Saturday, April 12, 2008

எகிப்தில் வேகமாக வளரும் ஐ.டி. துறை

எகிப்து நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும், அந்நாட்டில் ஐ.டி. குறித்த விழிப்புணர்வு மேம்பட்டு வருவதால், இந்திய நிறுவனங்கள் தங்கள் கிளைகளை அங்கு நிறுவி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.இந்திய நிறுவனங்களுக்கு தாங்கள் கூடுதல் சலுகைகளை அளித்து வருவதாகவும், அவற்றுக்குத் தேவையான உலகளாவிய வசதிகளை அமைத்து எகிப்தில் தங்கள் அலுவலகங்களை அமைக்க உதவி வருவதாகவும் அந்நாட்டு தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவன வாரிய உறுப்பினர் அமின் கைரால்டின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவும், எகிப்தும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒருமித்த வகையில் செயல்படுவதாகவும், இதனால் ஐ.டி. துறையில் பல்வேறு வளர்ச்சியைப் பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் எகிப்தில் தகவல்-தொழில்நுட்பத் துறை சிறப்பான வகையில் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், இந்திய நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்

0 comments:

Free Blog CounterLG