Tuesday, April 15, 2008

பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சி கருணாநிதி பேட்டி.

சென்னை, ஏப்.15- ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சி என்று கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

ராகுல் பிரதமரானால்

கேள்வி:- மத்திய மந்திரிகள் அர்ஜுன் சிங், பிரபுல் படேல் ஆகியோர் ராகுல் காந்தி, பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் என்று சொல்லியிருக்கிறார்களே?

பதில்:- தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சி.

உயர்நிலை கூட்டம்


கேள்வி:- பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு பிரச்சினையில் கிரீமி லேயர் பற்றி?

பதில்:- அதுபற்றி மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.

கேள்வி:- உங்கள் கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தை 18-ம் தேதி கூட்டியிருக்கிறீர்களே, என்ன பேசப் போகிறீர்கள்?

பதில்:- இப்போதே அதைச் சொல்லிவிட்டால் பிறகு எதற்காக 18-ம் தேதி கூட்டம்? இட ஒதுக்கீடு பிரச்சினை குறித்து விரிவாக கலந்து பேசுவோம்.

கெட்டுப்போன தண்ணீர்

கேள்வி:- டைம்ஸ் ஆப் இந்தியா - சென்னை புதிய பதிப்பில் கெட்டுப் போன தண்ணீரை பாக்கெட்டில் விற்பது பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறதே?

பதில்:- அதைப்பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இதழில் வந்தவாறு நடந்திருந்தால் அது தவறு.

இவ்வாறு கருணாநிதி பதில் அளித்தார்.

0 comments:

Free Blog CounterLG