Monday, April 28, 2008

தே.மு.தி.க. சார்பில் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்

தே.மு.தி.க. சார்பில் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்

பாராளுமன்ற தேர்தல் குறித்து தே.மு.தி.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மேலிட பார்வையாளர் தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டார்.
ஆலோசனை கூட்டம்
தேசிய முற்போக்கு திரா விட கழகம் சார்பில் பாரா ளுமன்ற தேர்தலுக்கு ஆயத்த மாகும் வகையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் மேலிட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வரு கிறது. இதன்படி ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி தேர் தல் ஆலோசனை கூட்டம் மேலிட பார்வையாளரும், மாவட்ட வக்கீல் அணி துணை செயலாளருமான தட் சிணா மூர்த்தி தலைமையில் நடந்தது.

மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா, மாவட்ட அமைப்பாளர் மணிமாறன், பொருளாளர் அழகுபால கிருஷ்ணன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில மீன வரணி துணை செயலாளர் முருகநாதன் கலந்து கொண் டார். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் முத்து காமாட்சி, நாகூர்கனி, ரவிக் குமார், கைகாட்டி ராஜன், நகர் செயலாளர்கள் ராமேசு வரம் மலைச்சாமி, கீழக்கரை மதிவாணன், பரமக்குடி கருப்பையா, ஒன்றிய செயலா ளர்கள் ராமநாதபுரம் கனி, கமுதி வேல்மயில் முருகன், ஆர்.எஸ்.மங்கலம் கணேசன், பரமக்குடி பூமிநாதன், போக லூர் விஜயகுமார், கடலாடி ரவிநாயகம், திருப்புல்லாணி மேகவர்ணம், திருவாடானை சேக் அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அறிவுரை

கூட்டத்தில் மேலிட பார் வையாளர் தட்சிணா மூர்த்தி பேசியபோது, "தலைவர் விஜயகாந்த் அறிவித்தபடி அனைத்து தொகுதிகளுக்கும் மேலிட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத் தப்பட்டு வருகிறது. மக்கள் மீது நம்பிக்கை வைத்து, யாரு டனும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று விஜய காந்த் அறிவித்துள்ளார். அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற கட்சியினர் பாடு பட வேண்டும்.'' என்றார்.
கூட்டத்தில் கட்சி நிர்வா கிகள் ராஜாமுகமது, முத்தீசு வரன், ஓவியர் சரவணன், கேப்டன் பேரவை இபுராகீம், கோவிந்தராஜ், நிïட்டன், இளைஞரணி ராமராஜ், மாணவரணி முனியசாமி, நாராயண மூர்த்தி, மகளி ரணி ஜான்சிராணி, செல்வி, முத்துக்கனி, தொழிற் சங்க நிர்வாகிகள் பொருள் பொன் னையா, ரஞ்சித்குமார், மூக் கையா, வடிவேல், அப்துல் ஹக்கீம், சண்முகம், நெசவா ளர் அணி நம்பு நாயகம், என்ஜினீயர் செந்தில் செல் வா னந்த், சிவந்தி ஹரிராம், விவசாய அணி முருகன், தொண்டரணி முனியசாமி, செய்தி தொடர்பாளர் மின் னல் கோபி, சிவக்குமார், அபி ராமம் ஆறுமுகம், வர்த்தக அணி நாதன், சாயல்குடி மாணிக்கவேல், முதுகுளத் தூர் இளமாறன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

0 comments:

Free Blog CounterLG