Monday, April 28, 2008

சந்தனக் கூடில் தகராறு: பாமக நிர்வாகி கைது

சந்தனக் கூடில் தகராறு: பாமக நிர்வாகி கைது

எலவனாசூர்கோட்டையில் சந்தனக்கூடு நிகழ்ச்சியில் பாமக-திமுக பிரமுகர்களுக்கு இடையே சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் பாமக நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். திமுக பிரமுகர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எலவனாசூர்கோட்டையில் உள்ள மசூதி ஒன்றில் சந்தனக்கூடு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மாறுவேடப் போட்டியும் நடைபெற்றது.

இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாûஸ கொச்சைப்படுத்தும் விதத்தில் சிலர் பேசியதாக கூறி பாமகவினர் அந்த இடத்தில் ரகளை செய்தனர்.
இவர்களுக்கு எதிர்ப்பாக திமுகவினர் பிரச்னையில் ஈடுபட்டனர். இந்த பிரச்னையில் அந் நிகழ்ச்சி நடந்த இடத்தில் 4 டியூப் லைட்டுகள் உடைக்கப்பட்டன.

தெருவோரக் கடைகள் சிலவும் அடித்து நொறுக்கபப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாமக மாவட்ட துணைச் செயலர் ஜெகன் (எ) ஜெகநாதன், சுரேஷ் ஆகிய இருவரை போலீஸôர் கைது செய்தனர். பாமகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திமுக பிரமுகர்கள் சம்சத், அப்துல்ரஹீம் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

0 comments:

Free Blog CounterLG