Sunday, April 27, 2008

நயன்தாரா குமுறல்


சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நட்சத்திர தூதுவராக விஜய் மற்றும் நயன்தாரா நியமிக்கப்பட்டிருந்தனர்.

சென்னையில் நடைபெற்ற கிரிக்கெட் துவக்கவிழாவில் விஜய் மட்டும் கலந்துகொண்டார். நயன்தாரா கலந்துகொள்ளவில்லை. இதனால் வருத்தமுற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகள்அவரை நட்சத்திர தூதுவர் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறது.

இதுபற்றி நயன்தாரா கூறும்பொழுது, அனைத்துப்போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டுமென்று ஒப்பந்தம் செய்யவில்லை, 7 போட்டிகளில் மூன்றில் மட்டும் கலந்து கொண்டால் போதும் என்று தான் சொன்னார்கள்.

போட்டி நடைபெற்ற அதே நேரம் உடல் நலக்குறைவு காரணமாக மயங்கி கீழே விழுந்து விட்டேன், ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அதனால் சென்னையில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொள்ள இயலவில்லை. அதே சமயம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போட்டி எத்தனை மணிக்கு என்று கேட்டேன். 8 மணிக்கு என்று சொன்னார்கள். போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு நான் வரவேண்டுமா என்று கேட்டேன். இப்பொழுது வேண்டாம் மற்ற போட்டிகளில் கலந்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.

இப்படியிருக்க என்னுடைய மானேஜருக்கு கூட தெரிவிக்காமல் என்னை தூதுவர் பதிவியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள்.

நான் உடல் நலக்குறைவுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படதற்கான ஆவனங்கள், மருத்துவர்களின் சான்றுகள் என்னிடம் உள்ளன, இந்த நீக்கலுக்கு பின்னனி உள்ளது என்று காட்டமாக அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Free Blog CounterLG