ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை நேற்று முதல் கோவை மாநகராட்சியில் அமலுக்கு வந்தது. இதுகுறித்து மேயர் வெங்கடாசலம் கூறியதாவது: ஒருமுறை மட்டும் பயன் படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் சாக்கடை அடைப்பு, நிலத்தடி நீர் பாதிப்பு என பல்வேறு சீர்கேடுகள் ஏற்படுகின்றன. எதிர்கால சந்ததியினருக்காக இப்போதே தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பிளாஸ்டிக் தடை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாநகரத்தில் உள்ள மக்கள் ஒருமுறை மட்டும் பயன்படுத் தப்படும் பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்துவதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். இத்தடையை மீறும் பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிப்பவர்களுக்கு ரூ.5,000, மொத்த விற்பனையாளர் களுக்கு ரூ.2,500, சில்லறை விற்பனையாளர்களுக்கு ரூ.750, உபயோகிப்பாளர்களுக்கு ரூ.100 என அபராதம் விதிக்கப்படும், என்று கூறினார்.
Friday, April 25, 2008
கோவையில் பிளாஸ்டிக் தடை அமல்
Posted by
udanadi
at
4/25/2008 03:10:00 AM
Labels: கோவை, தடை, பிளாஸ்டிக், மாநகராட்சி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment