Saturday, April 12, 2008

பாட்டியை கொன்ற பேரன்

கோலாபூர், ஏப். 11: ஆபாச சிடி பார்க்க அனுமதி அளிக்க பாட்டி மறுத்ததால் அவரது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்துள்ளனர்.மகராஷ்டிர மாநிலம் கோலாபூரைச் சேர்ந்தவன் அபிஷேக் படேல். 21 வயதாகும் இவன் இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டம் படித்து வருகிறான்.

சமீபத்தில் இவனது பாட்டி சாந்தாபாய் (வயது 67) அபிஷேக் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் அபிஷேக் ஆபாச சிடியில் படம் பார்க்க அனுமதி மறுத்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக் பாட்டியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளான். மேலும் தனது தம்பி வீரேன்னையும் தாக்கிவிட்டு, வீட்டிற்குள் நுழைந்த மர்ம மனிதன் தம்பியை தாக்கிவிட்டு பாட்டியை கொலை செய்து விட்டதாக நாடகமாடியுள்ளான்.

அபிஷேக்கின் பேச்சில் சந்தேகம் கொண்ட போலீசார் அவனிடம் துருவித் துருவி விசாரணை நடத்தியதில் உண்மை தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அபிஷேக்கை கைது செய்து அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

Free Blog CounterLG