Thursday, April 24, 2008

சாம்சுங் தலைவர் பதவி விலகினார்

தென் கொரிய நிறுவனமான சாம்சுங்கின் தலைவர் லீ குன் ஹீ பதவி விலகியுள்ளார். வரி ஏய்ப்பு, நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் அவர் மீது சாட்டப்பட்டுள்ளன. அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட ஒரு வாரத்தில் அவர் பதவி விலகியிருக்கிறார்.


செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் தனது முடிவை அறிவித்தார். தென் கொரியாவின் ஊழல் ஒழிப்பு நிறுவனம் கடந்த மூன்று மாதங்கள் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து லீ மீது குற்றம் சாட்டப்பட்டது. தான் தவறு எதுவும் செய்யவில்லை என்று கூறிய லீ, நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தான் வருந்துவதாகக் கூறினார்.
அவருக்குப் பதிலாக சாம்சுங் நிறுவனத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்பது தெரியவில்லை.
நன்றி: வாஷிங்டன் போஸ்ட்.

0 comments:

Free Blog CounterLG