Wednesday, April 23, 2008

தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் மின்கட்டணம் செலுத்த புதிய நடைமுறை

சென்னை, ஏப். 22- தமிழகத்தின் எந்தப் பகுதிக்கு உரிய மின் கட்டணத்தையும் எந்தப் பகுதியில் உள்ள அலுவலகத்திலும் செலுத்தும் நிலை இன்னும் மூன்று மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்று ஆர்க்காடு வீராசாமி தெரி வித்தார்.சென்னை ஏழுகிணறில் துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ 28 லட்ச செலவில் கணினி மின்கட்டண வசூல் மய்ய திறப்பு விழா நேற்று நடந்தது. பேராசிரியர் அன்பழகன் திறந்து வைத்தார். அப்போது ஆர்க்காடு வீராசாமி தலைமையேற்றுப் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் கட்டண வசூலிப்பு மய்யங்கள் கணினி மயமாக்கப்பட்டு வரு கிறது. வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்குள் இப்பணிகள் நிறைவடையும். அதன் பின் தமிழகத்தின் எந்தப் பகுதிக்கும் உரிய மின் கட்டணத்தையும், எந்தப் பகுதியிலும் செலுத்தும் வசதி நடைமுறைக்கு வரும். மின்தேவைக்கு ஏற்ப உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது. தமிழகத்தில் மின் உற்பத்தி செய்ய வெளிநாட்டினர், தொழில் அதிபர்கள் முன்வந்துள்ளனர். மொத்தம் 50 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் திட்டமுள்ளது. இந்தியாவின் மின் தேவையில் பெரும் பகுதியை தமிழகம் நிறைவேற்றும் நிலை ஏற்படும். இவ்வாறு ஆர்க்காடு வீராசாமி பேசினார்

0 comments:

Free Blog CounterLG