Saturday, April 12, 2008

கான்பூர் டெஸ்ட்: இந்தியா-288/9

தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் நடந்து வரும் 3வது டெஸ்ட் போட்டியின், 2ம் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 288 ரன் எடுத்துள்ளது. கங்குலி 87 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இன்றைய 2ம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் 2 துவக்க வீரர்களின் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், நடுக்கள ஆட்டக்காரர்களின் பங்களிப்பால், தென்ஆப்ரிக்கா எடுத்த 265 ரன்களை இந்திய அணி இன்று கடந்தது.

இன்றைய ஆட்டத்தில் இக்கட்டான நிலையில் களமிறங்கிய சவுரவ் கங்குலி, தனது 33வது டெஸ்ட் அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அவரது பொறுப்பாக ஆட்டத்தால், இந்திய அணியின் ரன் எண்ணிக்கை உயர்ந்தது. எனினும் 87 ரன் எடுத்த நிலையில் ஸ்டெய்ன் பந்தில் அவர் ஆட்டமிழந்தார்.

லட்சுமண் 50 ரன், யுவராஜ், கேப்டன் தோனி தலா 32 ரன், டிராவிட் 29 ரன் எடுத்தனர். இன்றைய ஆட்டம் முடிவில் இந்திய அணி, தென்ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் எடுத்த 265 ரன்களை விட 23 ரன் முன்னிலை பெற்றுள்ளது. ஸ்ரீசாந்த் 9 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

தென்ஆப்ரிக்கா தரப்பில் ஸ்டெய்ன், மோர்கல் தலா 3 விக்கெட், ஹாரிஸ் 2 விக்கெட், நிடினி ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்களை இழந்துள்ளதால், நாளைய 3ம் நாள் ஆட்டத்தில் விரைவில் ஆட்டமிழக்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில், இப்போட்டியில் இன்னும் 3 நாள் மீதமுள்ளதால் நிச்சயமாக முடிவு தெரியும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

0 comments:

Free Blog CounterLG