Thursday, April 24, 2008

மதானி உள்பட 7 பேரின் விடுதலையை ரத்து செய்யக் கோரி மறுஆய்வு மனு

மதானி உள்பட 7 பேரின் விடுதலையை ரத்து செய்யக் கோரி மறுஆய்வு மனு

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மதானி உள்பட 7 பேரின் விடுதலையை ரத்து செய்யக் கோரி, உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் அப்துல் நாசர் மதானி உள்பட 7 பேரை விடுதலை செய்து கோவை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்துவிட்டு அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட்ட எஸ்.ஏ. பாஷா உள்பட 43 பேருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்' என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு மறுஆய்வு மனுக்கள் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கே. வெள்ளியங்கிரி (60) சார்பில் வழக்கறிஞர்கள் பிரபு மனோகர், டி.வி.கிருஷ்ணமாச்சாரி, ஏ.ஸ்ரீதர் மூர்த்தி ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.

0 comments:

Free Blog CounterLG