Sunday, April 27, 2008

தலிபான் தாக்குதல்: கர்சாய் உயிர் தப்பினார்


16 ஆண்டுகளுக்குமுன் ஆப்கானிலிருந்து முஜாகித்களால் ரஷ்யப்படைகள் விரட்டப்பட்டதின் நினைவுதினத்தையொட்டி இராணுவ அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த அணிவகுப்பில் ஆப்கான் ஜனாதிபதி கர்சாய், அமெரிக்க, ஐக்கிய இராஜ்ஜிய தூதுவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்பொழுது மறைந்திருந்த ஆப்கான் தீவிரவாதிகள் தேசிய கீதம் பாடும் பொழுது துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரண்டு பாராளுமன்ற உறுப்பனர்களுக்கு காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்ட வசமாக காயங்களின்றி கர்சாய் உயிர் தப்பினார்.

இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். இந்த தாக்குதலில் ஆறு பேர் பங்கு பெற்றதாகவும் அதில் மூன்றுபேர் உயிரிழந்ததாகவும், மூன்று பேர் தப்பித்ததாகவுகம் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Free Blog CounterLG