Wednesday, April 23, 2008

சாலையோர கடைகளிலும் ரயில் டிக்கெட் வாங்கலாம்

'ஜன சாதாரண டிக்கெட் புக்கிங்' என்ற பெயரில் சாலையோர கடைகளிலும் ரயில்வே டிக்கெட் விற்பனை செய்யும் திட்டத்தை ரயில்வே தொடங்க உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. சாதாரண ரயில்களிலும், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளிலும் பயணம் செய்ய ஸ்டேஷனில் கடைசி நேர டென்ஷனுடன் வரிசையில் காத்திருக்க தேவை யில்லை. இதற்கான ரயில் டிக்கெட்களை நகர பகுதிகளில் சாதாரண சாலையோர கடை களிலும் கிடைக்க செய்யும் வகையில் ஜன சாதாரண் டிக் கெட் புக்கிங் என்ற பெயரில் தனியார் மையங்களுக்கு அனுமதி வழங்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் பல்வேறு நகரங்களில் முன்பதிவு செய்யப் படாத ரயில் டிக்கெட்கள் விற்பனை செய்ய ஜன சாதா ரண சேவை மையங்களுக்கு அனுமதி வழங்கப்படும். எஸ்.டி.டி. பூத்கள் போன்று பல்வேறு இடங்களில் ரயில் டிக்கெட்கள் விற்பனை செய்யும் மையங்களை ஏற்படுத்துவதுதான் இந்த திட்டம். நிலைய கவுண்டர்களில் ரயில்கள் வந்து செல்லும் வேளை யில் உள்ள பயணிகள் நெருக்கடியை குறைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத் தப்பட உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் லட்சக்கணக்கான வேலை இல்லாதவர்களுக்கு புது வாய்ப்பு கிடைக்கும்.முதல்கட்டமாக 2 வருடத்துக்கு இதற்கான அனுமதி வழங்கப்படும். பின்னர் இந்த அனுமதி நீட்டித்து வழங்கப்படும். அண்மையில் வெளியிடப்பட்ட ரயில்வே பட் ஜெட்டில் சுட்டிக்காட்டியிருந்த இதுபோன்ற சேவை மையங்களுக்கான விண்ணப்பங்கள், விவரங்கள் அடங்கிய ரயில்வேயின் அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது என்று ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்தன

0 comments:

Free Blog CounterLG