Friday, April 25, 2008

பரதம் போன்ற கலைகள் வளர வேண்டும்: ஆர். நடராஜ்

பரதம் போன்ற கலைகள் வளர வேண்டும்: ஆர். நடராஜ்

அறிவியலைப் போல் மென்மையான கலைகளும் வளர வேண்டும் என காவல் துறை கூடுதல் இயக்குநர் ஆர். நடராஜ் கூறினார்.

சென்னை முத்தமிழ் நகரில் புதன்கிழமை நடைபெற்ற 'வடசென்னையில் இசை விழா' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய காவல் துறை கூடுதல் இயக்குநர் ஆர். நடராஜ், ''எல்லோரும் சமம் என உணர்த்துவது கலை மட்டுமே. கலை வாழ்க்கையோடு இணைந்தது. அறிவியல் வளர்ச்சி எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. அதே சமயம், பரதம் போன்ற மென்மையான கலைகளும் அதற்கு இணையாக வளர வேண்டும். அப்போதுதான் நாம் சோபிக்க முடியும்'' என்றார்.

மேலும் அவர், ''கலைப் பொக்கிஷங்களைப் போற்றி பாதுகாக்க வேண்டும். ஆசிரியர்களை மாணவர்கள் மதிக்க வேண்டும். படிப்பாகட்டும் வேலையாகட்டும் எந்த ஒரு விஷயத்திலும் மனம் விரும்பி ஈடுபட வேண்டும்'' என்றும் தெரிவித்தார்.

0 comments:

Free Blog CounterLG