ஈராக், ஆப்கானிஸ்தான் போரில் பங்குபெற்றிருக்கும் அமெரிக்க போர் வீரர்களின் கடுமையான மன அழுத்தம் காரணமாக பணியிலிருக்கும் போது நடைபெற்ற தற்கொலைகள் கடந்த 2007ல் அதிகரித்துள்ளன.
2007ல் மட்டும் 115 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது 2006 ஐ காட்டிலும் 12.7 சதவீதம் அதிகமாகும். 2006 102 தற்கொலைகள் நடந்துள்ளன.
1980லிருந்து இதுபோன்ற பட்டியல் தயாரித்து வருகையில் 2007ல் தான் அதிகம் என்று இரானுவ அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் இந்த ஆண்டு சென்ற திங்கட்கிழமை வரை 38 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் பணியில் இல்லாதவர்கள் பற்றிய கணக்கு இல்லை.
2007ல் மட்டும் 935 தற்கொலை முயற்சிகள் நடந்துள்ளன என்று இரானுவம் தெரிவித்துள்ளது.
2007ல் அமெரிக்க அதிபர் புஷ் இராக்கிற்கு சென்று வந்த பின் அதிக படையை அங்கு அனுப்பினார். அதற்குப் பிறகு தான் அதிக அளவிலான தற்கொலைகள் நடைபெற்றுள்ளன. அதாவது 32 தற்கொலைகள்,இது மொத்த கணக்கில் கால்பங்கு அதிகமாகும்.
சாதாரன மக்கள் தொகையில் 1,00,000 த்தில் 19.5 சதவீதம் பேர் தற்கொலைகள் செய்வதாகவும், இரானுவத்தில் பணியிலிருக்கும் பொழுது 1,00,000 த்தில் 18.8 தற்கொலைகள் நடப்பதாகவும், இது குறைவுதான் என்று இரானுவம் ஆறுதல் படுத்திக்கொல்கிறது.
'தலையை கொடுத்து மாட்டிக்கிட்டாய்ங்க' ன்னு இதத்தான் சொல்லுவாய்ங்கலோ?
Friday, May 30, 2008
அமெரிக்க இரானுவ வீரர்களின் தற்கொலைகள் அதிகரிப்பு
Posted by udanadi at 5/30/2008 06:41:00 AM 0 comments
பங்குச்சந்தையில் தீவிரவாதிகள் முதலீடு - ஜெயலலிதா
சென்னை, மே 29: பயங்கரவாதச் செயல்களுக்குப் பணம் ஈட்டும் சந்தையாக தீவிரவாதிகள் இந்திய பங்குச் சந்தையை பயன்படுத்துகின்றனர் என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
பங்குச் சந்தையில் நடப்பவற்றைத் தெரிந்துகொண்டும் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மௌனம் காக்கிறார். இதனால், இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் பேராபத்தை நிதி அமைச்சர் ஏற்படுத்துகிறாரோ என நினைக்கத் தோன்றுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இந்திய குடிமகன் ஒருவன் சாதாரண வங்கிக் கணக்கை தொடங்குவதற்கே முகவரி, புகைப்படச் சான்று மற்றும் வருமானவரி கணக்கு எண் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.
ஆனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அமைப்பு வழங்கும் பங்கேற்பு சான்றிதழைக் (பி-நோட்) கொண்டு இந்திய சந்தையில் மிக எளிதாக முதலீடு செய்கின்றனர் அன்னிய முதலீட்டாளர்கள்.
உண்மையான முதலீட்டாளருக்குத்தான் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படுகிறதா என்று தெரியாது. இதைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் பெரும் தொகையை இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றனர். ‘செபி'யில் பதிவு செய்யாமலேயே பங்கேற்பு சான்றிதழைப் பெறுகின்றனர்.
பங்கேற்பு சான்றிதழ் பெற்றவர்களின் விவரங்களை வெளியிடுமாறு அன்னிய முதலீட்டாளர்கள் அமைப்பிடம் ‘செபி' கேட்டும், விவரங்கள் கிடைக்கவில்லை. மத்திய நிதி அமைச்சகத்துக்கும் இதுகுறித்துத் தெரியவில்லை.
பங்கேற்பு சான்றிதழைக் கொண்டு செய்யும் முதலீடுதான் பங்குச் சந்தையின் திடீர் ஏற்றத் தாழ்வுகளுக்குக் காரணம். பங்குச் சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவால் தற்கொலைகளும் நடந்துள்ளன.
‘செபி' தலைவர் எம். தாமோதரன் கடந்த ஆண்டு அளித்த பேட்டியில் கூட, ‘‘பங்குச் சந்தையில் புழங்கும் பணத்தில் நான்கில் ஒரு பங்கு வெளிநாட்டு முதலீடு. அதுவும் பினாமி பெயர்களில் பெறப்பட்ட பங்கேற்பு சான்றிதழ்களைக் கொண்டு முதலீடு செய்யப்பட்டவை'' எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பங்குச் சந்தையில் முதலீடு செய்த தொகை உண்மையான அன்னிய முதலீடா? உள்ளூர் கருப்புப் பணத்தை பங்கேற்பு சான்றிதழ் மூலம் முதலீடு செய்துள்ளனரா? அல்லது, தீவிரவாதிகள் முதலீடு செய்ததா? என்ற கேள்விகள் எழுகின்றன.
''தீவிரவாதிகள் தங்களது செயல்பாட்டுக்கு பணத்தை ஈட்ட இந்திய பங்குச் சந்தையைப் பயன்படுத்துகின்றனர். மும்பை, சென்னை பங்குச் சந்தையில் சில நிறுவனங்கள் பெயரில் செய்த முதலீடு, தீவிரவாத அமைப்புகள் செய்தவை என பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது‘‘ என்று 2007-ல் மூனிச் நகரில் நடந்த பாதுகாப்பு கொள்கை பற்றிய கருத்தரங்கில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தெரிவித்துள்ளார்.
பினாமி பெயர்களில் பங்கேற்பு சான்றிதழைப் பெற்று, ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடியை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். இதற்கிடையே, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வந்த பின் மாலத்தீவு அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
இதன்மூலம், மாலத்தீவிலிருந்து இந்திய மூலதனச் சந்தையில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது.
இதைப் பயன்படுத்திக் கொண்டு அன்னிய முதலீட்டாளர்கள், மாலத்தீவு வழியாக இந்தியாவில் முதலீடு செய்கின்றனர். இதனால், சுமார் ரூ.4 ஆயிரம் கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய வருவாய், மாலத்தீவு வழியாக வெளிநாடுகளுக்குச் செல்கிறது என ரிசர்வ் வங்கியும் கவலை அடைந்துள்ளது.
ஆனால், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இந்த இழப்பீடுகளுக்கு பலத்த மௌனம் காக்கிறார். இப் பிரச்னையைத் தடுக்க கடும் நடவடிக்கையை நிதி அமைச்சர் எடுக்கவில்லை என்றால், இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் பேராபத்தை அவர் தெரிந்தே ஏற்படுத்துகிறாரோ என நினைக்கத் தோன்றுகிறது என அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
Posted by udanadi at 5/30/2008 06:24:00 AM 0 comments
Labels: கருப்பு பணம், தீவிரவாதம், நிதி, ப.சிதம்பரம், பங்குச் சந்தை