Wednesday, April 23, 2008

டிஎன்ஏ பரிசோதனை முடிவு: ஃபர்கத் பேகத்துக்கு ஆண் குழந்தை

சென்னை மருத்துவமனையில் குழந்தைகள் மாறிய பிரச்னையில் ஃபர்கத் பேகத்துக்குத்தான் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது என டிஎன்ஏ பரிசோதனையில் ஊர்ஜிதமாகியுள்ளது.

காமாட்சிக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது என்று டிஎன்ஏ பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஆறு தினங்களாக நீடித்து வந்த ஆண் - பெண் குழந்தைகள் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

இதை ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையின் தலைமை அமைப்பான அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் மைதிலி பாஸ்கரன் புதன்கிழமை மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஃபர்கத் பேகத்திடம் ஆண் குழந்தையையும் காமாட்சியிடம் பெண் குழந்தையையும் அவர் ஒப்படைத்தார்.

முன்னதாக ஒரே வார்டில் அறுவைச் சிகிச்சை மூலம் பிறந்த இந்த குழந்தைகள் செவிலியர்களின் கவனக்குறைவுக் காரணமாக மாற்றி வைத்துவிட்டனர்.

0 comments:

Free Blog CounterLG