Saturday, April 12, 2008

நேபாளத்தில் மசூதி மீது குண்டு வீச்சு: தொழுகைக்கு வந்த 2 பேர் பலி

நேபாளத்தில் மசூதி மீதி குண்டு வீசப்பட்டது. இதில் 2 பேர் பலியானார்கள். பதட்ட நிலை காரணமாக சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து தென் கிழக்கே 125 மைல் தொலைவில் உள்ளது பிரசாத் நகர். பிரதமர் கிரிஜா பிரசாத் கெய்ராலாவின் சொந்த ஊர் இது.

பல்வேறு மதத்தினரும் பல்வேறு இனத்தவர்களும் வெளிநாட்டவர்களும் இங்கு வசிக்கிறார்கள்.மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் கூட இங்கு இல்லை. இந்த நிலையில் இங்குள்ள மசூதி அருகே 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் மசூதி மீது வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் மசூதியில் தொழுகை நடத்தி விட்டு வந்தவர்களில் 2 பேர் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர்.இந்த தாக்குதலை தொடர்ந்து பிரசாத் நகரில் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. பதட்ட நிலை காரணமாக இந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. இந்த பகுதி இந்தியாவில் எல்லை பகுதியை ஒட்டியுள்ளது

0 comments:

Free Blog CounterLG