Wednesday, April 23, 2008

நேபாளியில் காட்சிகள் நீக்கம்

'நேபாளி' திரைப்படத்தில் காவல் துறையை அவமதிக்கும் காட்சிகளை நீக்குவதற்கு, அந்தப் படத்தின் இயக்குநர் துரை சம்மதம் தெரிவித்துள்ளார். சென்னை மாநகரக் காவல் துறை இணை ஆணையர் ரவியை நேரில் சந்தித்து அவர் இந்தத் தகவலை தெரிவித்தார்.

நடிகர் பரத், நடிகை மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்து வெளியான 'நேபாளி' திரைப்படத்தில் போலீசை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், அதை நீக்கிவிட்டு படத்தை திரையிட வேண்டுமென்றும், இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும், சென்னை மாநகரக் காவல் துறை இணை ஆணையர் ரவி, தனது வக்கீல் மூலம், படத்தின் இயக்குநர் துரைக்கு அறிவிக்கை (நோட்டீசு) அனுப்பினார். இதையடுத்து, 22.4.2008 அன்று மதியம் 1 மணியளவில் இணை கமிஷனர் ரவியை அவரது அலுவலகத்தில் இயக்குநர் துரை சந்தித்துப் பேசினார். தன் படத்தில் காவல் துறையை இழிவுபடுத்திக் காட்சிகள் அமைத்ததற்காக அவர் வருத்தம் தெரிவித்தார். பின்னர் அத்தகைய அவமதிப்பு காட்சிகளை 'நேபாளி' படத்தில் நீக்கிவிடுவதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்.

0 comments:

Free Blog CounterLG