Wednesday, April 23, 2008

கிராம நூலகத்திலும் இணையம்

கணிப்பொறி மூலம் நூலகங்களை இணைக்க அரசு படிப்படியாகத் திட்டம் தீட்டி வருகிறது. மாவட்ட நூலகங்களில் உள்ள இன்டர்நெட் இணைப்பு வசதிகளைப் போல் கிளை நூலகங்களிலும் உருவாக்கும் நடவடிக்கைகளைம் அரசு மேற்கொண்டுள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழகச் சட்டசபையில் ஏப்ரல் 21 அன்று, கேள்வி நேரத்தின் போது எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன் (பண்ருட்டி, பா.ம.க.), கோவிந்தசாமி (திருப்பூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சி.வி.சண்முகம் (திண்டிவனம், அ.தி.மு.க.), ஹசன்அலி (ராமநாதபுரம், காங்கிரஸ்), அப்பாவு (ராதாபுரம், தி.மு.க.) ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துப் பேசிவதாவது:-

"கடலூர் மாவட்டம் நடுக்குப்பம் கிராமத்தில் பகுதி நேர நூலகம் திறக்க பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இன்னும் சில வாரங்களில் ஆவன செய்யப்படும். மக்கள் தொகை அடிப்படையில் பகுதி நேர நூலகம் தொடங்கப்படுகிறது. தற்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள முயற்சியால், பஞ்சாயத்துகளில் கூட கிராமம் தோறும் நூலகங்களைத் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கம்ப்யூட்டர் மூலம் நூலகங்களை இணைக்க அரசு படிப்படியாகத் திட்டம் தீட்டி வருகிறது. மாவட்ட நூலகங்களில் உள்ள இன்டர்நெட் இணைப்பு வசதிகளைப் போல் கிளை நூலகங்களிலும் உருவாக்கும் நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது".

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

0 comments:

Free Blog CounterLG