Sunday, April 27, 2008

24 ஆண்டுகள் தந்தையுடன் குடும்பம், 7 குழந்தைகள்

ஆஸ்திரியா நாட்டில் 24 ஆண்டுகள் வீட்டின் கீழ்பகுதியில் பூட்டி வைக்கப்பட்டு தனது மகள் எலிசபத் (வயது 42) உடன் உடலுறவு கொண்டு துன்புறுத்தினார் தந்தை ஜோசப் (வயது 73).

இவர் 11 வயதிறுக்கும் போது கைகளை கட்டி வீட்டின் பேஸ்மன்டில் அடைக்கப்பட்டார். கடந்த 24 ஆண்டுகளில் 7 குழந்தைகளை பெற்ற அவர், அதில் இரட்டை குழந்தைகளில் ஒன்று பிரசவ கோளாறு காரணமாக இறந்தது. ஐந்திலிருந்து இருபது வயதுகளில் மற்ற ஆறு குழந்தைகளில் மூவர் பெண் குழந்தைகள், மூவர் ஆண்மக்கள். இதில் மூன்று பேர் முன்பு அவரிடமிருந்து தப்பித்து விட்டனர். மற்ற மூவரும் தாயுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்குத் தேவையான உணவும், உடைகளும் மட்டும் கொடுத்து வந்தார்.

மூத்த பெண் 19 வயது உடையவருக்கு கடும் உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். அதில் சந்தேகத்தின் பேரில் தாய் பற்றி விசாரிக்கையில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

இதுபற்றிய செய்தி அறிந்ததும் ஆஸ்திரிய மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

0 comments:

Free Blog CounterLG