Sunday, May 11, 2008

வேலை தருவதாக மோசடி; மாலைப் பத்திரிக்கைகளுக்கு திருவிழா

அம்பத்தூர், மே. 11-

சென்னை அண்ணா நகர் மேற்கு, 18-வது மெயின் ரோட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு `விஸ்ப்ரோஸ் டெக்னாலஜிஸ்' என்ற பெயரில் கம்ப்யுட்டர் கம்பெனி ஆரம்பிக்கப்பட் டது. இதன் உரிமையாளர் ஆந்திராவைச் சேர்ந்த சிவக்குமார்.

இங்கு பல்வேறு நிறுவனங் களின் திட்டப்பணிகளை (புராஜக்ட் ஒர்க்) ஆர்டர் எடுத்து வாங்கி, அதை முடித்து கொடுக்கும் வேலை வழங்கப்பட்டு வந்தது. புரா ஜக்ட் வேலைகளை செய்ய கம்ப்யுட்டர் படித்த இளைஞர்கள்-இளம்பெண் களை வேலைக்கு சேர்த்தனர்.

read more


நன்றி மாலை மலர்

//சுமார் 1600-க்கும் மேற் பட்டவர்கள் திரண்டு புகார் செய்ததால் திருமங்கலம் போலீஸ் நிலையம் முன்பு திருவிழா கூட்டம் போல் காணப்பட்டது.//

திருவிழா என்றால் கரகாட்டம் ஒயிலாட்டம் நடைபெற்றதா, குத்து டான்ஸ் இருந்ததா?, பஞ்சு மிட்டாய், கடலை மிட்டாய் வித்தார்களா?

பணத்தையும் வாழ்வையும் தொலைத்தவர்கள் பற்றிய செய்தி ஜனரஞ்சக பத்திரிக்கைக்கு திருவிழா போன்றுள்ளது. ஆம் சில நாட்களுக்கு மாலைப் பத்திரிக்கைகளுக்கு திருவிழா தான்....

புஷ்ஷின் மகள் ஜென்னாவின் திருமணம்


அமெரிக்க அதிபர் புஷ்ஷின் மகள் ஜென்னாவின் திருமணம் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள புஷ்ஷிற்கு சொந்தமான 1600 ஹெக்டர் பரப்பளவில் உள்ள கிராபோர்ட் பண்ணை வீட்டில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் புஷ்ஷிற்கு நெருங்கிய 200 குடும்ப நண்பர்கள் கலந்து கொள்கின்றனர். ஜென்னாவின் காதலர் ஹென்றி சேஸ் ஹேகர் முன்னாள் விர்ஜீனியா ஆளுநரின் மகனாவார். ஜென்னாவின் வயது 26, மணமகனுக்கு வயது 30.

2004 தந்தையின் தேர்தல் பிரசாரத்தின் போது ஹென்றியுடன் காதல் வயப்பட்டார் ஜென்னா புஷ். மகளின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய புஷ் தம்பதி திருமணத்தை எளிமையாக நடத்தத் திட்டமிட்டது. அமெரிக்க அதிபர்கள் பதவியில் இருக்கும்போது அவர்களது பிள்ளைகளுக்கு நடைபெறும் 22வது திருமணம் இதுவாகும்.

அமெரிக்க ஜனாதிபதி பதவியின் பதவிக்காலம் வருகிற ஜனவரியுடன் முடிவுறுகின்ற நிலையில் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி, இராக் போர் எதிர்ப்பு போன்ற காரணங்களால் திருமணம் எளிமையாக நடைபெறுவதாக புஷ்ஷின் வட்டாரங்கள் தெரிவித்தன.

விருந்தின் போது ஸ்மிது குழுவின் 'You Are So Beautiful' பாட்டுக்கு மகளுடன் புஷ் டான்ஸ் ஆடுவார். தாஜ்மஹால் வாத்தியக் குழுவினரின் Lovin' in My Baby's Eyes பாட்டுக்கு புது தம்பதியினரின் ஆட்டம் (டான்ஸ்) நடைபெறும். திருமண உடையாக Oscar de la Renta நிறுவனம் தயாரிக்கும் கவுனை மணமகள் அனிந்திருப்பார்.

முன்னதாக தன்னுடைய பண்ணைவீட்டில் இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெற லாரா புஷ் தயக்கம் காட்டியதாக தெரிகிறது. அங்கு கோழி (சிக்கன்) சமைக்க சரியான சமையற்காரர் கிடைப்பாரா என்ற கவலையில்.

இவ்விருந்தில் இந்தியர்கள்
எவராவது கலந்து கொள்கிறார்களா என்பது பற்றி தகவலில்லை.

தலைநகர் பெய்ரூட்டை சியா பிரிவினரின் ஹிஸ்புல்லா கைப்பற்றியது

அமெரிக்காவின் தீவிரவாதிகளின் பட்டியலில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் செயல்பட்டு வருகிறது. இஸ்ரேல் எல்லைகளையொட்டியுள்ள பகுதிகளில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது.

ஹிஸ்புல்லா அமைப்பு இரான், சிரியாவின் உதவியுடன் செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. ஹிஸ்புல்லாவின் ஒரு பிரிவு அரசியலில் ஈடுபட்டுள்ளதோடு தற்போதைய அரசில் அங்கமும் வகிக்கிறது. சியா பிரிவைச் சார்ந்த நஸ்ரல்லா என்பவர் ஹிஸ்புல்லாவின் தலைவராக உள்ளார்.

ஹிஸ்புல்லாவின் ஆயுத, திறமைகளை அந்நாட்டின் இரானுவத்தை விட வலிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாயன்று பிரதமர் சினாரியோ, ஹிஸ்புல்லாவிற்கு சொந்தமான தொலைத்தொடர்பு நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது என்று தெரிவித்தார்.

தருணம் பார்த்துக்கொண்டிருந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் இந்த அறிவிப்பு ஹிஸ்புல்லா மீதான அரசின் நேரடிப்போருக்கான அறிவிப்பு என்று அறிவித்தார். அதனால் ஹிஸ்புல்லாவின் ஆயுத தாரிகள் கடந்த வியாழன் அன்று தலைநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பாதைகளை மறித்தனர். இதனால் பல்வேறு நாடுகளின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அதைத்தொடர்ந்து பெய்ரூட்டின் பெரும் பகுதிகளை அவர்கள் கைப்பற்றினர். சுன்னிப் பிரிவைச்சார்ந்த புயூச்சர் மூவ்மென்ட் அமைப்பினரின் சொத்துக்களுக்கு தீவைத்தனர். முன்னாள் பிரதமர் ரபீக் ஹரிரி க்குச் சொந்தமான தொலைக்காட்சி நிலைய்யத்திற்கும் பத்திரிக்கை அலுவலகத்திற்கும் தீவைத்தனர்.

இந்த சம்பவத்தில் 30 பேர் இறந்துள்ளனர். அதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சவ ஊர்வலத்தில் நடைபெற்ற துப்பாக்கி சம்பவத்தில் சியா பிரிவைச்சாரந்த ஒருவர் சுட்டதில் இருவர் பலியாயினர்.

இதுபற்றி தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் சினாரியோ ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்ற ஹிஸ்புல்லா சதி செய்வதாக குற்றம் சாட்டினார்.

இந்த சம்பவத்தை சவூதி அரேபியா கடுமையாக கண்டித்துள்ளது. அவசர கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்தது. அமெரிக்கா, சவூதி அரேபியாவின் ஆதரவுடன் செயல்படும் லெபனான், சவூதி அரேபியாவின் அதிகப்படியான பண உதவி பெற்று வருகிறது.


கடைசியாக கிடைத்த தகவலின்படி, இரானுவம் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஹிஸ்புல்லா அமைப்பு தங்களுடைய ஆயுததாரிகளை சனிக்கிழமையிலிருந்து பெய்ரூட்டிலிருந்து விலக்கிக்கொண்டுள்ளது. ஹிஸ்புல்லாவின் தொலைத்தொடர்பு இரானுவ கண்கானிப்பின் கீழ் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Free Blog CounterLG