Friday, May 30, 2008

அமெரிக்க இரானுவ வீரர்களின் தற்கொலைகள் அதிகரிப்பு


ஈராக், ஆப்கானிஸ்தான் போரில் பங்குபெற்றிருக்கும் அமெரிக்க போர் வீரர்களின் கடுமையான மன அழுத்தம் காரணமாக பணியிலிருக்கும் போது நடைபெற்ற தற்கொலைகள் கடந்த 2007ல் அதிகரித்துள்ளன.

2007ல் மட்டும் 115 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது 2006 ஐ காட்டிலும் 12.7 சதவீதம் அதிகமாகும். 2006 102 தற்கொலைகள் நடந்துள்ளன.

1980லிருந்து இதுபோன்ற பட்டியல் தயாரித்து வருகையில் 2007ல் தான் அதிகம் என்று இரானுவ அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் இந்த ஆண்டு சென்ற திங்கட்கிழமை வரை 38 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் பணியில் இல்லாதவர்கள் பற்றிய கணக்கு இல்லை.

2007ல் மட்டும் 935 தற்கொலை முயற்சிகள் நடந்துள்ளன என்று இரானுவம் தெரிவித்துள்ளது.

2007ல் அமெரிக்க அதிபர் புஷ் இராக்கிற்கு சென்று வந்த பின் அதிக படையை அங்கு அனுப்பினார். அதற்குப் பிறகு தான் அதிக அளவிலான தற்கொலைகள் நடைபெற்றுள்ளன. அதாவது 32 தற்கொலைகள்,இது மொத்த கணக்கில் கால்பங்கு அதிகமாகும்.

சாதாரன மக்கள் தொகையில் 1,00,000 த்தில் 19.5 சதவீதம் பேர் தற்கொலைகள் செய்வதாகவும், இரானுவத்தில் பணியிலிருக்கும் பொழுது 1,00,000 த்தில் 18.8 தற்கொலைகள் நடப்பதாகவும், இது குறைவுதான் என்று இரானுவம் ஆறுதல் படுத்திக்கொல்கிறது.


'தலையை கொடுத்து மாட்டிக்கிட்டாய்ங்க' ன்னு இதத்தான் சொல்லுவாய்ங்கலோ?

0 comments:

Free Blog CounterLG