Monday, April 28, 2008

சரப்ஜித்தை தூக்கிலிடக்கூடாது - நவாஸ் சரீப்


இந்தியாவைச்சார்ந்த சரப்ஜித் சிங் தூக்குத்தண்டனை கைதியாக பாக்கிஸ்தானில் உள்ளார். தூக்கிலடப்படுவதற்கான காலக்கெடு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் சரீப் இதுபற்றி கூறுகையில் சரப்ஜித் சிங்கை தூக்கிலடக்கூடாது. அவரை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும். விடுதலை செய்தப்பிறகு அவர் குற்றவாளி என்பது ஊர்ஜிதமானால் அவரை இந்தியா திருப்பித் அனுப்பவேண்டும் என்று கூறியுள்ளார்.

இது பற்றி கருத்து தெரிவிக்கையில், மனித உரிமைகளுக்கான அமைச்சர் அன்சர் புருனே, சரப்ஜித் சிங்கின் விடுதலைக்கு நவாஸ் சரீப்பின் பேச்சு நல்ல முன்னேற்றமும் நம்பிக்கையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

0 comments:

Free Blog CounterLG