Tuesday, May 13, 2008

EDS ஐ விலைக்கு வாங்கியது HP நிறுவனம்


மேலே HP சிஇஒ மார்க் ஹர்ட்

டெக்ஸாஸ் மாகாணத்தில் பிளானோவை தலைமையிடமாகக் கொண்ட Electronics Data Systems (EDS) கார்பரேஷனை 13 பில்லியன் டொலருக்கு கலிபோர்னியா மாகாணத்தின் பாலொ அல்டோ நகரில் தலைமையிடமாக கொண்டு இயங்கும் கணினி உற்பத்தி நிறுவனமான ஹாவ்லட் பேக்கார்ட் (Hewlett-Packard - HP) நிறுவனம் திங்கட்கிழமை வாங்கியது.

ஐபிஎம் மின் ஊழியராக இருந்த H. Ross Perot என்பவர் தனியே வந்து 1962 ஆம் ஆண்டு ஆயிரம் டொலர் முதலீட்டில் EDS நிறுவனத்தை ஆரம்பித்தார்.
1984 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தை GM ஜெனரல் மோட்டார்ஸ் நிறுனத்திற்கு 2.5 பில்லியன் டொலருக்கு விற்பனை செய்தார். தன்னுடைய பெயரில் (Perot Systems ?) தனியே வேறொரு நிறுவனத்தை தொடங்க எண்ணி முற்றிலுமாக (all shares) கார் தயாரிப்பு நிறுவனமான ஜிஎம்மிற்கு விற்றார்.

பீரட்டின் கை வெள்ளை மாளிகை வரை நீண்டது. 1992, 1996 களில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களில் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

தற்போது இந்நிறுவனத்தில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் பேர் 65 நாடுகளில் பணிபுரிகிறார்கள். மென்பொருள் சேவை நிறுவனமான இது உலகின் முதல் மூன்று பெரிய நிறுவனங்களில் HP, IBM க்கு அடுத்ததாக இருந்து வந்தது. சென்ற ஜனவரியில் அமெரிக்காவின் எம்பஸிஸ் (Mphasis) என்னும் BPO நிறுவனத்தை EDS வாங்கியிருந்தது. அப்போது அதில் 20,000 பேர் பணியிலிருந்தார்கள்.

இந்தியாவில் மட்டும் தற்போது EDS நிறுவனத்தில் 30,000 பேர் பணியில் உள்ளார்கள்.

EDS ன் ஒரு பங்குக்கு 25$ என்று நிர்ணயித்திருக்கிறது, இது 33 சதவீத விலை அதிகமாகும். EDS ஐ விலைக்கு வாங்குவதன் மூலம முன்னணியில் உள்ள IBM நிறுவனத்தை வீழ்த்த முடியும் என HP யின் கணக்காகும்.

கடந்த ஜனவரியின் போது HP யின் சந்தை விலை 115 பில்லியன் டொலராகும். அப்போது அதன் கையிருப்பு மட்டும் 10 பில்லியன் டொலர் இருந்தது. அதனால் EDS க்கு தன்னுடைய கையிருப்பிலிருந்தே அது கொடுக்கலாம். EDS ஐ வாங்குவதன் மூலம் இரண்டாவது இடத்துக்கு HP வந்துள்ளது. முதலாவதாய் ஐபிஎம்.

2002 ஆம் ஆண்டில் காம்பாக் நிறுவனத்தை HP 20 பில்லியன் டொலருக்கு பிறகு வாங்கும் இரண்டாவதாக மிகப்பெரிய நிறுவனமாகும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனம் மாற்றம் காரணமாக அமெரிக்க பங்கு வணிகத்தில் ஹெச் பி நிறுனத்தின் பங்குகள் 5.8 சதவீதம் அளவிற்கு குறைந்து 43.75 டொலர் வரை சென்றன. EDS நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன 36 சதவீதம் ஏறி 24.44 டொலருக்கு வந்தது.

முன்னதாக டாட்காம் சரிவுகளின் போது 2002-2003 ஆம் ஆண்டுகளில் 1.7 பில்லியன் டொலர் அளவிற்கு நட்டத்தை EDS கண்டிருந்தது. பின்னர் இந்தியா போன்ற நாடுகளுக்கு வேலைகளை அனுப்பி சரிவுகளிலிருந்து மீண்டது குறிப்பிடத்தக்கது.

மலேசியா‌வி‌ல் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விடுவிக்க வேண்டும்: திருமாவளவன் அறிக்கை.

மலேசியாவில் ஓட்டல் ஒன்றில் சிக்கி தவித்துக்கொண்டு இருக்கும் தமிழர்களை விடுவிக்க முதலமைச்சர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தாமண் துன் டாக்டர் இஸ்மாயில் என்ற இடத்தில் அமைந்துள்ள மக்புல் ரெஸ்டராண்ட் என்னும் உணவு விடுதியில் ஏறத்தாழ 37 தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து சென்று வேலை செய்கின்றனர்.பினாங்கு மாநிலத்தை சேர்ந்த இந்த உணவகத்தின் அதிபர் சமிக் பரதோஷ் என்பவருக்கு கோலாம்பூரில் உள்ள 6 கிளைகளில் 200-க்கும் மேற்பட்ட தமிழர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த உணவகத்தின் தொழிலாளர்கள் விடுப்பு கேட்டாலோ, உரிய ஊதியம் கேட்டாலோ உள்ளூர் அடியாட்களை வைத்து அடித்து, உதைத்து துன்புறுத்துவது தொடர்ந்து நடக்கும் கொடுமையாகும்.
கடுமையான பணிச்சுமையுடன், ஓய்வும், ஊதியமும், விடுப்பும் இன்றித் தவிக்கும் இந்த தொழிலாளர்கள் கடுமையான தாக்குதல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.இந்த நிலையில், உணவக அதிபரின் இத்தகைய கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல், சில நாட்களுக்கு முன் உயிருக்கு அஞ்சி, கோலாப்பூர்- பத்துமலை கோ‌யிலில் தஞ்சமடைந்த 37 பேரையு‌ம் காவல்துறையினர் மீண்டும் உணவு விடுதியிலேயே ஒப்படைத்து இருக்கின்றனர்.இந்த நிலையில் 6 பேர் மீது உணவு விடுதி உரிமையாளர் திருட்டு பழி சுமர்த்தி காவல்துறையிடம் ஒப்படைத்து இருக்கிறார். இந்திய தூதரகமோ, மலேசிய தூதரகமோ இதை தட்டிக்கேட்கவில்லை. இந்திய அரசு, இந்த ‌விடயத்தில் தலையிட்டு மக்புல் உணவு விடுதியில், பணிபுரியும் தமிழர்களுக்கு இந்திய தூதரகம் மூலம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.தமிழகம் திரும்ப விரும்பும் தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதியை கேட்டுக்கொள்கிறோம் எ‌ன்று ‌திருமாவளவ‌ன் கூ‌றியு‌‌ள்ளா‌ர்.

Free Blog CounterLG