Saturday, April 12, 2008

சென்னையில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை

சென்னை 11 April , சென்னை அயனாவரத்தில் காவல்துறையினரை தாக்‌கிய இரண்டு ரவுடிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஜெயக்குமார் மற்றும் சுடலை என்ற இரு ரவுடிகள், சென்னை அயனாவரம் கிராமணி தெருவில் பதுங்கியிருந்ததாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்த முற்பட்டபோது, அவர்கள் மீது ரவுடிகள் இருவரும் அரிவாளால் தாக்கியுள்ளனர். மேலும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் எச்சரிக்கும் வகையில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இருவரும் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு காவல்துறை உயரதிகாரிகள் விரைந்து செ‌ன்று ஆய்வு மேற்கொண்டனர். சென்னை நகரில் பகல் நேரத்தில் நடந்துள்ள இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Free Blog CounterLG