'சங்கரா டிவி': சேனல் தொடங்கும் காஞ்சி மடம்
காஞ்சி மடத்தின் சார்பில் புதிய தொலைக்காட்சி தொடங்கப்படவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த தொலைக்காட்சி சேவை தொடங்கப்படுகிறது.சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கித் தவித்து வரும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் துவங்கவுள்ள இந்த டிவியின் பெயர் சங்கரா டி.வி.இதில் இந்து சமயம் குறித்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.காஞ்சி காமக்கோடி பீடம் டிரஸ்ட் சார்பில் தொடங்கப்படும் இந்த டிவிக்கான அலுவலகம், ஊழியர்கள், கருவிகள் எல்லாம் தயாராக உள்ளன.இன்னும் 2 வாரங்களில் லைசென்ஸ் வந்து சேர்ந்துவிடும் எனத் தெரிகிறது இதையடுத்து 20 நாட்களுக்குள் சங்கரா டி.வி தனது ஒளிபரப்பை துவக்கும் என காஞ்சி மட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கோவில்கள், ஆன்மிக நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், பஜனை, கர்நாடக இசை, அதிகாலையில் சுப்ரபாதம் என இந்து மதம் குறித்த நிகழ்ச்சிகள் இதில் இடம் பெறும்.தினமும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இதில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகுமாம்.
Thursday, April 24, 2008
'சங்கரா டிவி': சேனல் தொடங்கும் காஞ்சி மடம்
Posted by
udanadi
at
4/24/2008 05:55:00 PM
Labels: காஞ்சி, சென்னை, தொலைக்காட்சி, மடம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment