Saturday, April 12, 2008

ஆந்திரா, கர்நாடகாவிலும் அரிசி கிலோ 2 ரூபாய்

உலகில் அரிசி இருப்பு குறைகிறது; இன்னும் மூன்று மாதங்களில் பஞ்சம் வரும் ஆபத்து இருக்கிறது என்று ஐநா அமைப்பு அபாய சங்கு ஊதி இருக்கிறது என்ற போதிலும் இந்தியாவில் இரண்டு ருபாய்க்கு கிலோ அரிசி திட்டம் மேலும் இரண்டு மாநிலங்களில் அமலாகிறது. தமிழ்நாட்டில் 2006 சட்ட மன்றத் தேர்தலின்போது, திமுக அறிவித்த இரண்டு ரூபாய் அரிசித் திட்டத்தை அந்தக் கட்சியின் கொள்கைக் கூட்டணி பங்காளியான காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநிலத்தின் தேர்தல் அறிக்கையாக அறிவித்துள்ளது.

அதோடு திமுகவைப் போலவே இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகளை வழங்கப் போவதாகவும் கர்நாடகக் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

கர்நாடகத்தில் மே மாதம் மூன்று கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.இதில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.கர்நாடகம் இப்படி எனில் காங்கிரஸ் ஆட்சி புரியும் பக்கத்து ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்தை மாநிலத்தின் முதல்வர் புதன் கிழமையன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் திமுக அறிவித்த இரண்டு ரூபாய் அரிசி உள்ளிட்ட பல இலவசத் திட்டங்கள் காரணமாக அந்தக் கட்சி வெற்றிபெற்றதை அடுத்து இப்போது இந்தியாவில் அரிசி அரசியல் முக்கிய இடத்தைப் பெற்றுவருகிறது.

உலகில் அரிசி உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. அண்மையில் இந்தியா அரிசி ஏற்றுமதிக்குத் தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது

0 comments:

Free Blog CounterLG