Monday, April 28, 2008

பி.எஸ்.எல்.வி சி9 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

பி.எஸ்.எல்.வி } சி9 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.

இன்று காலை 9.23 மணியளவில் பத்து செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.}சி9 என்ற ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக் கோள்களை பூமியில் இருந்து புறப்பட்ட 16வது நிமிடத்தில் பிஸ்எல்வி விண்ணில் செலுத்தும்.

இந்த 10 செயற்கைக் கோள்களில் 2 இந்திய செயற்கைக் கோள்கள் மற்றும் 8 வெளிநாட்டு நானோ செயற்கைக் கோள்கள் ஆகும். ஒரே நேரத்தில் 10 செயற்கைக் கோள்களை அனுப்பியது சாதனையாக கருதப்படுகிறது.
இந்த செயற்கைக் கோள்களின் மொத்த எடை 824.5 கிலோவாகும். இதற்கு முன்னர் ரஷ்யா 300 கிலோ எடை கொண்ட 16 செயற்கைக் கோள்களை சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவியது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாதான் 10 செயற்கைக் கோள்களை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Free Blog CounterLG