Wednesday, April 23, 2008

ஜாகர்த்தாவில் ஒலிம்பிக் ஜோதி!

ஜாகர்த்தா, ஏப்.22: ஒலிம்பிக் ஜோதி இந்தோனேஷிய தலைநகர் ஜாகர்த்தாவில் பலத்த பாதுகாப்புக்கிடையே வந்து அடைந்துள்ளது.

சீனாவின் பெய்ஜிங் நகரில் வரும் ஆகஸ்ட் மாதம் 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் உலகின் பல நாடுகளில் நடைபெற்று வருகிறது. கடந்த 17ந் தேதி டெல்லி வந்த ஒலிம்பிக் ஜோதி பின்னர் மலேசியா சென்றது. அங்கிருந்து தாய்லாந்து சென்ற ஒலிம்பிக் ஜோதி இன்று இந்தோனேஷிய தலைநகர் ஜாகர்த்தா வந்தடைந்தது.ஒலிம்பிக் ஜோதி வருகையை முன்னிட்டு ஜாகர்த்தாவில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. திபெத் பிரச்சனை காரணமாக ஒலிம்பிக் ஜோதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படலாம் என்பதால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

0 comments:

Free Blog CounterLG