Saturday, April 12, 2008

தற்கொலைப் படை தாக்குதலில் 2 இந்தியர்கள் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானி்ல் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் இந்தியர்கள் இருவர் பலியாயினர்.

ஆப்கானி்ஸ்தானில் செராஞ் என்ற இடத்திலிருந்து பாகி்ஸ்தான் எல்லையான டெலாராம் வரை 300 கி.மீ. நீள நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் இந்திய பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன் அமைப்பு ஈடுபட்டுள்ளது.

இந்தப் பணியில் இந்தியத் தொழிலாளர்கள் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று ஆப்கானி்ஸ்தான் தென் பகுதியில் உள்ள நிம்ரோஸ் என்ற இடத்தில் இந்திய தொழிலாளர்கள் பயணம் செய்த வாகனத்தின் மீது குண்டுகள் நிரப்பப்பட்ட டயோடா கரோலா கார் மோதி வெடித்துச் சிதறியது. இதில் காரை ஓட்டி வந்த தற்கொலைப் படை தீவிரவாதியும், இந்தியத் தொழிலாளர்கள் இருவரும், மேலும் ஆப்கானியர் ஒருவரும் பலியாயினர்.மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

0 comments:

Free Blog CounterLG