Wednesday, April 23, 2008

தாஜ்மஹால் நுழைவுக் கட்டணம்

தாஜ்மஹாலைச் சென்று பார்ப்பதற்கு நுழைவுக் கட்டணமாக, இந்திய குடிமக்களிடம் வசூலிக்கப்படும் தொகையே, சார்க் மற்றும் பிம்ஸ்டெக் நாடுகளைச் சேர்ந்த குடிமக்களிடமும் இனி வசூலிக்கப்படும் என்று மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் திருமதி அம்பிகா சோனி தெரிவித்துள்ளார்.

இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம், இந்தியர்களிடமிருந்து ரூ.10 ஐ நுழைவுக் கட்டணமாக வசூலிப்பதாகவும் இனி இத்தொகையே சார்க் நாடுகள் மற்றும் பிம்ஸ்டெக் (பங்களாதேஷ், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து பொருளாதார கூட்டமைப்பு) நாடுகளைச் சேர்ந்த குடிமக்களிடமும் வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற நாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடம் நபர் ஒன்றுக்கு ரூ.250 வீதம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆக்ரா வளர்ச்சி ஆணையம் சார்க் மற்றும் பிம்ஸ்டெக் நாடுகள் உள்ளிட்ட அனைத்து அயல்நாட்டு பயணிகளிடமும் ரூ.500 ஐயும், இந்திய சுற்றுலாப் பயணிகளிடம் ரூ.10 ஐயும் சுங்க வரியாக வசூலிக்கிறது. கடந்த மாதம் 5 ஆம் தேதியன்று இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம்,

தாஜ்மஹாலின் நுழைவுக் கட்டணம் தொடர்பாக வெளியிட்டுள்ள குறிப்பாணை இந்நிறுவனத்தின் நுழைவுக் கட்டணத்துக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஆக்ரா வளர்ச்சி ஆணையம் வசூலிக்கும் தீர்வைக்குப் பொருந்தாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் திருமதி அம்பிகா சோனி இத்தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

0 comments:

Free Blog CounterLG