Tuesday, April 15, 2008

லால்பேட்டை பேரூராட்சி துணை தலைவர் மீது தாக்குதல் போலீசார் விசாரணை.

காட்டுமன்னார் கோவில்,ஏப்.15-லால்பேட்டை பேரூராட்சி துணை தலைவரை தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர மாவட்டம் லால்பேட்டை மெயின்ரோட்டு தெருவில் வசித்து வருபவர் ஹாஜா முகைதீன்(வயது 43).இவர் லால்பேட்டை பேரூராட்சிமன்ற துணை தலைவராக இருந்து வருகிறார்.சம்பவத்தன்று இவர் பேரூராட்சிக்கு சொந்தமான கொல்லி மலை கீழ்பாதி பகுதியில் உள்ள இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்வார்கள் என்று அதனை பாதுகாக்க கொட்டகை அமைக்க சென்றார்.இதனை அறிந்த லால்பேட்டை அப்துல் மஜித் மகன் ஜபருல்லா ,ஹாஜா முகைதீனிடம், நீ எப்படி அதில் கொட்டகை போடலாம் என்று தட்டிக்கேட்டார்.இதில் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற் பட்டது.உடன் அருகில் இருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டனர். அதையடுத்து 2 பேரும் கலைந்து சென்று விட்டனர்.பின்னர் அன்று இரவு லால்பேட்டை பஜார் தெருவில் ஹாஜாமுகைதீன் பேசிக் கொண்டிருந்தார்.அப் போது அங்குவந்த ஜபருல்லா, ஹாஜா முகைதீனிடம் தகராறு செய்து அவரை தாக்கினார்.இது பற்றி ஹாஜா முகைதீன் காட்டு மன் னார் கோவில் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

0 comments:

Free Blog CounterLG