Saturday, April 12, 2008

கோலாலம்பூர் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு நாணயமாற்றுக்காரர்களின் 1.5 மில்லியன் வெள்ளி பணத்தை அபகரித்துச் சென்றதையடுத்து அங்கு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.ஆயுதம் ஏந்திய போலிசார் அங்கு 24 மணி நேரமும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக போலிஸ் படைத் தலைவர் மூசா ஹசான் கூறினார்.கோலாலம்பூர் விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கவே இந்த ஏற்பாடுகள் என்று அவர் கூறியதாக நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் தகவல் கூறியது.பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விமான நிலையத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியமிருப்பதாக மலேசிய துணைப் பிரதமர் நஜீப் கூறினார்.

இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்பு கோலாலம்பூரிலிருந்து டாக்கா புறப்பட்ட ஒரு விமானத்தில் பங்ளாதேஷ் ஊழியர் ஒருவர் கத்தியுடன் ஏறியதைக் கவனிக்கத் தவறியது தொடர்பில் விமான நிலைய ஊழியர்கள் 3 பேர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் ஓங் டீ கியட் கூறினார்.

0 comments:

Free Blog CounterLG