Thursday, April 24, 2008

வணிகர்கள் மாநாட்டுக்கு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது த.வெள்ளையன் அறிவிப்பு

வணிகர்கள் மாநாட்டுக்கு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது த.வெள்ளையன் அறிவிப்பு

வணிகர்கள் மாநாட்டுக்கு அனைத்து கட்சி தலை வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்று த.வெள்ளையன் தெரிவித்தார்.
பொருளாதார சீர்குலைவு
தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் பரமக்குடி யில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசின் தவறான பொருளா தார கொள்கையும், தேவை யற்ற வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதியும், தேவை யற்ற வரிகளும் இந்திய பொருளா தாரத்தை சீர்குலைத்து வரு கிறது. சிறு வியாபாரிகளை நசுக்கும் நோக்கத்தில் ரிலை யன்ஸ் கடைகள் திறக்கப் பட்டு வருகிறது. பல வட மாநிலங்களில் வியாபாரிகள் பாதிக்கப்பட்டதால், ரிலை யன்ஸ் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
மாநில மாநாடு
தற்போது தமிழகத்திலும் ரிலையன்ஸ் ஆதிக்கம் தலை விரித்து ஆடுவதால் அவற்றை அடித்து நொறுக்க தயாராகி வருகிறோம். இது போன்ற வர்த்தகத்துக்கு ஆதரவாக இருக்கும் அரசியல் தலைவர் களுக்கு வியாபாரிகளின் நிலையை விளக்குவதற்காக வருகிற மே 5-ந்தேதி சென்னை மாதவரம் காமராஜர் திட லில் வணிகர் சங்கங்களின் வெள்ளிவிழா மாநாடு நடத் தப்படுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்கு மாறு அனைத்து கட்சி தலை வர்களுக்கும் அழைப்பு விடுக் கப்பட்டு உள்ளது. அவர் களின் முன்னிலையில் வணிகர்க ளின் கோரிக்கைகள் வலியு றுத்தப்படும். இந்த மாநாட் டில் ராமநாதபுரம் மாவட்ட வணிகர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது பரமக்குடி வியா பாரிகள் சங்க தலைவர் காசி, பொதுச்செயலாளர் ஜபருல் லாகான், துணை தலைவர் ராசி என்.போஸ், இணை செயலாளர் மோகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

0 comments:

Free Blog CounterLG