Tuesday, April 15, 2008

ராகுல் பிரதமரானால் மகிழ்ச்சி:கருணாநிதி

ராகுல் காந்தி பிரதமாராக தேர்ந்தெடுக்கப்படுமானால் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்
சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவரிடம், பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி பொருத்தமானவர் என்று மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் சிங் மற்றும் பிரஃபுல் படேல் ஆகியோர் சொல்லியிருப்பது குறித்து கேட்டபோது, 'தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சி' என்றார்.

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு பிரச்சனையில் 'கிரீமி லேயர் குறித்து அவர் கூறுகையில், அதுபற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று பிரதமருக்கு தாம் கடிதம் எழுதியிருப்பதாகவும், வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் இது குறித்து விரிவாக பேசவுள்ளதாகவும் தெரிவித்தார்.

0 comments:

Free Blog CounterLG