.

"டாஸ்மாக்' கடையை உடைத்து கொள்ளை முயற்சி

"டாஸ்மாக்' கடையை உடைத்து கொள்ளை முயற்சி

சென்னையை அடுத்த மணலியில் உள்ள "டாஸ்மாக்' கடையை உடைத்து ரூ.5 லட்சம் பணத்தைக் கொள்ளை அடிக்க முயற்சி நடந்தது.
மணலி எம்.ஜி.ஆர். நகரில் உள்ள "டாஸ்மாக்' மதுபானக் கடையை மேற்பார்வையாளர் தாமோதரன், சனிக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு சென்றார். அன்றைய தினம் இரவில் மர்ம நபர்கள் சிலர் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயன்றனர்.

அச்சமயத்தில் அவ்வழியே ரோந்து வந்த போலீஸ்காரர் சகாயராஜை பார்த்ததும் கொள்ளை கும்பல் தப்பி ஓட முயன்றது. கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போலீஸ்காரர் சகாயராஜை, ஷட்டர் கதவின் பூட்டால் தாக்கிவிட்டு தப்பி ஓடினர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கடையைத் திறந்து பார்த்தபோது ரூ.5 லட்சம் ரொக்கப் பணம் பத்திரமாக இருந்தது தெரியவந்தது. இதுபற்றி, மணலி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கன்டெய்னர் மோதி டாஸ்மாக் ஊழியர் சாவு:

ஆவடி குளக்கரை தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின் மகன் வேதாச்சலம். திருவொற்றியூரில் சத்தியமூர்த்தி நகரில் உள்ள "டாஸ்மாக்' மதுக்கடையின் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை ஆவடியில் இருந்து திருவொற்றியூருக்கு மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். சாத்தாங்காடு காவல் நிலையம் அருகே வந்தபோது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுபற்றி, மாதவரம் போக்குவரத்து போலீஸôர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேற்கு வங்கத்தில் சட்டம்- ஒழுங்கு நிலை: சோனியா அதிருப்தி

மேற்கு வங்கத்தில் சட்டம்- ஒழுங்கு நிலை: சோனியா அதிருப்தி

மேற்கு வங்கத்தில் சட்டம்- ஒழுங்கு நிலை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அதிருப்தி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தின் பெர்ஹாம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சோனியா பேசியதாவது:

நந்தி கிராமத்தில் இன்னமும் பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் துன்பப்படுகின்றனர். நந்திகிராமத்தில் நிகழ்ந்தவை தவறானவை. ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை.
மாநில மக்கள் தாங்கள் சித்திரவதை செய்யப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலை நிலவுவது மிகவும் தவறானது.
சட்டம்-ஒழுங்கு நிலை சரியாகப் பராமரிக்கப்படவில்லை எனில் முழுவதுமே சீர்குலைந்து விடும். இது நிகழக்கூடாது.
எங்கு அநீதி இழைக்கப்பட்டாலும், அதை எதிர்த்துப் போராடுவதற்கு காங்கிரஸýக்கு உரிமை உள்ளது.

வகுப்புவாத சக்திகள் பதவியில் அமர்வதைத் தடுக்கவே மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், எந்த நிலையிலும் தனது கொள்கைகளை காங்கிரஸ் விட்டுக் கொடுக்காது.
பொதுமக்கள் நலனுக்காகவே குறைந்தபட்ச செயல்திட்டத்தின்படி காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. கட்சியின் எல்லா பிரிவினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என சோனியா காந்தி கேட்டுக் கொண்டார். மத்திய அரசு மேற்கொண்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

சீனாவில் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதல் 66 பேர் பலி

சீனாவில் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதல் } 66 பேர் பலி

கிழக்கு சீனா பகுதியில் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 66 பேர் உயிரிழந்தனர். 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
பீஜிங்கில் இருந்து கின்டாகோ சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று எதிரே வந்து கொண்டிருந்த ரயிலுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த பயங்கர விபத்தில் 66 பேர் உயிரிழந்தனர். மேலும் 247 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் 70 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விபத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதே பாதையில் இதற்கு முன் ஜனவரி மாதம் நிகழ்ந்த விபத்தில் 18 பேர்
உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய நாடாளுமன்றம் கூடியது: 10 தமிழ் எம்.பி.க்கள் பதவியேற்பு

மலேசிய நாடாளுமன்றம் கூடியது: 10 தமிழ் எம்.பி.க்கள் பதவியேற்பு

கோலாலம்பூர், ஏப். 28: மலேசியாவில் 12-வது நாடாளுமன்றம் கூடியது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உறுப்பினர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
தமிழர்கள் 10 பேர் பதிய எம்.பி.க்களாகப் பதவியேற்றனர். மலேசிய நாடாளுமன்ற வரலாற்றில் 10 தமிழர்கள் எம்.பி.க்களாவது இதுவே முதல் முறை.

மேலும் எதிர்க்கட்சித் தலைவராக ஒரு பெண் பொறுப்பேற்றார். இதுவும் மலேசியாவில் முதல் முறை. மக்கள் நீதிக் கட்சித் தலைவி வான் அஸிஸô வான் இஸ்மாயில் எதிர்க்கட்சித் தலைவரானார்.

Sunday, April 27, 2008

கமல் கலைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கவல்லவர் - அமிதாப் பச்சன் புகழாரம்


மே 2008 ல் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் உலகெங்கும் திரைக்கு வர இருக்கும் கமலின் தசாவதாரம் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை பிரபல நடிகர் அமிதாப் பச்சன் பார்த்தார்.

கமலின் பத்து வேடங்களை பார்த்து பிரமித்த அவர் கமலால் மட்டுமே இதுபோன்ற பன்முக காட்சிகளில் நடிக்க இயலும் என்று கூறினார். கமல் இந்தியாவின் சினிமா துறைக்கு முன்னோடியாக திகழ்வதாக பாராட்டுத் தெரிவித்தார்.

24 ஆண்டுகள் தந்தையுடன் குடும்பம், 7 குழந்தைகள்

ஆஸ்திரியா நாட்டில் 24 ஆண்டுகள் வீட்டின் கீழ்பகுதியில் பூட்டி வைக்கப்பட்டு தனது மகள் எலிசபத் (வயது 42) உடன் உடலுறவு கொண்டு துன்புறுத்தினார் தந்தை ஜோசப் (வயது 73).

இவர் 11 வயதிறுக்கும் போது கைகளை கட்டி வீட்டின் பேஸ்மன்டில் அடைக்கப்பட்டார். கடந்த 24 ஆண்டுகளில் 7 குழந்தைகளை பெற்ற அவர், அதில் இரட்டை குழந்தைகளில் ஒன்று பிரசவ கோளாறு காரணமாக இறந்தது. ஐந்திலிருந்து இருபது வயதுகளில் மற்ற ஆறு குழந்தைகளில் மூவர் பெண் குழந்தைகள், மூவர் ஆண்மக்கள். இதில் மூன்று பேர் முன்பு அவரிடமிருந்து தப்பித்து விட்டனர். மற்ற மூவரும் தாயுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்குத் தேவையான உணவும், உடைகளும் மட்டும் கொடுத்து வந்தார்.

மூத்த பெண் 19 வயது உடையவருக்கு கடும் உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். அதில் சந்தேகத்தின் பேரில் தாய் பற்றி விசாரிக்கையில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

இதுபற்றிய செய்தி அறிந்ததும் ஆஸ்திரிய மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

மிட்டல் ஐரோப்பாவின் முதல் பணக்காரர்


இலண்டனிலிந்து வெளிவரும் சன்டே டைம்ஸ் பத்திரிக்கை ஐரோப்பாவின் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சென்ற ஆண்டு 2007 ல் 8 பில்லியன் பவுன்ட் சொத்து மதிப்புடன் இருந்த லஷ்மி மிட்டல் குடும்பம் தற்போது 27.7 பில்லியனுடன் தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஐரோப்பாவின் முதல் பணக்காரர்களின் பட்டியலில் உள்ளது.

முதல் ஆயிரம் பேர்களில் கணக்கிடப்பட்டவற்றில் சென்ற ஆண்டு 53 பில்லியன் பவுன்ட்களிலிருந்து 412.8 பில்லியன் உயர்ந்துள்ளது.

இன்னும் முதல் 75 பேரில் 40 பேர் ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு குடியேறி என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பத்து பணக்காரர்களின் பட்டியல்

Lakshmi Mittal, steel (£27.7bn)
Roman Abramovich, oil and industry (£11.7bn)
The Duke of Westminster, property (£7bn)
Sri and Gopi Hinduja, Industry and finance (£6.2bn)
Alisher Usmanov, Steel and mines (£5.7bn)
Ernesto and Kirsty Bertarelli, pharmaceuticals (£5.6bn)
Hans Rausing and family, packaging (£5.4bn)
John Fredriksen, shipping (£4.6bn)
Sir Philip and Lady Green, retailing (£4.3bn)
David and Simon Reuben, property (£4.3bn)

Lakshmi Mittal tops The Sunday Times Rich List 2008

சவுதி வலைப்பதிவர் விடுதலை

சவுதி அரசிற்கு எதிரான கருத்துக்களை எழுதியதற்காக கைது செய்யப்பட்ட வலைப்பதிவர் சவூத் அல் பர்ஹான் நான்கு மாத சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

தண்டனைக்கான காரணம் இதுவரை சொல்லப்படவில்லை.

நயன்தாரா குமுறல்


சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நட்சத்திர தூதுவராக விஜய் மற்றும் நயன்தாரா நியமிக்கப்பட்டிருந்தனர்.

சென்னையில் நடைபெற்ற கிரிக்கெட் துவக்கவிழாவில் விஜய் மட்டும் கலந்துகொண்டார். நயன்தாரா கலந்துகொள்ளவில்லை. இதனால் வருத்தமுற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகள்அவரை நட்சத்திர தூதுவர் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறது.

இதுபற்றி நயன்தாரா கூறும்பொழுது, அனைத்துப்போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டுமென்று ஒப்பந்தம் செய்யவில்லை, 7 போட்டிகளில் மூன்றில் மட்டும் கலந்து கொண்டால் போதும் என்று தான் சொன்னார்கள்.

போட்டி நடைபெற்ற அதே நேரம் உடல் நலக்குறைவு காரணமாக மயங்கி கீழே விழுந்து விட்டேன், ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அதனால் சென்னையில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொள்ள இயலவில்லை. அதே சமயம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போட்டி எத்தனை மணிக்கு என்று கேட்டேன். 8 மணிக்கு என்று சொன்னார்கள். போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு நான் வரவேண்டுமா என்று கேட்டேன். இப்பொழுது வேண்டாம் மற்ற போட்டிகளில் கலந்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.

இப்படியிருக்க என்னுடைய மானேஜருக்கு கூட தெரிவிக்காமல் என்னை தூதுவர் பதிவியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள்.

நான் உடல் நலக்குறைவுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படதற்கான ஆவனங்கள், மருத்துவர்களின் சான்றுகள் என்னிடம் உள்ளன, இந்த நீக்கலுக்கு பின்னனி உள்ளது என்று காட்டமாக அவர் தெரிவித்துள்ளார்.

இரானுவ முகாம்கள் மீது புலிகள் வான்வெளித்தாக்குதல்


இலங்கையில் கடந்த ஒருவாரமாக நடைபெற்றுவரும் போரில் இலங்கை இரானுவத்திற்கு கடும் உயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 26 பேர் கொள்ளப்பட்டதற்கு சந்தேகத்தின் பேரில் 9 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.

மணலாறு (வெளியோலா) பகுதியில் இலங்கை இரானுவம் நேற்று இரவு வான்வெளித்தாக்குதல் நடாத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விடுதலைப்புலிகளின் இரண்டு இலகு ரக வானூர்திகள் இரானுவ முகாம்கள் மீது மூன்று குண்டுகள் வீசினர். இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை.

கொழும்பு பேருந்து குண்டு வெடிப்பைத் தொடர்ந்து மேலும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடைபெறலாம் என இரானுவம் மக்களை எச்சரித்துள்ளது.

இலங்கை இரானுவத்திற்கெதிரான விடுதலைப்புலிகளின் ஐந்தாவது வான்வெளித்தாக்குதல் இது என்பது குறிப்படத்தக்கது.

கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் போர் 1996 க்குப்பின் அதிக உயிரிழப்புகள் கொண்டதாக ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

தலிபான் தாக்குதல்: கர்சாய் உயிர் தப்பினார்


16 ஆண்டுகளுக்குமுன் ஆப்கானிலிருந்து முஜாகித்களால் ரஷ்யப்படைகள் விரட்டப்பட்டதின் நினைவுதினத்தையொட்டி இராணுவ அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த அணிவகுப்பில் ஆப்கான் ஜனாதிபதி கர்சாய், அமெரிக்க, ஐக்கிய இராஜ்ஜிய தூதுவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்பொழுது மறைந்திருந்த ஆப்கான் தீவிரவாதிகள் தேசிய கீதம் பாடும் பொழுது துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரண்டு பாராளுமன்ற உறுப்பனர்களுக்கு காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்ட வசமாக காயங்களின்றி கர்சாய் உயிர் தப்பினார்.

இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். இந்த தாக்குதலில் ஆறு பேர் பங்கு பெற்றதாகவும் அதில் மூன்றுபேர் உயிரிழந்ததாகவும், மூன்று பேர் தப்பித்ததாகவுகம் தெரிவித்துள்ளனர்.

வயலார் ரவி தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக நியமனம்

வயலார் ரவி தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக மத்திய அமைச்சர் வயலார் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

அக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் சோனியா காந்தி இதற்கான அறிவிப்பைத் தில்லியில் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நிறைய சிக்கல்கள் இருக்கும் நிலையில், ஒரு முறை மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள அருண்குமார் போன்ற மேலிடப் பார்வையாளரால், பிரச்னைகளை திறமையாகக் கையாள முடியாது என்று ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் சோனியாவிடம் கூறிவந்தனர்.
மூத்த தலைவர் ஒருவரை பொறுப்பில் அமர்த்தினால்தான், சிக்கல்களைத் திறமையாகச் சமாளிக்க முடியும் என்ற யோசனையை ஏற்று வயலார் ரவி நியமிக்கப்பட்டிருப்பதாகக் கட்சித் தலைவர்கள் சொல்கின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளராக ஆந்திரத்தைச் சேர்ந்த அருண்குமார் நியமிக்கப்பட்ட பிறகு பல முறை சென்னை வந்து சென்றுள்ளார். ஆனால், தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களாக உள்ள முதல்வர் கருணாநிதியை ஒருமுறை கூட அவர் சந்திக்கவில்லை.
இந் நிலையில் கருணாநிதியை திருப்திப்படுத்தும் வகையில், அருண்குமாருக்கும் மேலே ஒரு பதவியில் வயலார் ரவி நியமிக்கப்பட்டிருப்பதாக அக் கட்சியினர் கூறுகின்றனர்.
இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ மக்களவைத் தேர்தல் வரவிருக்கிறது. அதற்கான ஆயத்தப் பணிகளை இப்போதே தொடங்கியாக வேண்டும். எனவே, வயலார் ரவியின் நியமனம் தேர்தலுக்கு ஆயத்தமாகும் நடவடிக்கையாகவும் அமைந்துள்ளது.

மதுரையில் பட்ட மேற்படிப்பு வேலைவாய்ப்பு அலுவலகக் கிளை: அமைச்சர் தா. மோ. அன்பரசன்

மதுரையில் பட்ட மேற்படிப்பு வேலைவாய்ப்பு அலுவலகக் கிளை: அமைச்சர் தா. மோ. அன்பரசன்

பட்ட மேற்படிப்பு படித்தவர்களின் வசதிக்காக தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகக் கிளை மதுரையில் அமைக்கப்படும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் அறிவித்தார்.
பேரவையில் தொழிலாளர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அவர் வெள்ளிக்கிழமை பதில் அளித்தபோது இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு விவரம்:-

""பட்ட மேற்படிப்பு, தொழிற்சார் கல்வி, நிர்வாகத் தகுதிக்கான பட்டம் பெற்றவர்கள் பதிவு செய்யவும், அவர்களை வேலைக்காக பரிந்துரை செய்யவும் மாநில அளவில் தொழில் - செயல் வேலைவாய்ப்பு அலுவலகம் தற்போது சென்னையில் செயல்பட்டு வருகிறது.
தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்களின் துயர் துடைக்கும் வகையிலும் தென் மாவட்டங்களில் உள்ள மனுதாரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் மதுரையில் கிளை அலுவலகம் தொடங்கப்படும்.

வேலைவாய்ப்பு புதுப்பித்தல் சலுகை: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவினைப் புதுப்பிக்க வேண்டும். 2006-ம் ஆண்டு பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு கடந்த ஆண்டு சிறப்பு புதுப்பித்தல் சலுகை அளிக்கப்பட்டது.

இப் புதுப்பித்தல் சலுகை மூலம் 35,826 பேர் பலன் அடைந்தனர். இச் சலுகை காரணமாக 2001-06-ம் ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவர்கள் மொத்தம் 3,80,138 பேர் பலன் அடைந்தனர்.

தற்போது 2007-ம் ஆண்டுக்கு சிறப்புப் புதுப்பித்தல் சலுகை மீண்டும் வழங்கப்படும். இதனால் சுமார் 40,000 மனுதாரர்கள் பலன் அடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ரொக்கப் பரிசு உயர்வு: அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பணியாற்றும் பயிற்றுநர்களுக்கு தற்போது நல்லாசிரியர் விருதுடன் அளிக்கப்படும் ரொக்கப் பரிசுத் தொகை ரூ.500-லிருந்து ரூ.1,000-மாக உயர்த்தப்படும்.
கட்டுமான கலைக்கழகம்: தமிழகத்தில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் கட்டுமானத் தொழிலாளர்களின் திறனை அதிகரிக்கவும் மனித வளத்தை மேம்படுத்தவும் கட்டுமான கலைக்கழகம் நிறுவப்படும்.
ஏழு இடங்களில் இஎஸ்ஐ திட்டம்: தற்போதுள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி (இஎஸ்ஐ) மருந்தகங்கள் மூலம் ஏழு புதிய பகுதிகளுக்கு இத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

கம்பம் நகராட்சி, முத்தல்லாபுரம் (தூத்துக்குடி), புதுக்கோட்டை கிராமம் (தூத்துக்குடி), சின்னமனூர் (தேனி), நாகர்கோயில் (புறநகர்), கன்னியாகுமரி (நகரம்) மற்றும் உத்தமபாளையம் நகராட்சி (தேனி).

சித்த மருத்துவப் பிரிவு: இஎஸ்ஐ நிறுவனத்தின் ஒப்புதலுடன் சிவகாசி, ஓசூர், திருச்சியில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளில் சித்த மருத்துவப் பிரிவு தொடங்கப்படும்.

கோவை, மதுரை தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளில் யோகா பிரிவு தொடங்கப்படும்'' என்றார் அமைச்சர் தா. மோ. அன்பரசன்.

207 தமிழ் அர்ச்சகர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன்

தமிழக திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் வகையில் 207 அர்ச்சகர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் கூறினார்.

பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்துக்கு அமைச்சர் பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை பதில் அளித்தபோது இது தொடர்பாக கூறியதாவது:-

""திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய ஏதுவாக 207 அர்ச்சகர்களுக்கு தற்போது ஆறு பயிற்சி நிலையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 பேர், ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த 34 பேர் இப் பயிற்சியில் அடங்குவர்.

இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி வரும் ஜூன் மாதம் முடிந்து விடும். அதன் பிறகு அவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

14 கோயில்களுக்கு தங்கத் தேர்: தமிழகத்தில் இந்த நிதியாண்டில் 14 கோயில்களுக்கு தங்கத் தேர் செய்யும் பணி முடிவடையும். கடந்த நிதியாண்டில் மயிலை முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயில் உள்பட மொத்தம் 8 கோயில்களில் தங்கத் தேர் செய்து தங்கரத உலா நடத்தப்பட்டது.
ஒரு கால பூஜை: தமிழகத்தில் தற்போது 10,947 திருக்கோயில்களில் ஒரு கால பூஜைத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஒரு கால பூஜை நடத்த நிதி தேவைப்படும் மீதி உள்ள கோயில்களின் எண்ணிக்கை 1,567 மட்டுமே. இந்த 1,567 திருக்கோயில்களும் இந்த ஆண்டிலேயே ரூ.4 கோடியில் இத் திட்டத்தில் கொண்டுவரப்படும். இதையடுத்து ஒருகால பூஜைகூட இல்லாத திருக்கோயில்கள் எதுவும் இல்லை என்ற வரலாறு உருவாக்கப்படும்'' என்றார் அமைச்சர் பெரியகருப்பன்.

207 தமிழ் அர்ச்சகர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன்

207 தமிழ் அர்ச்சகர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன்

தமிழக திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் வகையில் 207 அர்ச்சகர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் கூறினார்.
பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்துக்கு அமைச்சர் பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை பதில் அளித்தபோது இது தொடர்பாக கூறியதாவது:-

""திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய ஏதுவாக 207 அர்ச்சகர்களுக்கு தற்போது ஆறு பயிற்சி நிலையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 பேர், ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த 34 பேர் இப் பயிற்சியில் அடங்குவர்.
இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி வரும் ஜூன் மாதம் முடிந்து விடும். அதன் பிறகு அவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

14 கோயில்களுக்கு தங்கத் தேர்: தமிழகத்தில் இந்த நிதியாண்டில் 14 கோயில்களுக்கு தங்கத் தேர் செய்யும் பணி முடிவடையும். கடந்த நிதியாண்டில் மயிலை முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயில் உள்பட மொத்தம் 8 கோயில்களில் தங்கத் தேர் செய்து தங்கரத உலா நடத்தப்பட்டது.
ஒரு கால பூஜை: தமிழகத்தில் தற்போது 10,947 திருக்கோயில்களில் ஒரு கால பூஜைத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஒரு கால பூஜை நடத்த நிதி தேவைப்படும் மீதி உள்ள கோயில்களின் எண்ணிக்கை 1,567 மட்டுமே. இந்த 1,567 திருக்கோயில்களும் இந்த ஆண்டிலேயே ரூ.4 கோடியில் இத் திட்டத்தில் கொண்டுவரப்படும். இதையடுத்து ஒருகால பூஜைகூட இல்லாத திருக்கோயில்கள் எதுவும் இல்லை என்ற வரலாறு உருவாக்கப்படும்'' என்றார் அமைச்சர் பெரியகருப்பன்.

முதல்வரின் பாராட்டு மழையில் ஜாக்கிசான்!

ஜாக்கிசானின் சிறப்புகளைக் கூறி முதல்வர் கருணாநிதி வெகுவாகப் பாராட்டினார்.

முதலில் ஜாக்கிசானையும், கமல்ஹாசனுக்கும் உள்ள அபூர்வ ஒற்றுமைகளை குறிப்பிட்டு முதல்வர் கருணாநிதி ஒப்பீடு செய்தார்.


ஜாக்கிசான் பிறந்த தேதி 7.11.1954.
கமல்ஹாசன் பிறந்தது 7.4.1954. கமலை விட ஜாக்கிசான் 7 மாதங்கள் இளையவர்.

கமல் தனது 6-வது வயதிலேயே "களத்தூர் கண்ணம்மா' படத்தில் நடிக்கத் தொடங்கியவர். ஜாக்கி சான் 8-ம் வயதில் "பிக் அண்ட் லிட்டில் வாக்' படத் தில் நடித்தவர்.

ஜாக்கிசான் 100 படங்களில் நடித்துள்ளார்.
கமலோ இதுவரை 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

உங்களது பெற்றோரை அவர்கள் உயிருடன் உள்ளபோதே வணங்கி விடுங்கள் என்று ஜாக்கி சான் தனது நூலில் குறிப்பிட்டுள்ளது என்னைக் கவர்ந்தது.

அவரை சூப்பர் ஹீரோ என்று உலகமே கூறுகின்றனர். ஆனாலும், நிஜமான ஹீரோக்களாக அவர் கருதுவது, தீயணைப்புப் படை வீரர்களைத்தான்!.
ரோட்டர்டாம் நகரில் "ஹூ ஆம் ஐ' படப்பிடிப் புக்காக 27 மாடிக் கட்டடத்தில் இருந்து குதித்து சாதனை புரிந்தவர் ஜாக்கிசான். எனது ஸ்டண்ட் குழுவினரை நான் குழந்தைகளைப் போலக் காப்பேன்.

அவர்களுக்கு எது நேர்ந்தாலும் நான்தான் பொறுப்பு. என்னால் சாதிக்க முடியாததையெல்லாம் அவர்களை செய்யுமாறு நான் ஒருபோதும் சொன் னது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வறுமையில் பிறந்த ஜாக்கிசான்: ஜாக்கிசான் பிறந்தபோது, மகப்பேறுக்கான மருத்துவச் செலவைக் கூட செலுத்த முடியாத நிலையில் அவரது பெற்றோர்கள் இருந்தனர்.

மகப்பேறு சிகிச்சை அளித்த பெண் டாக்டர், ஜாக்கிசானின் பெற்றோர்களிடம், "நீங்கள் மருத்துவக் கட்டணம் செலுத்த வேண்டாம்! எனக்கு குழந்தை இல்லை. எனவே, 1500 டாலர் தருகிறேன். என்னிடம் குழந்தையைக் கொடுத்து விடுங்கள்' என்றார்.

2 நாள்களுக்குப் பின் ஜாக்கிசானின் தந்தை, டாலர் தொகையை வாங்க மறுத்துவிட்டு குழந்தையை மட்டும் கொடுத்துச் சென்றார்.
அந்தக் குழந்தைதான் ஜாக்கிசான்! எதிர்பாராத விதமாக இதுபோன்ற அதிசயங்களால் உலகத்திற்கு கிடைத்த நன்மைகளில் ஒன்றுதான் ஜாக்கி சான்! என்றார் முதல்வர்.

முதல்வரின் பாராட்டை, புன்னகை மலர ஜாக்கி சான் பணிந்து ஏற்றுக்கொண்டார்.

Saturday, April 26, 2008

பெண்களால் முடியும்: தேங்காய் பறிப்பதில் ஆண்களின் சாதனையை முறியடித்த பெண் ஷர்மிளா

உயரம் அதிகமான தென்னை மரங்களில் ஏறி லாவகமாகவும். வேகமாகவும் தேங்காய் பறித்து சாதனை படைத்து வருகிறார் ஷர்மிளா என்ற கேரளாவைச் சேர்ந்த பெண். கேரளாவில் அண்மைக் காலமாக தேங்காய் பறிப்பதற்குத் திறமையான ஆள்கள் கிடைக்காமல் இருந்தது. பழைமை வாய்ந்த இந்தத் தொழிலைச் செய்ய இளைஞர்கள் தயக்கம் காட்டினர். ஆனால் காசர்காடு மாவட்டம், பள்ளிக்கார ஊராட்சியைச் சேர்ந்த ஷர்மிளா என்ற 37 வயதுப் பெண், மிக உயரமான மரங்களில் கூட லாவகமாக ஏறி தேங்காய்களை வேக மாகப் பறித்துப் போடுகிறார். இதற்காக மரம் ஏறும் இயந்திரத்தைப் பயன்படுத்துகிறார்.



அரசுப் பணியில் பகுதி நேரப் பணியாளராக உள்ள இவர் ஓய்வு நேரத்தில் தேங்காய் பறிக்கும் வேலையை செய்து வருகிறார். எந்தப் பெண்ணும் செய்யத் துணியாத இந்த வேலையை நான் செய்தபோது, யாராலும் இதை நம்ப முடியவில்லை. ஆபத்தான இந்த வேலையை எப்படி என்னால் செய்ய முடியும் என்பது மற்றவர்களுக்கு வியப்பாக இருந்தது. ஆனால் இன்று தேங்காய் பறிக்க என் னைத்தான் அழைக்கின்றனர்.

Friday, April 25, 2008

சுனாமி தாக்கினாலும் சேது சமுத்திரக் கால்வாய்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாது - மத்திய அரசு

சுனாமி தாக்கினாலும் சேது சமுத்திரக் கால்வாய்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.


மக்களவையில் 23 ஆம் தேதி கேள்வி நேரத்தின்போது சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் நாராயண் மீனா கூறியது:

சுனாமி தாக்குதல் பற்றி சென்னையில் உள்ள தேசிய கடல் தொழில் நுட்ப நிறுவனம் ஆய்வு நடத்தி வெளியிட்ட அறிக்கையில், சுனாமி ஏற்பட்டால் கடற்கரைப் பகுதிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. சேது சமுத்திரக் கால்வாய் அமைந் துள்ள பகுதியில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று தெரி வித்துள்ளது. இதை ஜப்பானில் உள்ள தேசிய தொழிற்சாலை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மேம்பாட்டு நிறுவனமும் உறுதிபடுத்தியுள்ளது. சேது சமுத்திரத் திட்டம் அமையும் பகுதியில் சுற்றுப் புறச் சூழல் பாதிப்பு பற்றி நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுப்புறச் சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் தான் இந்தத் திட்டத்தால் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அரசு தெரிவித்தது. இவ்வாறு நாராயண் மீனா கூறினார்.

இரண்டு சிம்கார்டு பி.எஸ்.என்.எல்.லின் புதிய திட்டம்

பி.எஸ்.என்.எல். சென்னை வட்டம் சார்பில் இரண்டு சிம்கார்டு வழங்கும் பி.எஸ்.என்.எல். ஜோடி என்ற புதிய திட்டம் ஏப். 23 அன்று அறிமுகம் செய்யப்பட்டது.


ப்ரீபெய்டு கார்டுடன் ரூ. 100 கூடுதலாக செலுத்தி மற்றொரு இக்கார்டை ஏற்றுக் கொள்ளலாம். இந்தக் கூடுதல் சிம்கார்டை வாடிக்கையாளர் தங்களது நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது தெரிந்த நபரிடம் கொடுக்கலாம். இந்த இரண்டு சிம் கார்டுகளிடையே மாதம் ஒன்றுக்கு 6 மணி நேரம் இலவசமாக பேசலாம். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் - இரண்டு சிம் கார்டுகள் ஒரே கணக்கில் வைக்கப்பட்டிருக் கும். 6 மணிநேரத் திலும் அதிகமாக பேசும்போது நிமிடத்திற்கு 10 பைசா கட்டணத்தில் பேசலாம்.


கூடுதல் சிம்கார்டை பயன்படுத்துவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ளூர் அழைப்புக்கு 80 பைசாவிலும் வெளியூர் அழைப்புகளுக்கு ரூ. 2.60 பைசாவிலும் பேசலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பரதம் போன்ற கலைகள் வளர வேண்டும்: ஆர். நடராஜ்

பரதம் போன்ற கலைகள் வளர வேண்டும்: ஆர். நடராஜ்

அறிவியலைப் போல் மென்மையான கலைகளும் வளர வேண்டும் என காவல் துறை கூடுதல் இயக்குநர் ஆர். நடராஜ் கூறினார்.

சென்னை முத்தமிழ் நகரில் புதன்கிழமை நடைபெற்ற 'வடசென்னையில் இசை விழா' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய காவல் துறை கூடுதல் இயக்குநர் ஆர். நடராஜ், ''எல்லோரும் சமம் என உணர்த்துவது கலை மட்டுமே. கலை வாழ்க்கையோடு இணைந்தது. அறிவியல் வளர்ச்சி எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. அதே சமயம், பரதம் போன்ற மென்மையான கலைகளும் அதற்கு இணையாக வளர வேண்டும். அப்போதுதான் நாம் சோபிக்க முடியும்'' என்றார்.

மேலும் அவர், ''கலைப் பொக்கிஷங்களைப் போற்றி பாதுகாக்க வேண்டும். ஆசிரியர்களை மாணவர்கள் மதிக்க வேண்டும். படிப்பாகட்டும் வேலையாகட்டும் எந்த ஒரு விஷயத்திலும் மனம் விரும்பி ஈடுபட வேண்டும்'' என்றும் தெரிவித்தார்.

கிராமங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு வீடு தேடிச் சென்று பிறப்புச் சான்றிதழ்

கிராமங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு வீடு தேடிச் சென்று பிறப்புச் சான்றிதழ்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு வீடு தேடிச் சென்று சுகாதார ஆய்வாளர்கள் மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அவர் வியாழக்கிழமை பதில் அளித்தபோது இது தொடர்பாக செய்த அறிவிப்பு விவரம்:-

""தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இம் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் அந்தந்த மருத்துவமனையிலேயே வழங்கப்படும்.

துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்களது வீடு தேடிச் சென்று பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும். இதனால் பிறப்புச் சான்றிதழ் பெறுவது மிகவும் எளிதாக்கப்படுகிறது.

ரூ.20 கோடியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன்: தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டும் நோய் கண்டறியும் நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சேவை கிராம மக்களுக்கும் கிடைக்கும் வகையில் 12 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கும் இக் கருவி ரூ.20 கோடியில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நடமாடும் மருத்துவக் குழுக்கள்: தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களுக்கு தங்கள் இருப்பிடத்திலேயே தேவையான மருத்துவ வசதி அளிக்கும் நோக்கத்தில் 146 நடமாடும் மருத்துவக் குழு ஆரம்பித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு ரூ.22 கோடியில் மேலும் 239 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்படும்'' என்றார் அமைச்சர் பன்னீர்செல்வம்.

நிஜமான "தமிழினத் தலைவர்' கலாம்தான்!

நிஜமான "தமிழினத் தலைவர்' கலாம்தான்!

அண்ணல் காந்தியடிகளுக்குப் பிறகு அனைவரின் உள்ளத்திலும் இடம்பிடித்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்தான் என்று "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் கூறினார்.
"தினமணி' கார்ட்டூனிஸ்ட் மதியின் "அடடே!' கார்ட்டூன்கள் தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் அவர் பேசிய வரவேற்புரை:

அண்ணல் காந்தியடிகளுக்குப் பிறகு இந்திய மக்கள் அனைவரின் உள்ளத்திலும் உணர்விலும் ஒன்றியவர் ஒருவர் உண்டென்றால், அவர் அப்துல் கலாம் ஒருவர்தான்.

சமீபத்தில் அப்துல் கலாம் பற்றிய குறுந்தகட்டை பார்த்தேன். அதில் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் மாநாட்டில் பேசும்போது, புறநானூற்றை மேற்கோள் காட்டி, "யாதும் ஊரே யாவரும் கேளிர்!' என்று தொடங்கி அதற்கு ஆங்கில விளக்கமும் அளித்தார்.

அந்த அரங்கில் அலை, அலையாக கைதட்டல்கள் எழுந்தன. தமிழின் அருமையையும், தமிழனின் பெருமையையும் உலக அரங்கில் நிலைநிறுத்திய உண்மையான தமிழினத் தலைவர் அப்துல் கலாம்தான் என்று கூற வேண்டும்.

குடியரசுத் தலைவராக இருந்தபோது கூட இத்தனை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றாரா என்பது சந்தேகம். குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, பல்வேறு நாடுகளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
கடந்த 9 மாதங்களாக, தென் அமெரிக்கா, கனடா, இஸ்ரேல், கிழக்கு ஆசியா என்று ஓய்வொழிவில்லாமல் சுற்றுப் பயணம் செய்யும் இவர்தான் நிஜமான "உலகம் சுற்றும் வாலிபன்' என்று கூறத் தோன்றுகிறது.

அப்துல் கலாம் கனவு காணும் 2020-ல் வளமான இந்தியாவை தனது வாழ்நாளில் அவர் காண வேண்டும். அதற்கு அவர் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டும்.

மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழ் இலக்கியம் பற்றி பேச வேண்டுமானால் இரண்டு பெயர்களை அகற்றி நிறுத்த முடியாது. முதலாவது கவிஞர் கண்ணதாசன் என்றால், அடுத்தது எழுத்தாளர் ஜெயகாந்தன். அகவை 75-ல் அடியெடுத்து வைக்கும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

சாலமன் பாப்பையாவின் மாணவன் நான். எனது தமிழ் அவர் கற்றுக் கொடுத்தது. அமெரிக்கன் கல்லூரியில் அவரது மாணவராக இருந்தேன் என்கிற பெருமை எனக்கு எப்போதும் உண்டு.

எக்ஸ்பிரஸ் குழுமத்தில் சுதந்திரம்: 15 ஆண்டுகளுக்கு முன்பே மதி எனக்கு அறிமுகமானவர். முதல் முதலாக அவரது கார்ட்டூனைப் பார்த்தபோது, அடடா, தமிழுக்கு ஒரு ஆர்.கே. லஷ்மண் கிடைத்துவிட்டார் என்று நினைத்து மகிழ்ந்தேன் நான். இப்போது அடடேயாக அந்தக் கார்ட்டூன் தொகுப்பு மலர்ந்திருக்கிறது.

ஆசிரியரான எனக்கும் சரி, கார்ட்டூனிஸ்டான மதிக்கும் சரி, எங்களது பலம் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் பணிபுரிவதுதான். படைப்பாளிக்கும், பத்திரிகையாளருக்கும் முழுமையான சுதந்திரத்தை அளிக்கும் ஒரே பத்திரிகை நிறுவனம் எங்களது எக்ஸ்பிரஸ் குழுமமாகத்தான் இருக்கும்.
அதற்குக் காரணம் சேர்மன் மனோஜ்குமார் சொந்தாலியாதான் என்பதில் சந்தேகமில்லை.

கார்ட்டூனிஸ்ட் மதி இடையில் ஒன்றரை மாதம் விடுப்பில் சென்றபோது ஏராளமானோர் கார்ட்டூன் குறித்து தொலைபேசியில் விசாரித்தனர். விஷயத்தைச் சொன்னதுதான் தாமதம். வாசகர்களை தவிக்கவிடாமல் விடுப்பை முடித்துக்கொண்டு ஓடிவந்துவிட்டார் மதி. அவரைப் பொருத்தவரை இது ஒரு தொழிலல்ல, தவம்.

மதியின் கார்ட்டூன்களில் எந்தவிதமான தொய்வும் இருக்காது. ஆற்றுப் பிரவாகம் போல் நினைத்த நேரத்தில் கார்ட்டூன்கள் வந்து விழுந்து விடும். இந்தியாவில் ஓரிருவருக்கு மட்டுமே இந்த வரம் வாய்த்துள்ளது' என்றார் கே. வைத்தியநாதன்.

மதியின் "அடடே!' தொகுப்புகளை அப்துல் கலாம் வெளியிட, பெற்றுக்கொண்ட சுவாமி ஆத்மகனானந்தா, "கல்கி' ராஜேந்திரன், நடிகை மனோரமா, கிரேசி மோகன் ஆகியோரை அவர் வரவேற்றுப் பேசினார்.

எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் எரிந்து நாசம், பயங்கர தீ விபத்து

ஏப்.25-வேலூரில் எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் திருத்தும் மையத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான விடைத்தாள்கள் எரிந்து நாசமானது எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் வேலூர் ஊரீஸ் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 21-ந் தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்து வருகிறது.

இந்த மையத்தில் உள்ள மத்திய மண்டபத்தில் மொத்தம் 30 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. 450 ஆசிரியர்கள் காலையிலும், மாலையிலும் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விடைத்தாள்கள் அனைத்தும் சென்னை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவை என்று கூறப்படுகிறது.

விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்ததும் ஆசிரியர்கள் திருத்திய விடைத்தாள்களை மையத்தில் உள்ள பெரிய அறையில் வைத்து பூட்டி விடுவார்கள். திருத்த வேண்டிய விடைத்தாள்களும் அதே அறையின் இன்னொரு பக்கத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நேற்று இரவு 10 மணி அளவில் விடைத்தாள்கள் வைக்கப்பட்டு இருந்த அறையில் இருந்து குபு, குபு வென்று புகை வந்தது. தொடர்ந்து அந்த அறை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்ததும் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு நிலையத்திற்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் ஆயிரக்கணக்கான விடைத்தாள்கள் எரிந்து நாசமானது.

தகவல் கிடைத்ததும் வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி சுந்தரமூர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுச்செல்வம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பிச்சை ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தீ விபத்துக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.

இந்த தீ விபத்து குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பிச்சை நிருபர்களிடம் கூறும்போது, வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள்கள் இந்த மையத்தில் வைக்கப்பட்டு உள்ளன. தீ விபத்து பற்றி விசாரணை நடத்திக்கொண்டு இருக்கிறோம். விசாரணை முடிந்து பிறகுதான் சேதம் எந்த அளவு என்பதை கூறமுடியும் என்றார்.

நன்றி- தினத்தந்தி

கோவையில் பிளாஸ்டிக் தடை அமல்

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை நேற்று முதல் கோவை மாநகராட்சியில் அமலுக்கு வந்தது. இதுகுறித்து மேயர் வெங்கடாசலம் கூறியதாவது: ஒருமுறை மட்டும் பயன் படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் சாக்கடை அடைப்பு, நிலத்தடி நீர் பாதிப்பு என பல்வேறு சீர்கேடுகள் ஏற்படுகின்றன. எதிர்கால சந்ததியினருக்காக இப்போதே தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பிளாஸ்டிக் தடை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாநகரத்தில் உள்ள மக்கள் ஒருமுறை மட்டும் பயன்படுத் தப்படும் பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்துவதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். இத்தடையை மீறும் பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிப்பவர்களுக்கு ரூ.5,000, மொத்த விற்பனையாளர் களுக்கு ரூ.2,500, சில்லறை விற்பனையாளர்களுக்கு ரூ.750, உபயோகிப்பாளர்களுக்கு ரூ.100 என அபராதம் விதிக்கப்படும், என்று கூறினார்.


உணவுத் தட்டுப்பாடு - பயோ எரிபொருள் காரணமா?

பயோ எரிபொருளை அதிக அளவில் பயன்படுத்துவது குறித்து உலகத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

பெட்ரோல் விலையேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக மாற்று எரிபொருளுக்கான முயற்சி தீவிரமடைந்துள்ளது. பல நாடுகளில் பயோ எரிபொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் தற்போது ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கு முக்கிய பயிர்கள், பயோ எரிபொருளுக்கு திருப்பி விடப்பட்டது காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் பொலிவிய அதிபர் மோரல்ஸ் மற்றும் பெரு அதிபர் கார்சியா, பயோ எரிபொருளை அதிக அளவில் பயன்படுத்துவது விவசாயத்திற்கு பாதகமாக அமையும் என்று எச்சரித்துள்ளனர்.



Thursday, April 24, 2008

இலண்டன் நான்கு இலட்சம் பேர் வேலை நிறுத்தம்

சம்பள உயர்வு, சம்பள பாக்கி போன்றவற்றை வலியுறுத்தி வியாழன் (24-04-2008) அன்று இலன்டன் முழுவதும் பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதும் சுமார் 8000 பள்ளிகள் ஒரு நாள் மூடப்பட்டன.

ஆசிரியர்களின் இந்த வேலைநிறுத்ததிற்கு ஆதரவு தெரிவித்து கல்லூரி பேராசிரியர்கள், அரசு அலுவலர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இரண்டு இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட தேசிய ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததிறுந்தது. சம்பள பிரச்சினைக்காக ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் கடந்த இருபது ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

இது பற்றி பிரதமர் கருத்து தெரிவிக்கையில் பத்தாண்டுகளாக கல்விக்கு அதிக ஒதிக்கீடு செய்திருப்பதாக தெரிவித்தார்.

சாம்சுங் தலைவர் பதவி விலகினார்

தென் கொரிய நிறுவனமான சாம்சுங்கின் தலைவர் லீ குன் ஹீ பதவி விலகியுள்ளார். வரி ஏய்ப்பு, நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் அவர் மீது சாட்டப்பட்டுள்ளன. அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட ஒரு வாரத்தில் அவர் பதவி விலகியிருக்கிறார்.


செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் தனது முடிவை அறிவித்தார். தென் கொரியாவின் ஊழல் ஒழிப்பு நிறுவனம் கடந்த மூன்று மாதங்கள் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து லீ மீது குற்றம் சாட்டப்பட்டது. தான் தவறு எதுவும் செய்யவில்லை என்று கூறிய லீ, நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தான் வருந்துவதாகக் கூறினார்.
அவருக்குப் பதிலாக சாம்சுங் நிறுவனத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்பது தெரியவில்லை.
நன்றி: வாஷிங்டன் போஸ்ட்.

வணிகர்கள் மாநாட்டுக்கு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது த.வெள்ளையன் அறிவிப்பு

வணிகர்கள் மாநாட்டுக்கு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது த.வெள்ளையன் அறிவிப்பு

வணிகர்கள் மாநாட்டுக்கு அனைத்து கட்சி தலை வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்று த.வெள்ளையன் தெரிவித்தார்.
பொருளாதார சீர்குலைவு
தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் பரமக்குடி யில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசின் தவறான பொருளா தார கொள்கையும், தேவை யற்ற வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதியும், தேவை யற்ற வரிகளும் இந்திய பொருளா தாரத்தை சீர்குலைத்து வரு கிறது. சிறு வியாபாரிகளை நசுக்கும் நோக்கத்தில் ரிலை யன்ஸ் கடைகள் திறக்கப் பட்டு வருகிறது. பல வட மாநிலங்களில் வியாபாரிகள் பாதிக்கப்பட்டதால், ரிலை யன்ஸ் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
மாநில மாநாடு
தற்போது தமிழகத்திலும் ரிலையன்ஸ் ஆதிக்கம் தலை விரித்து ஆடுவதால் அவற்றை அடித்து நொறுக்க தயாராகி வருகிறோம். இது போன்ற வர்த்தகத்துக்கு ஆதரவாக இருக்கும் அரசியல் தலைவர் களுக்கு வியாபாரிகளின் நிலையை விளக்குவதற்காக வருகிற மே 5-ந்தேதி சென்னை மாதவரம் காமராஜர் திட லில் வணிகர் சங்கங்களின் வெள்ளிவிழா மாநாடு நடத் தப்படுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்கு மாறு அனைத்து கட்சி தலை வர்களுக்கும் அழைப்பு விடுக் கப்பட்டு உள்ளது. அவர் களின் முன்னிலையில் வணிகர்க ளின் கோரிக்கைகள் வலியு றுத்தப்படும். இந்த மாநாட் டில் ராமநாதபுரம் மாவட்ட வணிகர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது பரமக்குடி வியா பாரிகள் சங்க தலைவர் காசி, பொதுச்செயலாளர் ஜபருல் லாகான், துணை தலைவர் ராசி என்.போஸ், இணை செயலாளர் மோகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

மதானி உள்பட 7 பேரின் விடுதலையை ரத்து செய்யக் கோரி மறுஆய்வு மனு

மதானி உள்பட 7 பேரின் விடுதலையை ரத்து செய்யக் கோரி மறுஆய்வு மனு

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மதானி உள்பட 7 பேரின் விடுதலையை ரத்து செய்யக் கோரி, உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் அப்துல் நாசர் மதானி உள்பட 7 பேரை விடுதலை செய்து கோவை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்துவிட்டு அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட்ட எஸ்.ஏ. பாஷா உள்பட 43 பேருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்' என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு மறுஆய்வு மனுக்கள் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கே. வெள்ளியங்கிரி (60) சார்பில் வழக்கறிஞர்கள் பிரபு மனோகர், டி.வி.கிருஷ்ணமாச்சாரி, ஏ.ஸ்ரீதர் மூர்த்தி ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.

புகைப்படங்களை ஆதாரமாக வெளியிட்டார்நடிகர் மணிவண்ணன் மகன் மீது பெண் டைரக்டர் பரபரப்பு புகார்

புகைப்படங்களை ஆதாரமாக வெளியிட்டார்நடிகர் மணிவண்ணன் மகன் மீது பெண் டைரக்டர் பரபரப்பு புகார்`காதலித்து ரகசிய திருமணம் செய்துவிட்டு தூக்கி எறிந்துவிட்டார்'

டைரக்டரும், நடிகருமான மணிவண்ணனின் மகன் மீது `நேபாளி' படத்தின் உதவி பெண் டைரக்டர் பரபரப்பாக போலீஸ் கமிஷனரிடம் புகார் கூறியுள்ளார். காதலித்து ரகசிய திருமணம் செய்துவிட்டு, தற்போது தன்னை தூக்கி எறிந்துவிட்டதாக தனது புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
பெண் டைரக்டர் ஸ்டெபி
`நேபாளி' படத்தில் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர் ஸ்டெபி (வயது 20). இவர், சென்னை விருகம்பாக்கம் சாய்நகர், 2-வது மெயின் ரோட்டில் வசிக்கிறார். இவர் நேற்று தனது தந்தை செல்வம், தாயார் மாலா ஆகியோருடன் வந்து சென்னை போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இணையதளம் மூலம் காதல்
`எனது தந்தை செல்வம் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். தாயார் மாலா சினிமாவில் உதவி டான்ஸ் மாஸ்டராக பணிபுரிகிறார். எனது பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை. சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. `விஷுவல் கம்ïனிகேஷன்' 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். எனது தாயாருக்கு சினிமாவில் தொடர்பு இருப்பதால், எனக்கும் திரையுலகில் நிறைய பேரை தெரியும். `ஆர்குட்' இணையதளத்தில் எனது படம் மற்றும் முகவரியை வெளியிட்டிருந்தேன்.
இதை பார்த்து டைரக்டரும், நடிகருமான மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன், என்னை இன்டர்நெட்டில் தொடர்பு கொண்டார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந் தேதி இன்டர்நெட் மூலம் அவர், என்னுடன் முதன் முதலில் பேசினார். சினிமா டைரக்டர் ஒருவர், அவர் நல்ல பையன் என்று தெரிவித்தார். அதன் அடிப்படையில் நானும், அவரிடம் இன்டர்நெட்டில் பேசி வந்தேன். முதலில் நண்பர்களாக தான் பேசினோம். ரகுவண்ணன் தான் என்னை காதலிப்பதாக முதலில் தெரிவித்தார். அதன்பிறகு நானும், அவரும் நேரில் சந்தித்தோம். நானும் அவரை காதலித்தேன்.
பெண் கேட்டனர்
அவர் `மாறன்', `தொடக்கம்' என்ற 2 படங்களில் நடித்தார். அந்த படங்கள் வெற்றி அடையவில்லை. 9-ம் வகுப்பு வரை படித்துள்ள அவர் கம்ப்ïட்டரை கையாளுவதிலும் நல்ல அறிவு திறன் பெற்றவர். அவரது தந்தை டைரக்டர் மணிவண்ணன் மீது, எனது பெற்றோர் நல்ல மரியாதை வைத்திருந்தனர். இதனால் நானும், ரகுவண்ணனும் ஒன்றாக சுற்றித் திரிந்ததை எனது பெற்றோர் எதிர்க்கவில்லை.
என்னை திருமணம் செய்து கொள்ள ரகுவண்ணன் விரும்பினார். எனது பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதித்தனர். டைரக்டர் மணிவண்ணனின் மானேஜரும், உறவினர் ஒருவரும், எனது பெற்றோரை சந்தித்து ரகுவண்ணனுக்கு என்னை பெண் கேட்டனர். மணிவண்ணனின் சம்மதத்தின் பேரிலேயே இது நடந்தது. மணிவண்ணன், எனது தாயாரிடம் போனிலும் பேசி சம்மதம் தெரிவித்தார்.
தாலி கட்டினார்
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந் தேதி அன்று சென்னை கே.கே.நகர் 15-வது செக்டரில் உள்ள அவரது வீட்டுக்கு ரகுவண்ணன் காரில் என்னை அழைத்து சென்றார். வீட்டிற்கு போய் பார்த்தபோது அங்கு யாரும் இல்லை. ரகுவண்ணனின் தாயார் மற்றும் அக்காள் ஆகியோரும் வெளியில் போய்விட்டனர். மணிவண்ணனும் வீட்டில் இல்லை. ரகுவண்ணன் நான் இப்போதே உனக்கு தாலி கட்டி, எனது மனைவியாக்கி கொள்ள போகிறேன் என்று சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
நான் அதற்கு சம்மதிக்கவில்லை. முதலில் உன்னை ரகசிய திருமணம் செய்து கொள்கிறேன், பின்னர் ஊரறிய திருமணம் செய்து கொள்கிறேன் என்று ரகுவண்ணன் கூறினார். அவ்வாறு சொன்னதோடு நிற்காமல், அவரது பாட்டியின் புகைப்படத்துக்கு முன்பு என்னை நிற்க வைத்தார். பாட்டியின் படத்தின் முன்பு தங்க தாலி கோர்க்கப்பட்ட மஞ்சள் கயிறும், மெட்டியும் இருந்தது. மஞ்சள் கயிறு தாலியை எனது கழுத்தில் கட்டி, மெட்டியை எனது காலில் ரகுவண்ணன் அணிந்துவிட்டார். இந்த சம்பவம் நான் எதிர்பாராத வகையில் நடந்துவிட்டது.
நெருக்கமான பழக்கம்
இந்த சம்பவத்திற்கு பிறகு ரகுவண்ணனும், நானும் நெருக்கமாக பழக ஆரம்பித்தோம். அவர் எனக்கு முத்தம் கொடுப்பது உள்பட அனைத்து `செக்ஸ்' குறும்புகளையும் செய்வார். ஆனால், உடல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ளாமல் நான் ஜாக்கிரதையாக பார்த்துக்கொண்டேன். இந்த நிலையில், சமீபத்தில் திடீரென்று ரகுவண்ணன் ஒரு குண்டை தூக்கிப்போட்டார்.
தாயார் மறுப்பு
`திருமணத்துக்கு தனது தாயார் மறுப்பதாகவும், எனவே, என்னை மறந்துவிடு' என்றும் ரகுவண்ணன் கூறினார். இதை கேட்டதும் `எனது தலையில் இடி விழுநëதது போல் இருந்தது'. அதன்பிறகு ரகுவண்ணன், என்னுடன் உள்ள தொடர்பை துண்டித்துக்கொண்டார். என்னோடு பேசுவதையும் நிறுத்திக்கொண்டார். என்னை மிரட்ட ஆரம்பித்தார். டைரக்டர் ஒருவர் மூலம் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். `என்னை மறக்காவிட்டால் ஆசிட் ஊற்றி கொன்றுவிடுவேன்' என்றும் அடிக்கடி போனில் மிரட்டினார். அவர் செல்வாக்கு மிக்கவர். அவரால், எனக்கும், எனது பெற்றோரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சுகிறேன்.
புகைப்படம் ஆதாரம்
ரகுவண்ணனும், நானும் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ பட காட்சிகள் லேப்-டாப் கம்ப்ïட்டரில் பதிவு செய்து வைத்துள்ளேன். இந்த படங்களை ரகுவண்ணனே எடுத்தார். அவர், எனக்கு தாலி கட்டியதை கூட வீடியோ படமாக எடுத்திருந்தார். பின்னர் அதை அழித்துவிட்டார். திரையுலக பிரமுகர்கள் அனைவரிடமும் என்னை, அவரது மனைவி என்று ரகுவண்ணன் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், திடீரென்று என்னை திருமணம் செய்ய மறுத்து தூக்கி எறிந்து பேசுகிறார். என்மீது மகளிர் ஆணையத்தில் பொய்யான புகார் கொடுத்துள்ளார். அவர் இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை. 3 நாட்களாக எனக்கு சாப்பாடு பிடிக்கவில்லை. தூக்கம் வரவில்லை. உலகமே இருட்டாக உள்ளது. அவரோடு சேர்ந்து வாழ்வதே எனது குறிக்கோள். அவரை அடையாமல் விடமாட்டேன். உயிருக்கு உயிரான காதலை தனது தாயாருக்காக ஒரே நொடியில் சாகடிக்க பார்க்கிறார். இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு உதவி பெண் டைரக்டர் ஸ்டெபி தெரிவித்தார்.
படங்களை காட்டினார்
ரகுவண்ணனோடு நெருக்கமாக இருக்கும் வீடியோ பட காட்சிகளை ஸ்டெபி, நிருபர்களுக்கு போட்டு காண்பித்தார். வீடியோவில் சில படங்களில் அவர்கள் இருவரும் மேலாடை இல்லாமல் நெருக்கமாக இருக்கும் காட்சிகளும், ரகுவண்ணன், ஸ்டெபிக்கு முத்தம் கொடுக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது. இநëத வீடிய பட ஆதாரங்களை எல்லாம் ஸ்டெபி போலீசாரிடம் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தால் கமிஷனர் அலுவலகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. ஸ்டெபியின் தாயார் மாலா, `எனது மகள் காதல் போராட்டத்தில் இறங்கி இருக்கிறாள். கண்டிப்பாக அவள் வெற்றி பெற்றே தீருவாள்' என்று தெரிவித்தார்.

நேரு யுவகேந்திராவுக்கு சேவை தொண்டர்கள் தேர்வு

நேரு யுவகேந்திராவுக்கு சேவை தொண்டர்கள் தேர்வு

சென்னை மாவட்ட நேரு யுவகேந்திராவுக்கு 2008-09-ம் ஆண்டுக்கான தேசிய சேவை தொண்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இளைஞர், மகளிர் வளர்ச்சிக்காக சமூகப் பணி, மன்றங்கள் அமைத்தல், சுய உதவிக் குழுக்கள் ஆரம்பித்தல் போன்ற சமூகப் பணிகள் செய்வதற்கு ஆர்வமுடைய சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பணியின் காலம் அதிகபட்சம் 2 ஆண்டுகள் ஆகும். இப் பணிக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ. 1000 வழங்கப்படும். பட்டதாரிகளாகவும், 1.4.85-க்கு பிறகு பிறந்தவராகவும், 23 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின ஆண்கள், பெண்கள் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவராகவும், 1.4.82-க்குப் பிறகு பிறந்தவராகவும் இருக்க வேண்டும். கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பவர்கள், வேலையில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
மேற்கண்ட தகுதியுடையவர்கள் வரும் மே 2-ம் தேதி காலை 9 மணிக்கு, எண் 3, 4-வது குறுக்குத் தெரு, டாக்டர் சீதாபதி நகர் (விரிவு), வேளச்சேரி, சென்னை-42 என்ற முகவரியில் உள்ள நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் தக்க சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளலாம் என ஆட்சியர் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

மகன்களின் நிறுவனங்களுக்கு கேஸ் சப்ளை-சிக்கலில் டி.ஆர்.பாலு!

மகன்களின் நிறுவனங்களுக்கு கேஸ் சப்ளை-சிக்கலில் டி.ஆர்.பாலு!

தனது மகன்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நலன் கருதி, அந்த நிறுவனங்களுக்கு எரிவாயு சப்ளை செய்யுமாறு பெட்ரோலியத் துறையை தான் கேட்டுக் கொண்டது உண்மைதான் என்று மத்திய கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன்களான டி.ஆர்.பி. செல்வக்குமார், கிங்ஸ் இந்தியா பவர் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தையும், டி.ஆர்.பி. ராஜ்குமார் கிங்ஸ் இந்தியா கெமிக்கல் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்களில் டி.ஆர்.பாலுவின் இரு மனைவியரான டி.ஆர்.பி பொற்கொடி, டி.ஆர்.பி. ரேணுகா தேவி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர்.பிரச்சினை என்னவென்றால், தனது மகன்களுக்குச் சொந்தமான மேற்கண்ட இரு நிறுவனங்களுக்கும் சலுகை விலையில், நரிமணம் மற்றும் குத்தாலத்திலிருந்து இயற்கை எரிவாயுவை சப்ளை செய்ய டி.ஆர்.பாலு ஓ.என்.ஜி.சி மற்றும் கெய்ல் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார் என்பதுதான்.சுவாமி கிளப்பிய புயல்!:இதுதொடர்பாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், டி.ஆர்.பாலுவின் இரு மகன்களுக்கும் சொந்தமான, அவரு இரு மனைவியரும் பெருமளவிலான பங்குகளை வைத்துள்ள கிங்ஸ் இந்தியா பவர் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் கிங்ஸ் இந்தியா கெமிக்கல் நிறுவனம் ஆகியவற்றுக்கு சலுகை விலையில், எரிவாயுவை சப்ளை செய்யுமாறு ஓ.என்.ஜி.சி, மற்றும் கெய்ல் நிறுவனங்களுக்கு டி.ஆர்.பாலு உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக கடந்த 2007ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி கெய்ல் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் செளபேயை தனது அலுவலகத்திற்கு அழைத்து, காவிரிப் படுகைப் பகுதியிலிருந்து தனது மகன்களின் நிறுவனங்களுக்கு எரிவாயுவை அனுப்புமாறு ஓ.என்.ஜி.சி. நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.சர்மாவைக் கேட்டுக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.ஆனால், இந்த இரு நிறுவனங்களுக்கும் கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் சலுகை விலையில் எரிவாயு அளிக்கப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு மின் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு அப்போதைய பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன. ஆனால் அதற்குப் பலன் இல்லாததால், சென்னை மற்றும் டெல்லி உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு இடைக்காலத் தடை உத்தரவும் பெறப்பட்டுள்ளது.'அதிகார துஷ்பிரயோகம்':எனவே டி.ஆர்.பாலு தனது மகன்களின் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் எரிவாயுவை சப்ளை செய்ய உத்தரவிட்டிருப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ள டி.ஆர்.பாலு மீது ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 11, 12, 13 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார் சுவாமி.பிப்ரவரி 28ம் தேதி பிரதமருக்கு ஒரு நினைவூட்டல் கடிதத்தையும் அனுப்பியுள்ளார் சுவாமி.மைத்ரேயன் கேள்வி-பாலு கோபம்!:இந் நிலையில் நேற்று இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் வெடித்தது.இதுகுறித்து ராஜ்யசபாவில் நேற்று அதிமுக உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் டி.ஆர்.பாலு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரினார்.அதற்குப் பதிலளித்த டி.ஆர்.பாலு, எனது குடும்பத்தாருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு எரிவாயு அளிக்க நான் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. முறையாக விதிமுறைகளை பின்பற்றியே எரிவாயு அனுமதி கோரப்பட்டது.தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நான் கிங்ஸ் கெமிக்கல்ஸ் மற்றும் கிங்ஸ் ஹை பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தேன். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் இணைந்த பின்னர் அந்தப் பதவியை நான் விட்டு விட்டேன்.கெய்ல் நிறுவனத்துடன் இந்த இரு நிறுவனங்களும் கடந்த 1999ம் ஆண்டு 10 ஆயிரம் கியூபிக் மீட்டர் எரிவாயுவைப் பெறுவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டன. ஆனால் 2003ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையிலிருந்து நான் ராஜினாமா செய்தவுடன் இந்த ஒப்பந்தத்தை பாஜக அரசு ரத்து செய்து விட்டது.இதில் என்ன தவறு?:இதனால் மேற்கண்ட இரு நிறுவனங்களும் பெரும் பாதிப்பை சந்தித்தன. நிறுவனங்களை மூட வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. அந்த நிறுவனங்களில் 40,000 ஷேர் ஹோல்டர்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கான ஊழியர்கள் உள்ளனர். அனைவரும் என்னை அணுகி தங்களது வேலை பறிபோகும் நிலை உள்ளது. எனவே நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கோரினர்.ஏராளமான தொழிலாளர்களின் நலன்கள் அவர்களின் எதிர்கால வாழ்க்கை ஆகியவற்றை கருத்திற்கொண்டும், பங்குதாரர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்கும் நோக்கத்திலும் இப்பிரச்னையை பெட்ரோலிய அமைச்சர் முன்பாக எடுத்து வைத்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது?. நான் தவறு ஏதும் செய்யவில்லை. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவும் இல்லை என்று கோபமாக பதிலளித்த டி.ஆர்.பாலு அதன் பின்னர் அவையை விட்டு வெளியேறி விட்டார்.அதன் பின்னர் பேசிய திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, இது நாடாளுமன்ற விவாதத்திற்கு அப்பாற்பட்ட விஷயம். அதை இங்கு எழுப்புவது சரியல்ல என்றார்.ஆனால் அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த பி.ஜே.குரியன், இந்த எதிர்ப்பை நிராகரித்தார். இதனால் திமுக தரப்பில் சலசலப்பு ஏற்பட்டது.பின்னர் பேசிய புதுச்சேரி எம்.பியும், அமைச்சருமான நாராயணசாமி, அதிமுக உறுப்பினர் தனது புகாருக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்றார். அதற்கு மைத்ரேயன், இதுதொடர்பாக செய்தித் தாளில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதைக் காட்டித்தான் நான் கேட்கிறேன். ஆதாரத்தை நிரூபிக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்றார்.லோக்சபாவிலும் சிக்கல்!:இந்த நிலையில், லோக்சபாவிலும் பாலுவுக்கு நேற்று எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக பிரச்சினையைக் கொடுத்தன.தேசிய நெடுஞ்சாலைகளில் அவசரத் தேவையான ஆம்புலன்ஸ்கள், கிரேன்கள் மற்றும் பிற வசதிகள் போதுமான அளவு இல்லை என பல எம்.பிக்கள் குற்றம் சாட்டினர். லோக்சபா தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, எம்.பிக்கள் சார்பில் கூறுகையில், எம்.பிக்கள், தங்கள் தொகுதிக்குச் செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலையில் காணும் குறைகளை தெரிவித்துள்ளனர். இதற்கு தாங்கள் பதிலளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பாலுவை கேட்டுக் கொண்டார்.இதற்கு பாலு பதிலளிக்கையில், மத்திய நெடுஞ்சாலைத் துறை சார்பில், பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை சில, மாநில அரசுகள் செயல்படுத்த தவறி விட்டன. தற்போது, பெருகிவரும் வாகன போக்குவரத்து காரணமாக நெடுஞ்சாலைப் பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. விரைவில் போதிய வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலை.': துணைவேந்தர் சி. ராமசாமி

முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலை.': துணைவேந்தர் சி. ராமசாமி

இந்தியாவில் உள்ள 44 வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முதலிடம் பெற்று சிறந்து விளங்குகிறது என்றார் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் சி. ராமசாமி.
லால்குடி அருகேயுள்ள குமுளூர் வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற விடுதி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி அவர் பேசியது:
"தமிழகத்தில் 11 இடங்களில் வேளாண்மை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 4 இடங்களில் வேளாண்மை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. கிராமப்புறத்தில் உள்ள குமுளூர் வேளாண்மைப் பொறியியல் கல்லூரியின் வேளாண்மை சார்ந்த ஆராய்ச்சிகள் சிறப்பாக உள்ளன. இந்தியாவில் உள்ள 44 வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்தான் முதலிடத்தில் உள்ளது. வேளாண்மைத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.
போட்டிகள் நிறைந்த இந்த உலகத்துக்கு ஏற்றவாறு மாணவ, மாணவிகள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். வேளாண்மைத் துறையில் தொழில் முனைவோர் அதிகளவில் உருவாக வேண்டும். அப்போதுதான் இந்தத் துறை மிகவும் சிறப்புற்று விளங்கும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் செய்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஆன்லைன், கனிணி போன்றவை மூலம் வேளாண்மை உள்ளிட்ட பிற துறையினர் கல்வி கற்கின்றனர். மாணவ, மாணவிகள் புதிய சிந்தனைகளை உருவாக்கிக் கொண்டால்தான் வேளாண்மைத் துறையில் மேலும் சிறப்பான செயல்களைச் செய்ய முடியும்' என்றார்.
விழாவுக்கு, கல்லூரி முதல்வர் கே. ரங்கசாமி தலைமை வகித்தார். கல்லூரி விடுதிக் காப்பாளர் ஏ. தாஜுதின், பேராசிரியர்கள் எஸ். வரதராஜன், கே. சண்முகசுந்தரம், விடுதி துணைக் காப்பாளர்கள் ஏ. சுரேந்திரகுமார், எஸ். டெய்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, மாணவர் பி. வினோத் வரவேற்றார். மாணவி ஆர். மைதிலி நன்றி கூறினார்.

இந்தியா: சீன ஒலிம்பிக்சுக்கு இதுவரை 28 பேர் தகுதி

இந்தியா: சீன ஒலிம்பிக்சுக்கு இதுவரை 28 பேர் தகுதி

சீனாவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா சார்பில் இதுவரை 28 வீரர்கள் தகுதி பெற்றுள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் தெரிவித்தார்.ராஜ்யசபாவில் நேற்று கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் கில் கூறியதாவது:சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடக்கவுள்ள 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 28 வீளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு 9 வீரர்கள், தடகளம் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளுக்கு தலா 5 வீரர்கள், வில்வித்தையில் 4 பேர், மல்யுத்தம் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிக்காக தலா 2 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதுதவிர ஒரு நீச்சல் வீரரும் தகுதி பெற்றுள்ளார்.இன்னும் மற்ற போட்டிகளுக்கு நடக்கும் தகுதிச் சுற்றுகள் அனைத்தும் முடிந்த பிறகுதான் எவ்வளவு பேர் தேர்வு பெற்றுள்ளனர் என்பதைக் கூறமுடியும்.சிறந்த வீரர்களை உருவாக்குவதற்குத் தேவையான பயிற்சி முகாம்கள், விஞ்ஞானபூர்வ உபகரணங்கள் வழங்குதல், வெளிநாட்டு பயிற்சியாளர் வசதி ஆகியவற்றை தேசிய விளையாட்டு சம்மேளனத்தின்மூலம் வழங்க இந்திய விளையாட்டுத்துறை ஆணையம் உதவி வருகிறது.பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள வீரர்களுக்கு தனிப்பட்ட பயிற்சியாளர்களை அமர்த்தி இந்திய அரசு சிறப்பு பயிற்சியை வழங்குவது குறிப்பிடத்தக்கது என்றார் கில்.சீனா மிரட்டலா?:மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், டெல்லியில் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தை நடத்தக்கூடாது என்று சீன அரசு நிர்பந்திக்கவில்லை. ஜோதி ஓட்டத்தின் பாதையை இந்திய ஒலிம்பிக் சங்கம்தான் தீர்மானித்தது என்றார்.

ஜாக்கிசான் இன்று சென்னை வருகிறார்

ஜாக்கிசான் இன்று சென்னை வருகிறார்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இன்று இரவு 10 மணிக்கு சென்னை வந்தடைகிறார் ஜாக்கிசான். பின்னர், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில் தங்குகிறார். ஏப்ரல் 25-ம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் "தசாவதாரம்' பட ஆடியோ சிடி வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அன்றைய தினம் இரவு 11.45 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி எய்ம்ஸ்க்கு இணையாக புதுவை ஜிப்மருக்கு தன்னாட்சி அதிகாரம்

டெல்லி எய்ம்ஸ்க்கு இணையாக புதுவை ஜிப்மருக்கு தன்னாட்சி அதிகாரம்

புதுவை ஜிப்மருக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரம் வழங்க மாநிலங்களவையில் மசோதா நேற்று நிறைவேறியது. புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லுரி மருத்துவமனைக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் குளிர கால கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து மசோதாவில் பல திருத்தங்களை மத்திய அரசு செய்தது. இந்த மசோதா மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் அன்புமணி பேசியதாவது: உறுப்பினர்கள் கூறிய திருத்தங்கள செய்யப்பட்டு புதிய மசோதாவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்துக்கு (எய்ம்ஸ்) இணையான தன்னாட்சி அதிகாரம் ஜிப்மருக்கு கிடைக்கும்.

http://www.puduvaitamilsonline.com/news50.html

'சங்கரா டிவி': சேனல் தொடங்கும் காஞ்சி மடம்

'சங்கரா டிவி': சேனல் தொடங்கும் காஞ்சி மடம்

காஞ்சி மடத்தின் சார்பில் புதிய தொலைக்காட்சி தொடங்கப்படவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த தொலைக்காட்சி சேவை தொடங்கப்படுகிறது.சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கித் தவித்து வரும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் துவங்கவுள்ள இந்த டிவியின் பெயர் சங்கரா டி.வி.இதில் இந்து சமயம் குறித்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.காஞ்சி காமக்கோடி பீடம் டிரஸ்ட் சார்பில் தொடங்கப்படும் இந்த டிவிக்கான அலுவலகம், ஊழியர்கள், கருவிகள் எல்லாம் தயாராக உள்ளன.இன்னும் 2 வாரங்களில் லைசென்ஸ் வந்து சேர்ந்துவிடும் எனத் தெரிகிறது இதையடுத்து 20 நாட்களுக்குள் சங்கரா டி.வி தனது ஒளிபரப்பை துவக்கும் என காஞ்சி மட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கோவில்கள், ஆன்மிக நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், பஜனை, கர்நாடக இசை, அதிகாலையில் சுப்ரபாதம் என இந்து மதம் குறித்த நிகழ்ச்சிகள் இதில் இடம் பெறும்.தினமும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இதில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகுமாம்.

ஒரு வரி செய்திகள்.

தேனாம்பேட்டையில் இயங்கி வந்த சன் டிவி அலுவலகம் தற்போது மந்தைவெளிக்கு மாற உள்ளது.

தமிழ்நாட்டில் விரைவில் 6 புதிய தனியார் அலைவரிசைகள் துவங்க உள்ளன.

சென்னையில் 1500 கோடியில் தகவல் தொழில் நுட்ப பொருளாதார மண்டலம். முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது.

சரப்ஜித் தண்டனை தள்ளிவைப்பு!

ராஜ‌ஸ்தா‌னி‌ல் சாலை ‌விப‌த்‌து: 5 குழ‌ந்தைக‌ள் உ‌ள்பட 24 பே‌ர் ப‌லி!

இல‌ங்கை‌யி‌ல் கடும் போர் பல‌ர் ப‌லி.

சென்னை அணி வெற்றி.

டோனி தலைமையிலான சென்னை அணி, ஹர்பஜன் தலைமையிலான(பொறுப்பு) மும்பை அணியுடன் நேற்று மோதியது. பரபரப்பாக நடந்த இவ்வாட்டத்தில் சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வென்றது. முன்னதாக களமிறங்கிய சென்னை அணி நிர்ணயக்கபட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஹைடன் 81 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது, ஆனால் 12 ரன்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக அபிஷேக் நாயர் 45 ரன்கள் எடுத்தார்.

Wednesday, April 23, 2008

டிஎன்ஏ பரிசோதனை முடிவு: ஃபர்கத் பேகத்துக்கு ஆண் குழந்தை

சென்னை மருத்துவமனையில் குழந்தைகள் மாறிய பிரச்னையில் ஃபர்கத் பேகத்துக்குத்தான் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது என டிஎன்ஏ பரிசோதனையில் ஊர்ஜிதமாகியுள்ளது.

காமாட்சிக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது என்று டிஎன்ஏ பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஆறு தினங்களாக நீடித்து வந்த ஆண் - பெண் குழந்தைகள் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

இதை ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையின் தலைமை அமைப்பான அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் மைதிலி பாஸ்கரன் புதன்கிழமை மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஃபர்கத் பேகத்திடம் ஆண் குழந்தையையும் காமாட்சியிடம் பெண் குழந்தையையும் அவர் ஒப்படைத்தார்.

முன்னதாக ஒரே வார்டில் அறுவைச் சிகிச்சை மூலம் பிறந்த இந்த குழந்தைகள் செவிலியர்களின் கவனக்குறைவுக் காரணமாக மாற்றி வைத்துவிட்டனர்.

புதிய பெயரில் கட்சி தொடக்கம்?

மாசில்லா மதிமுக அல்லது புதிய பெயரில் கட்சி தொடங்குவது குறித்து மாவட்டம்தோறும் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என்றார் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எல். கணேசன்.
சிறுநீரகக் கோளாறு காரணமாக தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
வைகோ அதிமுகவில் இணைந்தால், அடுத்த நாளே நாங்கள் திமுகவில் இணைவோம். வைகோ திமுகவில் இணைந்தால் அதை வரவேற்று நாங்களும் அவருடன் சேர்ந்து திமுகவில் இணைவோம் என்றார் எல். கணேசன்.

தமிழுக்கு அவமானம்: நெல்லை கண்ணன்

விவேகானந்தர் நினைவு இல்லத்தை அகற்றுவது அன்னைத் தமிழை அவமதிப்பதாகும் என்றார் இலக்கியவாதி நெல்லை கண்ணன்.

இதுகுறித்து நெல்லை கண்ணன் மேலும் கூறியதாவது:

"சிகாகோ மாநாட்டில் இந்து மதத்தின் சார்பில் விவேகானந்தர் உரையாற்றச் சென்றபோது, அவருக்குச் செலவு செய்து அவரை சிகாகோவுக்கு அனுப்பிவைத்தது ராமநாதபுரம் மன்னர் தமிழ்வளர்த்த பாஸ்கர சேதுபதி.
அவரை அனுப்பிவைத்தது மட்டுமல்ல, அத்தனை பெரிய வெற்றியை அமெரிக்க மண்ணில் அடைந்து வருகிற விவேகானந்தர் தமிழ்நாட்டில்தான் கப்பலில் வந்து இறங்க வேண்டும் என்று மன்னர் பாஸ்கர சேதுபதி ஏற்பாடு செய்தார்.

பாம்பன் துறைமுகத்தில் விவேகானந்தர் இறங்கும் நேரத்தில் உணர்ச்சிவயப்பட்ட மன்னர் கீழே அமர்ந்து, "என் தலையில் தங்களின் திருப்பாதங்களை வைத்து இறங்க வேண்டும்' என்றார் விவேகானந்தரிடம். ஆனால், விவேகானந்தரோ மன்னரின் தலையில் கைவைத்து தாண்டி வந்தார். பின்னர், விவேகானந்தர் ஏறிய குதிரை வண்டியை குதிரைக்குப் பதில் தானே இழுத்தார் மன்னர்.

அப்படி தமிழின் மீது மிகுந்த பற்று கொண்ட மன்னர் சேதுபதியால் வணங்கப்பட்ட விவேகானந்தரின் மண்டபத்தை இடித்துவிட்டு, அதில் செம்மொழி மையத்தை அமைப்பது என்பது மன்னர் பாஸ்கர் சேதுபதியையும் அவமதிப்பதாகும்.
அதுவரை உலகத்தில், ""சீமான்களே, சீமாட்டிகளே'' என அழைத்து வந்ததை மாற்றி ""சகோதர, சகோதரிகளே'' என்று பேசியவர் வீரத்துறவி விவேகானந்தர். விவேகானந்தரை உலகம் அறியச் செய்தது சேதுபதி மன்னர்தான்.

அப்படிப்பட்ட விவேகானந்தரின் நினைவு மண்டபத்தை இடித்துவிட்டு, அதில் செம்மொழி மையத்தை ஏற்படுத்தினால், தமிழ் மன்னரால் உலகிற்கு அனுப்பிவைக்கப்பட்ட ஒரு மாபெரும் வீரனின், அறிஞனின், ஒரு சமூக விஞ்ஞானியின் பெருமையை தமிழர்கள் இழிவுபடுத்தினார்கள் என்ற களங்கம் நமக்கு வந்து சேரும். அந்த அவமானம் தமிழர்களுக்குச் சேருவதை தமிழக அரசு உடன் தடுத்து நிறுத்த வேண்டும். "

"ஓர் ஏழைக் குழந்தையின் பசிக்கு ஒரு துண்டு ரொட்டி தர முடியாத, ஒரு இளம் விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத எந்த ஒரு மதத்தையும் நான் மதம் என்று ஏற்றுக்கொள்ள மாட்டேன்'' என்று சொன்ன மிகப்பெரிய சிந்தனையாளர் விவேகானந்தர். அப்படிப்பட்டவரது நினைவு இல்லத்தை அப்புறப்படுத்துவது அன்னைத் தமிழை அவமதிப்பதாகும் என்றார் நெல்லை கண்ணன்.

கிராம நூலகத்திலும் இணையம்

கணிப்பொறி மூலம் நூலகங்களை இணைக்க அரசு படிப்படியாகத் திட்டம் தீட்டி வருகிறது. மாவட்ட நூலகங்களில் உள்ள இன்டர்நெட் இணைப்பு வசதிகளைப் போல் கிளை நூலகங்களிலும் உருவாக்கும் நடவடிக்கைகளைம் அரசு மேற்கொண்டுள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழகச் சட்டசபையில் ஏப்ரல் 21 அன்று, கேள்வி நேரத்தின் போது எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன் (பண்ருட்டி, பா.ம.க.), கோவிந்தசாமி (திருப்பூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சி.வி.சண்முகம் (திண்டிவனம், அ.தி.மு.க.), ஹசன்அலி (ராமநாதபுரம், காங்கிரஸ்), அப்பாவு (ராதாபுரம், தி.மு.க.) ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துப் பேசிவதாவது:-

"கடலூர் மாவட்டம் நடுக்குப்பம் கிராமத்தில் பகுதி நேர நூலகம் திறக்க பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இன்னும் சில வாரங்களில் ஆவன செய்யப்படும். மக்கள் தொகை அடிப்படையில் பகுதி நேர நூலகம் தொடங்கப்படுகிறது. தற்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள முயற்சியால், பஞ்சாயத்துகளில் கூட கிராமம் தோறும் நூலகங்களைத் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கம்ப்யூட்டர் மூலம் நூலகங்களை இணைக்க அரசு படிப்படியாகத் திட்டம் தீட்டி வருகிறது. மாவட்ட நூலகங்களில் உள்ள இன்டர்நெட் இணைப்பு வசதிகளைப் போல் கிளை நூலகங்களிலும் உருவாக்கும் நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது".

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

தாஜ்மஹால் நுழைவுக் கட்டணம்

தாஜ்மஹாலைச் சென்று பார்ப்பதற்கு நுழைவுக் கட்டணமாக, இந்திய குடிமக்களிடம் வசூலிக்கப்படும் தொகையே, சார்க் மற்றும் பிம்ஸ்டெக் நாடுகளைச் சேர்ந்த குடிமக்களிடமும் இனி வசூலிக்கப்படும் என்று மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் திருமதி அம்பிகா சோனி தெரிவித்துள்ளார்.

இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம், இந்தியர்களிடமிருந்து ரூ.10 ஐ நுழைவுக் கட்டணமாக வசூலிப்பதாகவும் இனி இத்தொகையே சார்க் நாடுகள் மற்றும் பிம்ஸ்டெக் (பங்களாதேஷ், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து பொருளாதார கூட்டமைப்பு) நாடுகளைச் சேர்ந்த குடிமக்களிடமும் வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற நாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடம் நபர் ஒன்றுக்கு ரூ.250 வீதம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆக்ரா வளர்ச்சி ஆணையம் சார்க் மற்றும் பிம்ஸ்டெக் நாடுகள் உள்ளிட்ட அனைத்து அயல்நாட்டு பயணிகளிடமும் ரூ.500 ஐயும், இந்திய சுற்றுலாப் பயணிகளிடம் ரூ.10 ஐயும் சுங்க வரியாக வசூலிக்கிறது. கடந்த மாதம் 5 ஆம் தேதியன்று இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம்,

தாஜ்மஹாலின் நுழைவுக் கட்டணம் தொடர்பாக வெளியிட்டுள்ள குறிப்பாணை இந்நிறுவனத்தின் நுழைவுக் கட்டணத்துக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஆக்ரா வளர்ச்சி ஆணையம் வசூலிக்கும் தீர்வைக்குப் பொருந்தாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் திருமதி அம்பிகா சோனி இத்தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

நேபாளியில் காட்சிகள் நீக்கம்

'நேபாளி' திரைப்படத்தில் காவல் துறையை அவமதிக்கும் காட்சிகளை நீக்குவதற்கு, அந்தப் படத்தின் இயக்குநர் துரை சம்மதம் தெரிவித்துள்ளார். சென்னை மாநகரக் காவல் துறை இணை ஆணையர் ரவியை நேரில் சந்தித்து அவர் இந்தத் தகவலை தெரிவித்தார்.

நடிகர் பரத், நடிகை மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்து வெளியான 'நேபாளி' திரைப்படத்தில் போலீசை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், அதை நீக்கிவிட்டு படத்தை திரையிட வேண்டுமென்றும், இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும், சென்னை மாநகரக் காவல் துறை இணை ஆணையர் ரவி, தனது வக்கீல் மூலம், படத்தின் இயக்குநர் துரைக்கு அறிவிக்கை (நோட்டீசு) அனுப்பினார். இதையடுத்து, 22.4.2008 அன்று மதியம் 1 மணியளவில் இணை கமிஷனர் ரவியை அவரது அலுவலகத்தில் இயக்குநர் துரை சந்தித்துப் பேசினார். தன் படத்தில் காவல் துறையை இழிவுபடுத்திக் காட்சிகள் அமைத்ததற்காக அவர் வருத்தம் தெரிவித்தார். பின்னர் அத்தகைய அவமதிப்பு காட்சிகளை 'நேபாளி' படத்தில் நீக்கிவிடுவதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்.

பிறந்த குழந்தையின் கண்ணை எலி தின்றது

கொல்கத்தா அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தையின் கண்ணை எலி தின்றது. செவிலியர்களின் அஞாக்கிரதையால் பிறந்த குழந்தையின் கண்ணை குதறி தின்றது. இந்த துயர சம்பவம் பராஸத் மாவட்ட மருத்துவமனையில் சனிக்கிழமை வேலை நேரத்தில் நடந்துள்ளது. கண்ணை தின்றதோடல்லாமல் முகத்தையும் குதறியது. குழந்தை உடனே இறந்துவிட்டது.

இந்த சம்பவத்தை ஒத்துக்கொண்ட மருத்துவமனை நிர்வாகம், இந்த சம்பவத்திற்கு முன்னே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பா.விஜய்யின் 'மட்டரக' பாட்டு-ஜெ கடும் கண்டனம்

அமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதி தயாரிக்க, விஜய் நடிக்க உருவாகி வரும் படம் குருவி.இதில் ஒரு மட்டரகமான பாடலை எழுதியுள்ளார் பா.விஜய்.'தில்லையாடி வள்ளியம்மா.. தில்லிருந்தா நில்லடியம்மா.. தில்லாலங்கடி ஆடுவோமா.. திருட்டுத்தனம் பண்ணுவோமா' என்று தொடங்குகிறது இந்தப் பாடல்.

சுதந்திரப் போராட்ட வீராங்கனையான தில்லையாடி வள்ளியம்மையை இழிவுபடுத்தும் வகையிலான இந்தப் பாடலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இதையடுத்து அந்தப் பாடலை படத்திலிருந்து நீக்கிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் பா.விஜய்யின் இந்த எழுத்துக்கு கண்டனங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,'குருவி' என்ற திரைப் படத்தில், சுதந்திரப் போராட்ட வீராங்கனை தில்லையாடி வள்ளியம்மையை இழிவுபடுத்தும் விதமாக ஒரு பாடலை இடம் பெறச் செய்துள்ளனர்.இது தமிழக மக்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேசிய உணர்வு கொண்ட அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் செயலாகும்.

குருவி படத்தின் ஒலி நாடா வெளியிட்ட பின்பு, பலத்த எதிர்ப்பு கிளம்பியதன் காரணமாக, சர்ச்சைக்குரிய பாடல் வரிகள் இடம் பெறாது என்று தெரிவிப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.பாடல் எழுதும்போதே இதனை சிந்தித்திருக்க வேண்டும். எதிர்ப்பு வந்தவுடன் அதற்காக வருத்தம் தெரிவிப்பது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.மெட்டுக்காக எதை வேண்டுமானாலும் எழுதலாமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.சரித்திரப் புகழ் பெற்றவர்களையும், சுதந்திரப் போராட்ட வீரர்களையும், வீராங்கனைகளையும், தமிழுக்காகப் பாடுபட்டவர்களையும் இழிவுபடுத்தும் வகையில் திரைப்படங்களில் பாடல்கள் இடம் பெறுவது வருங்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.

இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

கல்கி பகவான் கோவில் விழாவில் நெரிசல் - 2 பேர் பலி

திருப்பதி அருகே கல்கி பகவானின் தங்க நகர விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலியானார்கள். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

திருப்பதி அருகே வரதாபாளையம் என்ற இடத்தில் கல்கி பகவான் தங்க கோவில் நகரம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 400 கோடியில் இந்த நகரம் உருவாகியுள்ளது. நேற்று அதன் திறப்பு விழாவுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. கல்கி பகவான் வருகிறார் என்று அறிவிக்கப்பட்டதால் பெரும் கூட்டம் கூடியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியதால் அப்பகுதியே பெரும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. கூட்டம் கொஞ்சம் கூட குறையாமல் வந்து கொண்டே இருந்ததால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விழா நடந்த இடத்தில் நிற்கக் கூட முடியாத அளவுக்கு கூட்டம் அதிகம் இருந்தது. இந்த நிலையில் கோவிலின் 2 மற்றும் 3வது தளங்களில் அமைக்கப்பட்டிருந்த மேடைகளில் நிறைய பேர் கூடியதால் அது பாரம் தாங்காமல் சரிந்து விழுந்தது. இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பும், நெரிசலும் ஏற்பட்டது.பக்தர்கள் பீதியடைந்து அங்கிருந்து வெளியேற முயன்றனர். அப்போது பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சீனிவாஸ், வெங்கடேஷ் ஆகிய ஆந்திர மாநில பக்தர்கள் நெரிசலில் சிக்கி மிதிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் 2 பேர் பலியானதைத் தொடர்ந்து தங்கக் கோவில் நகர திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்டு விட்டது.

IPL கிரிக்கெட் போட்டி (Twenty 20)


கிரிக்கெட் வரலாற்றில் முத்திரை பதிக்கும் அளவிற்கு நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்ற IPL கிரிக்கெட் போட்டியின் சென்னையின் முதல் ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு துவங்குகிறது. இப்போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாட்டத்தில் சென்னை அணி மும்பை அணியை எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங் அணியின் சின்னம் சேப்பாக்கம் விளையாட்டு அரங்கமுன் வைக்கப்பட்டுள்ளதைதான் படத்தில் காண்கிறீர்கள்.

பஞ்சாயத்து அமைச்சகத்திற்கு இந்தியப் பிரதமர் அறிவுறுத்தல்


இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாயத்து நிர்வாகத்தினை மாநில பட்டியலிலிருந்து இணைப் பட்டியலுக்கோ அல்லது மத்தியப் பட்டியலுக்கோ மாற்றவேண்டும் என்ற பரிந்துரையினை பஞ்சாயத்து நிர்வாகிகள் மாநாட்டின் வரைவு சாசனத்திலிருந்து நீக்கவேண்டும் என பஞ்சாயத்து அமைச்சகத்திற்கு தான் அறிவுறுத்தியிருப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தான் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாயத்துகளை கண்காணிக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு சென்றுவிட்டால், அது மாநில அரசின் அதிகார வரம்புகளை குறுக்குவதாகும் என்று கூறி, அப்பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை புதுடில்லியில் துவங்கிய மாநாட்டைப் புறக்கணிப்பதாக முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதல்வருக்கு பதிலெழுதியிருப்பதாக சட்டமன்றத்தில் தெரிவித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் தனது கடிதத்தில் பஞ்சாயத்துககள் நிலை குறித்து வேறு எந்த விதமாற்றமாக இருந்தாலும், அது தேசிய வளர்ச்சி மன்றம் உள்ளிட்ட பல மட்டங்களில் விவாதிக்கப்பட்ட பிறகே இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்திருப்பதாக ஸ்டாலின் மேலும் கூறினார்.

பிரதமரின் பதில் கிடைத்தும் மாநாட்டில தமிழக பிரதிநிதிகள் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்ய போதுமான கால அவகாசம் இல்லாததால் அவர்கள் பங்கேற்கவில்லை என்று ஸ்டாலின் கூறினார்.

சட்டசபை விவாதத்தின்போது குறுககிட்டுப் பேசிய முதல்வர் கருணாநிதி பஞ்சாயத்துககளுக்கு அதிக அதிகாரம் வழங்குவதில் தமிழகம் முன்னணியில் இருப்பதாகவும் ஆனால் அதற்காக மாநில அரசின் அதிகாரங்களைப் பறிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார்.

ஆனால் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும் உள்ளாட்சி மன்றங்களின் செயற்பாடுகள் குறித்து நுணுக்கமாக ஆய்ந்துவருபவருமான ஏ.கே. வெங்கடசுப்பிரமணியன் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் குறைவே எனக் குறிப்பிட்டார்.

நன்றி : BBC.

அதிபர் வேட்பாளர் போட்டி:பென்சில்வேனியாவில் ஹிலாரி வெற்றி

அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்காக, பென்சில்வேனியாயில் நடந்த ஜனநாயகக் கட்சிக்கான வேட்பாளர் தேர்தலில் ஹிலாரி கிளின்டன் வெற்றி பெற்றார்.இதன்மூலம், இந்த மாகாணத்தில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்துக்குத் தள்ளப்பட்ட ஹிலாரிக்கு சற்று ஆறுதல் கிடைத்துள்ளது.


இந்த மாகாணத்தில் இதுவரை வெளியான முடிவுகளில், 54 சதவிகித வாக்குகளை ஹிலாரி கைப்பற்றியுள்ள நிலையில், அவருக்கு கடும் போட்டியாகவுள்ள பராக் ஒபாமா 46 சதவிகித ஆதரவினைப் பெற்றுள்ளார். இவ்வெற்றி குறித்து ஹிலாரி கூறுகையில், "இந்தப் போட்டியில் இருந்து விலகிட வேண்டும் என்று சிலர் அறிவுரை கூறினர். ஆனால், அமெரிக்க மக்களுக்கு யார் தகுதியுடைய அதிபர் என்பது தெரியும்" என்றார். பென்சில்வேனியாவில் ஹிலாரி வெற்றி பெற்றாலும், ஒட்டுமொத்த முடிவுகளில் ஒபாமாவே தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். ஒபாமா இதுவரை 1,648 பிரதிநிதிகளின் ஆதரவினை தன்னகத்தே கொண்டுள்ளார்; அவரைக் காட்டிலும் சற்று பின்தங்கியுள்ள ஹிலாரிக்கு 1,509 பிரதிநிதிகளின் ஆதரவு கிடைத்துள்ளது.


அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளாராக போட்டியிடுவதற்கு, அக்கட்சியைச் சேர்ந்த 2,025 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.


Free Blog CounterLG