Saturday, April 12, 2008

ரவுடிகள் உடல் தூத்துக்குடியில் அடக்கம்

சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு ரவுடிகளின் உடல்கள், அவர்களின் சொந்த ஊரான தூத்துக்குடியில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

அயனாவரத்தில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட ஜெயக்குமார் மற்றும் சுடலைமணியின் உடல்கள், உடற்கூறு ஆய்வுக்குப் பின் சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் இன்று பகல் தூத்துக்குடிக்கு எடுத்து வரப்பட்டது.

ஜெயக்குமாரின் உடலை அவரது மனைவி பிரிஸில்லா பெற்றுக் கொண்டார். இதன் பின்னர் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, அவரது உடல் தூத்துக்குடி கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இதேபோல் சுடலை மணியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி அஞ்சலிக்குப் பின் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிகிறது.

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஜெயக்குமார் மற்றும் சுடலை ஆகியோர் சென்னை அயனாவரம் கிராமணி தெருவில் பதுங்கியிருந்தனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினரை இரு ரவுடிகளும் தாக்க முயறனர். இதையடுத்து என்கவுண்டரில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Free Blog CounterLG