Friday, April 25, 2008

இரண்டு சிம்கார்டு பி.எஸ்.என்.எல்.லின் புதிய திட்டம்

பி.எஸ்.என்.எல். சென்னை வட்டம் சார்பில் இரண்டு சிம்கார்டு வழங்கும் பி.எஸ்.என்.எல். ஜோடி என்ற புதிய திட்டம் ஏப். 23 அன்று அறிமுகம் செய்யப்பட்டது.


ப்ரீபெய்டு கார்டுடன் ரூ. 100 கூடுதலாக செலுத்தி மற்றொரு இக்கார்டை ஏற்றுக் கொள்ளலாம். இந்தக் கூடுதல் சிம்கார்டை வாடிக்கையாளர் தங்களது நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது தெரிந்த நபரிடம் கொடுக்கலாம். இந்த இரண்டு சிம் கார்டுகளிடையே மாதம் ஒன்றுக்கு 6 மணி நேரம் இலவசமாக பேசலாம். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் - இரண்டு சிம் கார்டுகள் ஒரே கணக்கில் வைக்கப்பட்டிருக் கும். 6 மணிநேரத் திலும் அதிகமாக பேசும்போது நிமிடத்திற்கு 10 பைசா கட்டணத்தில் பேசலாம்.


கூடுதல் சிம்கார்டை பயன்படுத்துவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ளூர் அழைப்புக்கு 80 பைசாவிலும் வெளியூர் அழைப்புகளுக்கு ரூ. 2.60 பைசாவிலும் பேசலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Free Blog CounterLG