Sunday, April 27, 2008

இரானுவ முகாம்கள் மீது புலிகள் வான்வெளித்தாக்குதல்


இலங்கையில் கடந்த ஒருவாரமாக நடைபெற்றுவரும் போரில் இலங்கை இரானுவத்திற்கு கடும் உயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 26 பேர் கொள்ளப்பட்டதற்கு சந்தேகத்தின் பேரில் 9 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.

மணலாறு (வெளியோலா) பகுதியில் இலங்கை இரானுவம் நேற்று இரவு வான்வெளித்தாக்குதல் நடாத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விடுதலைப்புலிகளின் இரண்டு இலகு ரக வானூர்திகள் இரானுவ முகாம்கள் மீது மூன்று குண்டுகள் வீசினர். இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை.

கொழும்பு பேருந்து குண்டு வெடிப்பைத் தொடர்ந்து மேலும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடைபெறலாம் என இரானுவம் மக்களை எச்சரித்துள்ளது.

இலங்கை இரானுவத்திற்கெதிரான விடுதலைப்புலிகளின் ஐந்தாவது வான்வெளித்தாக்குதல் இது என்பது குறிப்படத்தக்கது.

கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் போர் 1996 க்குப்பின் அதிக உயிரிழப்புகள் கொண்டதாக ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

0 comments:

Free Blog CounterLG