Sunday, May 11, 2008

வேலை தருவதாக மோசடி; மாலைப் பத்திரிக்கைகளுக்கு திருவிழா

அம்பத்தூர், மே. 11-

சென்னை அண்ணா நகர் மேற்கு, 18-வது மெயின் ரோட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு `விஸ்ப்ரோஸ் டெக்னாலஜிஸ்' என்ற பெயரில் கம்ப்யுட்டர் கம்பெனி ஆரம்பிக்கப்பட் டது. இதன் உரிமையாளர் ஆந்திராவைச் சேர்ந்த சிவக்குமார்.

இங்கு பல்வேறு நிறுவனங் களின் திட்டப்பணிகளை (புராஜக்ட் ஒர்க்) ஆர்டர் எடுத்து வாங்கி, அதை முடித்து கொடுக்கும் வேலை வழங்கப்பட்டு வந்தது. புரா ஜக்ட் வேலைகளை செய்ய கம்ப்யுட்டர் படித்த இளைஞர்கள்-இளம்பெண் களை வேலைக்கு சேர்த்தனர்.

read more


நன்றி மாலை மலர்

//சுமார் 1600-க்கும் மேற் பட்டவர்கள் திரண்டு புகார் செய்ததால் திருமங்கலம் போலீஸ் நிலையம் முன்பு திருவிழா கூட்டம் போல் காணப்பட்டது.//

திருவிழா என்றால் கரகாட்டம் ஒயிலாட்டம் நடைபெற்றதா, குத்து டான்ஸ் இருந்ததா?, பஞ்சு மிட்டாய், கடலை மிட்டாய் வித்தார்களா?

பணத்தையும் வாழ்வையும் தொலைத்தவர்கள் பற்றிய செய்தி ஜனரஞ்சக பத்திரிக்கைக்கு திருவிழா போன்றுள்ளது. ஆம் சில நாட்களுக்கு மாலைப் பத்திரிக்கைகளுக்கு திருவிழா தான்....

1 comments:

Anonymous said...

//டி.வி.க்கள், பத்திரிகை களில் தினமும் விளம்பரம் செய்தனர்//

then they too involved in this business scam?

Free Blog CounterLG