Thursday, April 24, 2008

டெல்லி எய்ம்ஸ்க்கு இணையாக புதுவை ஜிப்மருக்கு தன்னாட்சி அதிகாரம்

டெல்லி எய்ம்ஸ்க்கு இணையாக புதுவை ஜிப்மருக்கு தன்னாட்சி அதிகாரம்

புதுவை ஜிப்மருக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரம் வழங்க மாநிலங்களவையில் மசோதா நேற்று நிறைவேறியது. புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லுரி மருத்துவமனைக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் குளிர கால கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து மசோதாவில் பல திருத்தங்களை மத்திய அரசு செய்தது. இந்த மசோதா மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் அன்புமணி பேசியதாவது: உறுப்பினர்கள் கூறிய திருத்தங்கள செய்யப்பட்டு புதிய மசோதாவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்துக்கு (எய்ம்ஸ்) இணையான தன்னாட்சி அதிகாரம் ஜிப்மருக்கு கிடைக்கும்.

http://www.puduvaitamilsonline.com/news50.html

0 comments:

Free Blog CounterLG