Wednesday, April 30, 2008

`ஏர்கண்டிஷன்' மிஷினில் தீ - நடிகை நமீதா இரவு முழுவதும் தூங்காமல் அவதி

நடிகை நமீதா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஆடம்பர பங்களாவில், வாடகைக்கு குடியிருந்து வருகிறார். அந்த வீட்டில் நமீதாவும், வேலைக்காரர்களும் மட்டுமே வசித்து வருகிறார்கள். நமீதாவின் தாய்-தந்தை மற்றும் உறவினர்கள், சொந்த ஊரான குஜராத்தில் வசிக்கிறார்கள்.

நமீதா தனது பாதுகாப்புக்காக, ராட்சத உயரத்தில் மூன்று வெளிநாட்டு நாய்களை வளர்க்கிறார். இவை தவிர, வீட்டு வாசலில் கூர்க்காவும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பார்.

நமீதா, காலையில் படப்பிடிப்புக்கு சென்றால், மாலையில்தான் வீடு திரும்புவார். அவர் இப்போது, `இந்திர விழா' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படப்பிடிப்பு முடிந்து, இரவு 8 மணி அளவில் வீடு திரும்பிய நமீதா, படுக்கை அறையில் உள்ள `ஏர்கண்டிஷன்' மிஷினை `ஆன்' செய்தார். சீராக ஓடிக்கொண்டிருந்த `ஏர்கண்டிஷன்' மிஷினில், திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது. படுக்கை அறை முழுவதும் ஒரே புகையாக இருந்தது.நமீதா, ``தீ...தீ...'' என்று அலற ஆரம்பித்தார். வேலைக்காரர்கள் ஓடிவந்து, மின்சார இணைப்பை முதலில் துண்டித்தார்கள்.

பின்னர் ஏர்கண்டிஷன் மிஷின் மீது தண்ணீரை கொட்டி, தீயை அணைத்தார்கள். அதிர்ஷ்டவசமாக, ஒரு பெரும் தீ விபத்தில் இருந்து நமீதா தப்பினார்

'ஏர்கண்டிஷன்' இல்லாததால், நமீதாவினால் தூங்க முடியவில்லை. இரவு முழுவதும் தூங்காமல் அவதிப்பட்டதாக, அவர் கூறினார்.

(நன்றி-தினத்தந்தி)

http://www.dailythanthi.com/article.asp?NewsID=409791&disdate=4/30/2008

0 comments:

Free Blog CounterLG