Friday, April 25, 2008

உணவுத் தட்டுப்பாடு - பயோ எரிபொருள் காரணமா?

பயோ எரிபொருளை அதிக அளவில் பயன்படுத்துவது குறித்து உலகத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

பெட்ரோல் விலையேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக மாற்று எரிபொருளுக்கான முயற்சி தீவிரமடைந்துள்ளது. பல நாடுகளில் பயோ எரிபொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் தற்போது ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கு முக்கிய பயிர்கள், பயோ எரிபொருளுக்கு திருப்பி விடப்பட்டது காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் பொலிவிய அதிபர் மோரல்ஸ் மற்றும் பெரு அதிபர் கார்சியா, பயோ எரிபொருளை அதிக அளவில் பயன்படுத்துவது விவசாயத்திற்கு பாதகமாக அமையும் என்று எச்சரித்துள்ளனர்.



0 comments:

Free Blog CounterLG