Wednesday, April 23, 2008

பிறந்த குழந்தையின் கண்ணை எலி தின்றது

கொல்கத்தா அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தையின் கண்ணை எலி தின்றது. செவிலியர்களின் அஞாக்கிரதையால் பிறந்த குழந்தையின் கண்ணை குதறி தின்றது. இந்த துயர சம்பவம் பராஸத் மாவட்ட மருத்துவமனையில் சனிக்கிழமை வேலை நேரத்தில் நடந்துள்ளது. கண்ணை தின்றதோடல்லாமல் முகத்தையும் குதறியது. குழந்தை உடனே இறந்துவிட்டது.

இந்த சம்பவத்தை ஒத்துக்கொண்ட மருத்துவமனை நிர்வாகம், இந்த சம்பவத்திற்கு முன்னே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

0 comments:

Free Blog CounterLG