Friday, April 25, 2008

சுனாமி தாக்கினாலும் சேது சமுத்திரக் கால்வாய்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாது - மத்திய அரசு

சுனாமி தாக்கினாலும் சேது சமுத்திரக் கால்வாய்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.


மக்களவையில் 23 ஆம் தேதி கேள்வி நேரத்தின்போது சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் நாராயண் மீனா கூறியது:

சுனாமி தாக்குதல் பற்றி சென்னையில் உள்ள தேசிய கடல் தொழில் நுட்ப நிறுவனம் ஆய்வு நடத்தி வெளியிட்ட அறிக்கையில், சுனாமி ஏற்பட்டால் கடற்கரைப் பகுதிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. சேது சமுத்திரக் கால்வாய் அமைந் துள்ள பகுதியில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று தெரி வித்துள்ளது. இதை ஜப்பானில் உள்ள தேசிய தொழிற்சாலை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மேம்பாட்டு நிறுவனமும் உறுதிபடுத்தியுள்ளது. சேது சமுத்திரத் திட்டம் அமையும் பகுதியில் சுற்றுப் புறச் சூழல் பாதிப்பு பற்றி நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுப்புறச் சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் தான் இந்தத் திட்டத்தால் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அரசு தெரிவித்தது. இவ்வாறு நாராயண் மீனா கூறினார்.

0 comments:

Free Blog CounterLG