Monday, April 28, 2008

பாரதீய ஜனதா கட்சி தலைவர்ராஜ்நாத்சிங் நாளை பசும்பொன் வருகை

பாரதீய ஜனதா கட்சி தலைவர்ராஜ்நாத்சிங் நாளை பசும்பொன் வருகை தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்

அகிலஇந்திய பாரதீய ஜனதா கட்சியின் தலை வர் ராஜ்நாத்சிங் நாளை பசும்பொன் வரு கிறார். அங்கு தேவர் நினை விடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

நூற்றாண்டு விழா
தேசிய தலைவர்களில் ஒரு வரும், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவரும், ஆன்மிகவாதி யுமான பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் நூற் றாண்டு விழாவில் கலந்து கொள்ள அகில இந்திய பார தீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் நாளை (29-ந்தேதி) டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரைக்குவருகிறார்.பின்னர்அங்கிருந்து திருப்புவனம் வழியாக பசும்பொன் செல்கிறார். அவருக்கு திருப்புவனத்தில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை மாநிலதுணைத்தலைவர் எச்.ராஜா, மாவட்ட தலைவர் சபேசன், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேந்திரன், மாநில பார்வையாளர் வக்கீல் சொக்கலிங்கம், மாவட்ட பொதுச்செயலாளர் குருநாக ராஜன், மாவட்ட அமைப்பு செயலாளர் பால.ரவிராஜன், திருப்புவனம் ஒன்றிய தலைவர் பொன்முருகன், ஒன்றிய செய லாளர் மலையேந்திரன், ஒன் றிய அமைப்பாளர் சண்முக நாதன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
பாரதீய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் எம்.பி.யுடன் மாநில தலைவர் இல.கணேசன், அகில இந்திய செயலாளர் திருநாவுக்கரசு, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பின ருமான சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் வீரணசாமி ஆகியோர் உடன் சென்று தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர். மேற்கண்ட தகவலை பாரதீய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

0 comments:

Free Blog CounterLG