Thursday, April 24, 2008

நேரு யுவகேந்திராவுக்கு சேவை தொண்டர்கள் தேர்வு

நேரு யுவகேந்திராவுக்கு சேவை தொண்டர்கள் தேர்வு

சென்னை மாவட்ட நேரு யுவகேந்திராவுக்கு 2008-09-ம் ஆண்டுக்கான தேசிய சேவை தொண்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இளைஞர், மகளிர் வளர்ச்சிக்காக சமூகப் பணி, மன்றங்கள் அமைத்தல், சுய உதவிக் குழுக்கள் ஆரம்பித்தல் போன்ற சமூகப் பணிகள் செய்வதற்கு ஆர்வமுடைய சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பணியின் காலம் அதிகபட்சம் 2 ஆண்டுகள் ஆகும். இப் பணிக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ. 1000 வழங்கப்படும். பட்டதாரிகளாகவும், 1.4.85-க்கு பிறகு பிறந்தவராகவும், 23 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின ஆண்கள், பெண்கள் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவராகவும், 1.4.82-க்குப் பிறகு பிறந்தவராகவும் இருக்க வேண்டும். கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பவர்கள், வேலையில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
மேற்கண்ட தகுதியுடையவர்கள் வரும் மே 2-ம் தேதி காலை 9 மணிக்கு, எண் 3, 4-வது குறுக்குத் தெரு, டாக்டர் சீதாபதி நகர் (விரிவு), வேளச்சேரி, சென்னை-42 என்ற முகவரியில் உள்ள நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் தக்க சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளலாம் என ஆட்சியர் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

0 comments:

Free Blog CounterLG