Monday, April 28, 2008

"வாழ்வின் உயரத்தை எட்டிப் பிடிப்போரின் ஏணிப் படிகள் புத்தகங்கள்': கவிஞர் தமிழச்சி

"வாழ்வின் உயரத்தை எட்டிப் பிடிப்போரின் ஏணிப் படிகள் புத்தகங்கள்': கவிஞர் தமிழச்சி

புத்தகங்கள் காலத்தின் இடைவெளியை நிரப்பும் பாலம். வாழ்வின் உயரங்களை எட்டிப்பிடித்த பலருக்கும் ஏணிப்படிகளாக புத்தகங்கள் இருந்துள்ளன என்று கவிஞர் தமிழச்சி பாண்டியன் கூறினார்.
உலக புத்தக தினத்தையொட்டி யுரேகா புக்ஸ், வளரும் வந்தவாசி மற்றும் யுரேகா கல்வி இயக்கம் ஆகியன இணைந்து வந்தவநாசியில் சனிக்கிழமை புத்தகக் கலைவிழா நடத்தின.

வளரும் வந்தவாசி தலைவர் அ.ஜ. இஷாக் தலைமை வகித்தார். வட்டாட்சியர் ந. கருணாமூர்த்தி, திருவள்ளுவர் பொறியியல் கல்லூரி துணைத் தலைவர் அ. கணேஷ்குமார், நகராட்சித் தலைவர் க. சீனுவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

யுரேகா கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு. முருகேஷ் வரவேற்றார்.

விழாவில் பங்கேற்ற தமிழச்சி பாண்டியன், "சில புத்தகங்கள் வாழ்வை கண்ணாடி போல் நமக்கு படம் பிடித்து காட்டுபவை' என்றார்.
திரைப்பட இயக்குனர்கள் சீமான், கரு. பழனியப்பன், கவிஞர் நந்தலாலா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். யுரேகா கல்வி உதவித் தொகை திட்ட துணைத் தலைவர் அ. வெண்ணிலா நன்றி தெரிவித்தார்.

0 comments:

Free Blog CounterLG