Friday, April 25, 2008

கிராமங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு வீடு தேடிச் சென்று பிறப்புச் சான்றிதழ்

கிராமங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு வீடு தேடிச் சென்று பிறப்புச் சான்றிதழ்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு வீடு தேடிச் சென்று சுகாதார ஆய்வாளர்கள் மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அவர் வியாழக்கிழமை பதில் அளித்தபோது இது தொடர்பாக செய்த அறிவிப்பு விவரம்:-

""தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இம் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் அந்தந்த மருத்துவமனையிலேயே வழங்கப்படும்.

துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்களது வீடு தேடிச் சென்று பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும். இதனால் பிறப்புச் சான்றிதழ் பெறுவது மிகவும் எளிதாக்கப்படுகிறது.

ரூ.20 கோடியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன்: தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டும் நோய் கண்டறியும் நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சேவை கிராம மக்களுக்கும் கிடைக்கும் வகையில் 12 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கும் இக் கருவி ரூ.20 கோடியில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நடமாடும் மருத்துவக் குழுக்கள்: தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களுக்கு தங்கள் இருப்பிடத்திலேயே தேவையான மருத்துவ வசதி அளிக்கும் நோக்கத்தில் 146 நடமாடும் மருத்துவக் குழு ஆரம்பித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு ரூ.22 கோடியில் மேலும் 239 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்படும்'' என்றார் அமைச்சர் பன்னீர்செல்வம்.

0 comments:

Free Blog CounterLG