Wednesday, April 30, 2008

பாசுமதி அரிசிக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு.

நம் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பாசுமதி அரிசிக்கு வரி விதிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.ஒரு டன் அரிசியை ஏற்றுமதி செய்ய இனி நூறு டாலர் வரி கட்ட வேண்டும்.

இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது கருத்தப்படுகிறது

மத்திய அரசு, பாசுமதி அல்லாத அரிசி ரகங்களை ஏற்றுமதி செய்யவும், பருப்புக்களை ஏற்றுமதி செய்யவும் ஏற்கனவே தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Free Blog CounterLG